பொதுவாக 40 வயது வரை நமது பிறவி நோக்கத்திற்கான ஆன்மீகப் பயிற்சிகளை பற்றி யோசிப்பதில்லை. ஏனெனில் நமது கவனம் முழுமையாக இல்லறம் மற்றும் பொருளீட்டலிலேயே இருக்கும். நமது பிறவியின் நோக்கத்தை நாம் 40 வயதிலாவது புரிந்து கொள்ள வேண்டும். உடனே நாம் நாற்பது வயதிலேயே பிரம்மச்சாரி ஆகிவிட வேண்டும் அல்லது சன்னியாசி ஆகி விட வேண்டும் என்று பொருள் இல்லை.
ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிவது போல் அறுபது வயதிற்கு மேலே மன அமைதி மற்றும் பிறவி நோக்கத்திற்கான ஆன்மீகப் பயிற்சிகள் எளிதில் கைகூடி விடும், என்று நினைப்பது சாத்தியமாகாது. இதற்குரிய தயார்படுத்துதலை நாம் 40 வயதிலிருந்து 60 வயது வரை சிறிது சிறிதாக பயிற்சிகளை செய்து கொண்டிருக்க வேண்டும்.
பாண்டிச்சேரி ஞானாலயத்தின் வாழ்வியல் என்ற நூலைப் படிக்கும் பொழுது, அடியேன் எனக்கு இதை எப்படி திட்டமிட்டு அட்டவணைப் படுத்துவது என்ற யோசனை வந்தது. குருநாதர் அருளால் கீழே ஒரு அட்டவணையை தயாரித்துள்ளேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வழிபாடு மற்றும் ஆன்மீக பயிற்சி
தினசரி ஈடுபாடு %.
(இல்லறம் மற்றும் தொழில் பாதிக்காத வகையில்)
மேற்க்கண்ட சதவிகிதம் என்பது விழித்திருக்கும் தினசரி நேரத்தில்.
உதாரணமாக நீங்கள் ஒரு நாளில் விழித்திருக்கும் நேரம் 12 மணிநேரம் எனில், அதில் 5% என்பது 36 நிமிடங்கள்.
இப்படிக்கு
அகத்திய பக்தன்.