செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

அகத்திய பக்தன் - கேள்வி பதில்

 

சிவனின் சிரசில் உள்ள மூன்றாம் பிறை எதைக் குறிக்கிறது ஐயா?

நீங்கள் விரும்பிய பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

1) மதி என்ற மனம், அதாவது வெளி மனத்தை குறைத்து விட்டால், உயிர் தரிசனம் அதாவது சப்கான்சியஸ் மைண்டை உணரலாம்.


2)  ஆரம்பத்தில் ஒரு யோகி இடகலை வழியாக ஆக்கினை சக்கரம் வரை ஏறி,  உயிர் தரிசனம் கண்ட பிறகு,  இடகலை என்ற மதியை குறைத்து அதற்கு மேலே  சூரிய மத்தி மற்றும் சூனிய பிரம்மத்திற்கு பின்கலை வழியே ஏறுவார்.


3)  மதி என்பது வெப்ப அணுக்கள் அல்லது அறிவு அணுக்கள் அல்லது எதிர்மறை அணுக்கள் என்று கூறப்படுகிறது. இந்த மதியே எண்ண பதிவுகளுக்கு காரணமாகிறது. இந்த மதியை குறைக்கும் பொழுது, அதாவது துறக்கும் பொழுது உள்ளொளி பெருகும்.


4)  மதி என்பது இடகலை அல்லது உகாரம் அல்லது இயங்கும் தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த மதியை குறைத்து விட்டால்  அகரம் என்ற அமுது கிடைக்கும். மகாரம் என்ற இயங்கா தன்மையும் சித்திக்கும்.


5) Changing the number of electrons will change the overall charge on an atom. An atom that loses electrons will become positively charged.

மதி= electrons.


இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.


1 apr 2024.

டிவி பார்த்துக் கொண்டோ மொபைல் பார்த்துக் கொண்டோ உணவு உண்ணும் பொழுது அந்த உணவோடு மிக எளிதாக மாயாவும் சேர்ந்து உள்ளே சென்று விடும். உணவும் சரியாக செரிக்காது. ஆனால் மாயா உள்ளே சென்று சுலபமாக அமர்ந்து விடும். மாயாவை விரட்டுவது கடினமான காரியம் ஆகிவிடும். தன்னைச்  சூழ்ந்து இருப்பவரோடு அன்பு பாராட்டி பகிர்ந்து உண்ணும் பொழுது அன்பு எனும் ஆற்றலும் உள்ளே உணவு வழியாக சென்று விடும். கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதம் நூலின்படி நமது மூலையில் உள் மூளையில் பத்து வட்ட அணுக்கள் உள்ளன. இதில் முதல் வட்டம் மாயாவுக்குரியது. இரண்டாவது வட்டம் கர்மாவுக்குரியது. மூன்றாவது வட்டம் ஆணவத்துக்குரியது, இதுவே அன்புக்கும் உரியது. மூன்றாவது வட்டமே அன்புக்கும் உரியது. அதாவது இந்த உலகியல் மக்களோடு சேர்ந்த அன்பு .இங்கு சிறைப்பட்ட அன்பு அணுக்கள் வெகு எளிதாக பிரிக்கப்படும். அதே சமயத்தில் ஆணவமும் நீக்கப்பட்டு விடும்.


நன்றி எனும் உணர்வின் ஆரம்பமும் அன்புதான், முடிவும் அன்பு தான். இந்த அன்பை ஒரு கனிமமாகச் சொல்லும் பொழுது, முருகப்பெருமான் அதை பாதரச ஆற்றல் என்று கூறுகிறார். ஒரு நாளின் பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து 15 நாளிகைகளுக்கு பாதரச ஆற்றலை கிடைக்கிறது. இதில் முதல் ஐந்து நாழிகையில் கிடைப்பது உயர்ந்த பாதரச ஆற்றல்.

முருகப்பெருமானின் கலியுக வேத நூலான "ஒளி" என்னும் நூலில் இது விளக்கப்பட்டுள்ளது.




அலுவலகப் பணியில் இருக்கும் எனக்கு இடைப்பட்ட நேரத்தில் இதை எழுதுகிறேன். அலைபேசி எடுக்க எனக்கு நேரமில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.


 எனினும் தினசரி குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது மனம் உருகிய பிரார்த்தனை செய்பவருக்கு மட்டும், வாரத்தின் கடைசியில் ஞாயிற்றுக்கிழமை,  சந்தேகங்கள் இருப்பின்  வாட்ஸ் அப்பில் பேச முயற்சிக்கிறேன்.  உங்களுக்கு தனிப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான ஒரே தீர்வு, குருநாதர் அளித்த "ஒரு வரி" ஞானம் மட்டுமே. எனக்கு குரு நாதர் கொடுத்த சர்வரோக நிவாரணி அல்லது சஞ்சீவி மூலிகை இந்த "ஒரு வரி" ஞானமே.

🙏🙏🙏


அடியே நான் எடுத்து வைத்த குறிப்புகளை கீழ்கண்ட ஸ்கிரீன்ஷாட்டில் பார்க்கலாம்.


 இதை முழுமையாக புரிந்து கொள்ள நீங்கள் ஒளி நூல் மற்றும் பிரம்மம் நூலையும் படிக்க வேண்டும்.


 இதில் எட்டு மணிக்கு மேல் நமது ரத்தத்தில் உள்ள நச்சு பொருள்களை நீக்க முயற்சி செய்வதால் அதாவது பாதரச ஆற்றல் நச்சுக்களை நீக்க முயற்சி செய்வதால், அந்த நேரத்தில் ஜனார்தனன் அய்யா கூறியது போல தீய எண்ணங்கள் வெளியே வரலாம், அதை பற்றி கவலை இல்லை.  மனம் உருகிய வழிபாடுகளை செய்ய செய்ய சரியாகிவிடும். 👍


3-apr-2024


குருநாதர் அருளால் அடியேன்  ஒரு ஞான விஷயத்தை இன்று சொல்லுகிறேன்.


* ஐந்தாம் இட்லி சூட்சுமம்*

 மனம் உருகிய பக்தியே முதல் படி.  பின்னர் மாய கர்மா ஆணவத்தை நீக்கும் பயிற்சிகள்.

 பின்னர் உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்வது.

முதல் படி ஏறாமல்  மேற்கொண்டு ஏறுவது சிரமம்தான்.


இன்றைக்கு வாசியோகம் / யோகா பாதையில் இருப்போர், மற்றும் யோகம் பழக விரும்புவோர் உடனடியாகவும் நேரடியாகவும், வெறும் யோக நுணுக்கங்களை மட்டும் கேட்டோ படித்தோ வெற்றி பெற விரும்புகிறார்கள். இது எனக்கு சிறிது நகைச்சுவையாக உள்ளது. பசியோடு இருக்கும் ஒருவன் முதலில் ஒரு இட்லி சாப்பிடுகிறான். பின்பு இரண்டாம் இட்லி, மூன்றாம் இட்லி, நான்காம் இட்லி... ஐந்தாம் இட்லி சாப்பிட்டபின் அவன் பசி அடங்கிவிட்டது. இதைப் பார்த்த ஒரு புத்திசாலி தன் மனதில் "அப்படியானால், அந்த கடைசி ஐந்தாம் இட்லியில் தான் பசியடங்கும் சூட்சமம் உள்ளது, எனவே முதல் நான்கு இட்லியை உதாசீனம் செய்துவிட்டு, நேரடியாக “ஐந்தாம் இட்லியை மட்டும் சாப்பிட்டால் போதும்", என்ற முடிவுக்கு வந்தானாம்.


அய்யா எழுதிய "சௌம்ய சாகரம் 1200 "  என்ற நூலைப் படிக்கும் போது 623 ஆம் பாடல் நமக்காக ஜொலித்துக் கொண்டிருந்தது.


"காணவே சற்குருவும் கருணை கூர்ந்து,

      கண்கண்ட சரியையோடு கிரிகைரெண்டும்

 பூணவே செய்துவந்த நெறியைப் பார்த்து,

      புத்தியுள்ள என்மகனே வாவென்றே தான்

 ஊணவே வாசியுட வழியுஞ் சொல்லி,

      உண்மையுள்ள சிவயோக நிலையுங்காட்டி

தோணவே ஞானமென்ற அண்டத்துள்ளே,

      தொடுகுறிபோல் சின்மயத்தின் மயஞ்சொல்வரே."


முக்கிய பொருள் :- சரியை கிரியை இரண்டையும் "பக்தி மார்க்கம்" என்று சொல்வார்கள். இந்த அற்புத பாடலில், அய்யா எவன் / எவள் பக்திமார்க்கத்தில் சற்குரு என்ற "அகத்தீசரைப்போன்ற"  மஹாசித்தரை ( மனிதர் அல்ல ) உண்மையாக தினமும் வழிபடுகிறார்களோ, அவர்களை அந்த சித்தரே வந்து "என் மகனே / மகளே வா " என்ற சொல்லி மிகவும் உயர்ந்த யோகஞானமான "வாசியோகம், சிவயோகம் மற்றும் சின்மயத்தை" தொட்டுக் காட்டி அருள் செய்வார்கள்.




கருத்துகள் இல்லை: