செவ்வாய், 29 ஜனவரி, 2019

யோகவேல் ஞானவேல்



ஓம் ஞானாலய முருக பாதம் போற்றி 

ஞானாலய வெளியீடான "ஆகம வேதம்நூலில் 
நம் ஆணவ மரத்தை முழுமையாக வேரோடு 
பிடுங்கி வெட்டி  அக்னி குண்டத்தில் போட்டு எப்படி எரிக்கவேண்டும்என்று பரத்வாஜ மகரிஷி 
அருளியிருப்பார்। 



நமக்குள் ஆழமாய் ஆணிவேரை விட்டிருக்கும் "ஆணவம்" (ஈகோ) உள்ளவரை, அகத்தீசர் மற்றும் சித்தர்களால் நம்மை நெருங்கி நல்லருள் அளிப்பது மிகவும் கடினமான காரியம். இதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.  இந்த கொடிய ஆணிவேரை முழுமையாக உருவிஎடுத்தாலும், அந்த ஆழமான துளை மீண்டும் "ஆணவவேர்" வளர காரணமாகுமே? என்னை ஈன்ற அகத்தியமாமுனியே என்ன செய்வது?
   பிடுங்கிய ஆணிவேர் துளையில் குருமுனியின் குருவான "ஞானவேல்" சொருகி பிரதிஷடை செய்து தினமும் அன்பு மலர் வைத்து பூசித்தால் "ஆணவம்" வளர வழியே இல்லை இல்லை இல்லை. "ஞானவேல்" இருக்கும்மனம், அகத்தீசரையும் அனைத்து சித்தர்களையும் ஈர்க்கும் சக்திமையம்.


குருவருளால்,  அடியேன் யான்
 *முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள்* , அதற்குரிய வேதம் ,  பூதம் , யோக ஆதார மையம் , அதற்குரிய பஞ்சாச்சரம் இவைகளை
 முறையாக தொகுத்துபோற்றி பாடலாக கீழே 
எழுதியுள்ளேன் 

உங்கள் ஒவ்வொரு ஆதார தளத்திலும் 
முருகவேலை பாவனை செய்து பக்தியோடு 
இந்த போற்றிகளை ஓதி  , ஓதியப்பர் அருளை பெற அடியேன்
 வேண்டுகிறேன் 



      காப்புவேல்.
ஓம் கணபதிவேல் காப்பு.
ஓம் அகத்தியமாமுனிவேல் காப்பு.
ஓம் சப்தரிஷிவேல் காப்பு.
ஓம் சங்கத்தமிழ்வேல் காப்பு.

      போற்றிவேல்
ஓம் பொதிகைவேல் போற்றி.
ஓம் கும்பமுனிவேல்போற்றி.
ஓம் குருமுனிவேல் போற்றி.
ஓம் ஞானலயம்வாழ் பெண்வேல் போற்றி.

      யோகஞானவேல்
ஓம் ஓம்காரவேல் போற்றி.
ஓம் சத்யவேல் போற்றி.
ஓம் தவவேல் போற்றி.
ஓம் தத்துவவேல் போற்றி.
ஓம் தூயவேல் போற்றி.
ஓம் தர்மவேல் போற்றி.
ஓம் அன்புவேல் போற்றி.
ஓம் மகிழ்வேல் போற்றி.

ஓம் விநாயகவேல் போற்றி.
ஓம் அகாரவேல் போற்றி.
ஓம் உகாரவேல் போற்றி.
ஓம் மகாரவேல் போற்றி.
ஓம் ரவிவேல் போற்றி.
ஓம் மதிவேல் போற்றி.
ஓம் பிராணநாகவேல் போற்றி.
ஓம் திருப்பரங்குன்றவேல் போற்றி.

ஓம் பிரம்மவேல் போற்றி.
ஓம் வாணிவேல் போற்றி.
ஓம் நகாரவேல் போற்றி.
ஓம் பூமிவேல் போற்றி.
ஓம் ரிக்வேதவேல் போற்றி.
ஓம் கிரியாவேல் போற்றி.
ஓம் கர்மவேல் போற்றி.
ஓம் திருசெந்தூர்வேல் போற்றி.

ஓம் காக்கும்கரவேல் போற்றி.
ஓம் விஷ்ணுவேல் போற்றி.
ஓம் திருவேல் போற்றி.
ஓம் மகாரவேல் போற்றி.
ஓம் யஜுர்வேதவேல் போற்றி.
ஓம் சக்ராயுதவேல் போற்றி.
ஓம் உந்திக்கமலவேல் போற்றி.
ஓம் திருஆவினன்குடிவேல் போற்றி.

ஓம் ருத்ட்ரவேல் போற்றி.
ஓம் சிகாரவேல் போற்றி.
ஓம் அக்னிவேல் போற்றி.
ஓம் இதயக்கமலவேல் போற்றி.
ஓம் சாமவேதவேல் போற்றி.
ஓம் முக்கோணசெவ்வேள் போற்றி.
ஓம் சுகமானசுழுத்திவேல் போற்றி.
ஓம் ஸ்வாமிமலைவேல் போற்றி.

ஓம் மஹேசவேல் போற்றி.
ஓம் வகாரவேல் போற்றி.
ஓம் வாயுவேல் போற்றி.
ஓம் கண்டவேல் போற்றி.
ஓம் அதர்வணவேதவேல் போற்றி.
ஓம் கருமைஅறுகோணவேல் போற்றி.
ஓம் சோப்பனவேல் போற்றி.
ஓம் திருத்தணிவேல் போற்றி.

ஓம் சதாசிவமணிவேல் போற்றி.
ஓம் யகாரவேல் போற்றி.
ஓம் அன்புஅருள்வேல் போற்றி.
ஓம் சுழிமுனைவேல் போற்றி.
ஓம் காயகல்பவேல் போற்றி.
ஓம் சாக்ரதவேல் போற்றி.
ஓம் முடிமூலவேல் போற்றி.
ஓம் பழமுதிர்சோலைவேல் போற்றி.

ஓம் சஹஸ்ரவேல் போற்றி.
ஓம் விந்துநாதவேல் போற்றி.
ஓம் பராபரவேல் போற்றி.
ஓம் பரப்ரம்மவேல் போற்றி.
ஓம் ஐங்கோணவேல் போற்றி.
ஓம் சமாதிவேல் போற்றி.
ஓம் ஆதிமுருகவேல் போற்றி.
ஓம் சரவணபவவேல் போற்றி.

ஓம்ம்ம்...
வானிலொளிரும் வாலைவேல் போற்றி.
துளைத்துப்புணரும் போகவேல் போற்றி.
களங்கமில்லா கற்புவேல் போற்றி.
பிழைபொருக்கும் கருணைவேல் போற்றி.
சாகா சிவசக்திவேல் போற்றி.
ஊண்ணுள்ளிருக்கும் உயிர்வேல் போற்றி.
உயிருள்ளிருக்கும் ஈசவேல் போற்றி.
கனவிலும் காக்கும் கந்தவேல்ல்ல்.. போற்றி போற்றி.

ஓம் சுபவேலனே போற்றி.

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அகத்தியரின் உரைப்படி பரத்வாஜர் உரைப்பது - ஆகம வேதம்

ஆகம வேதம்



மகாமுனி அகத்தியரையும், சித்தர்களையும் வணங்கும் ஆன்மாக்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்கள் ஒவ்வருவருக்கும் கண்டிப்பாக ஒரு ஆசை இருக்கும். ஆம், என்றாவது ஒருநாள் அன்பான அகத்திய முனி நம்முள் வந்து அருள்பலிப்பாரா?  நம்மையும் சித்தர் நிலைக்கு உயர்த்துவாரா ? என்ற ஆசை நம்முள் இருக்கும்.

     இதற்க்கு முந்தய பிலாக்கில் "கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம்" என்ற நூலை பற்றி சிறிய முன்னுரையை அடியேன் எழுதியிருந்தேன். ( லிங்க் கிளிக் செய்யவும் ).   இந்த நூலுக்கு அடுத்து எனக்கு மற்றுமொரு தெய்வீக நூலை படிக்கும் பாக்கியம் கிடைத்தது.
"பரதவசி" என்னும் பரத்வாஜர் முனிவரால் உரைக்கப்பட்ட "ஆகம வேதம்" என்கின்ற இந்த நூல் உலகெங்கும் சித்தர்களை வணங்குவோர்க்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.  இந்த நூலில் பாரத்வாஜ முனிவர் அவர்கள், கீழ்கண்ட விஷயங்களை மிக விரிவாக அழகாக உரைத்துள்ளார்.
*  ஒரு பக்தனின் சிரசில் உள்ள எந்த தகுதியை வைத்து "அகத்திய முனிவர்" உள்ளே வர விரும்புவார்,
*  எந்த விஷயம் அவர் வருவதை தடுக்கும், எது அவர்க்கு மகிழ்வை தரும்? 
*  அவர் ஒரு சிரசை தேர்தெடுக்க ஒரு பக்தன் என்ன என்ன முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும்,
*  ஒரு பக்தனின் சிரசில் அமர்ந்து அணுக்களை உயிர்பித்து செயலாற்றும்போது, என்ன என்ன வெளிப்பாடுகள் தோன்றும்? அதை எப்படி எதிர்கொள்வது ?
* அகத்தியர் முழுமையாக சிரசில் செயலாற்றியபின் பக்தனுக்கு கிடைக்கும்  பலன்களை யாவை? , ஆற்றல் பெற்ற பக்தனின் கடமைகள் யாவை.
*  முந்தய யுகங்களில் அகத்தியர் வருகை எப்படி எளிதாக இருந்தது?, ஏன் கலியுகத்தில் அவரால் எளிதில் நம் சிரசில் வரமுடியவில்லை ?
*  நம் குழந்தைகளுக்கு எதை எப்படி எந்த வயதில் கற்றுக்கொடுக்க வேண்டும்?
* நமக்கு எளிதில் கிடைக்கும் சூரியனின் சக்தியை எப்படி நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு முழுமையாக பயன்படுத்துவது.
மேலும் பல அற்புதமான சூட்சமங்களை வெளித்திறந்து அருளியிருக்கிறார் "பரதவசி" என்னும் பரத்வாஜர் மகரிஷி.
மேலும் விபரங்கள் கீழே உள்ள இணையதளத்தில் உள்ளது.

http://www.enlightenedbeings.org/books.php
http://www.enlightenedbeings.org/books.php

இதைப்படிக்கும் உங்கள் ஆன்மாவிற்கு அகத்தியர் அருள் கிட்ட அகத்தியரை வணங்குகிறேன்.

ஓம் அகத்தீசாய நமஹ.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.