புதன், 27 மார்ச், 2024

அனுபவ ஞானம் : நவகண்ட யோகம்

 அனுபவ ஞானம் - நவகண்ட யோகம்


பராசக்தியே போற்றி.



கடந்த 2018 ஆம் ஆண்டு அன்பாலயம் ஜெயந்தி அன்னை மூலமாக, பரத்வாஜ முனிவர் அருளிய "ஆகம வேதம்" என்ற நூலினை குருவருளால் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. 


அந்த நூலின் 5 ஆம் பக்கத்தில், மன பாவனையின் மூலமாக பாவ கர்மாவை நீக்கும் பயிற்சி அற்புதமாக விளக்கப்பட்டு இருக்கும். இந்த பயிற்சியை யூடியூபிலும் எளிதாக விளக்கியுள்ளார்கள். லிங்க் கீழே.


 

நான் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தேன். ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் பௌர்ணமி காலை நேரம் பயிற்சி செய்வதை வழக்கப்படுத்தினேன். பல கர்ம வினைகள் என்னிடமிருந்து விலகுவதை நன்கு உணர முடிந்தது. எனினும் பல பிறவிகளாய் தொடரும் கடினமான கர்மவினைக்கு இன்னும் வீரியமான பயிற்சி தேவை, என குருவருளால் உணர்ந்தேன். தினமும் மோசமான கனவுகளால் அதிகம் வருந்தினேன். குருநாதரின் பாதம் பணிந்து  "ஒரு வரி" ஞானத்தின் பிரார்த்தனையோடு தினமும் வேண்டினேன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் காலை நேரம் தியானிக்கும் போது, குருநாதர் கருணையோடு அந்த வீரியமான பயிற்சியை அருள் செய்தார்.



கடினமான கர்மவினையை நீக்கும் இந்த வீரியப் பயிற்சி, எனக்கு வினோதமாக இருந்தது. தினமும் "ஒரு வரி ஞானத்தை" விரும்பிப் பிராத்திப்பதால் எனக்கு சிறிதும் அச்சம் வரவில்லை. ஆரம்பத்தில் இந்த வீரிய பயிற்சியை குருநாதர் எனக்கு மட்டும் அருளி இருப்பதாகத்தான் நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது இதை குருநாதர் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே நவகண்ட யோகம் என்ற பெயரில் பல சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் அருளி இருக்கிறார் என்று. வள்ளலார் இந்த நவகண்ட யோகத்தை செய்திருக்கிறார், ஆனால் மனதின் கற்பனையால் அல்ல, உண்மையிலேயே உடலை துண்டு துண்டாக பிரித்து தரையில் ஆங்காங்கே பரப்பிவிட்டு, "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! நான் என்பது இங்கே சிதறி கிடக்கும் உடல் அல்ல, சதா அலை பாயும் வெளி மனமும் அல்ல. நான் அருட்பெருஞ் ஜோதியின் ஒரு பகுதியான ஆன்ம ஜோதியாவேன்",  என பூரணமாய் உணர்ந்து, பரப்பிரமம் எனும் வெட்ட வெளியில் கலந்து சமாதி யோகமும் செய்திருக்கிறார்.



அடியேன் நான் எப்படி இந்த  வீரியப் பயிற்சியை மனத்தினால் செய்தேன் என்பதை விளக்குகிறேன். நான் வெண்ணிற உடையில் கடலின் மேல் பறந்து நடுக்கடலுக்கு செல்கிறேன்.



 அங்கே ஒரு ஆழமான "கடல் நீர் சுழல்" பிரம்மாண்டமாய் சுழன்று கொண்டிருக்கும். 



அந்த சுழல் மேல் நின்று என் உயிரான பராசக்தியை சரணாகதமாக வணங்கி, என் கொடிய கர்ம வினைகளை நீக்கிவிட பிரார்த்திக்கிறேன்.



"கொற்றவைத் தாயே! என் உயிரான பராசக்தியே! உன் பாதங்களை வணங்குகிறேன். இந்த பூமியிலே கர்மாவினால் சிறை படுத்தப்பட்ட என் ஆன்மாவை நீ உன் வல்லமையால் விடுவிக்க வேண்டும் தாயே! என் ஆன்ம விடுதலைக்கு எதிரான கர்ம தடைகளை நீ அழித்து வெற்றி கொள்ள, என் உடலை நவகண்டமாய் இந்த கடல் நீர் சுழலில் உனக்கு பலியிடுகிறேன் தாயே!"  என்று சரணாகதமாய் வணங்கி நீண்ட கூரிய வாளால் உடலை ( மனதிலேயே ) ஒன்பது கூறுகளாய் வெட்டி, வட்ட குண்டத்தின் வடிவான கடல் நீர் சுழலில் பலியாக வீசி விட வேண்டும்.





நம் மனதின் மூலம் பலியிடும் வரிசை :-

 1) வலது கால்

 2) இடது கால்

 3) இடுப்பு 

4) மார்பு 

5) தோள் 

6) கழுத்து 

7) தலை 

8) இடது கை 

9) வாளோடு கூடிய வலது கை.


 உருவமற்ற சூட்சம உயிராக, விண்ணைப் பார்த்து மேலே எழும்பிப் பறக்கிறேன். சூரியனின் வெப்ப மண்டலத்தை நெருங்கும் போது, சூரியனின் மத்தியில் உள்ள குளிர்ந்த காந்த ஆற்றலான இறைவன் நம் உயிரை தானே ஈர்த்துக் கொள்வார்.



 பிரகாசமான ஒளியில் சிறிது தியானித்து விட்டு வெட்டவெளியில் கலக்க வேண்டும். இயன்றவரை மௌனமாக அந்த வெட்டவெளியிலேயே லயித்து தியானிக்க வேண்டும். சில வினாடிகள் தான், உடனே நாம் வெளி மனம் சுதாரித்து, வெளி உலக உருவங்களையும் எண்ணங்களையும் காட்ட ஆரம்பித்து விடும். எனினும் அந்த ஒரு சில வினாடிகள் வெட்ட வெளியில் தியானப்பது மிகவும் அற்புதமே.  



குடும்பக் கடமைக்காக செயல்பட வேண்டிய  கட்டாயத்தில் உள்ளவர்கள் இந்த நவகண்ட யோக பயிற்சியை, மாதம் ஒரு முறை அல்லது கர்மாவின் வீரியம் அதிகமாக உணரும் போது மட்டும் செய்வது நல்லது. இல்லாவிடில் குடும்ப கடமைகளை செய்ய மனம் இல்லாத போய்விடும். இதை குருநாதர் ஏற்க மாட்டார்.
இந்த பயிற்சியினால் நம் உள் மூளையில் வெகுகாலமாய் சிறைப்பட்ட  கடினமான கர்மாக்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்படும். இதன் தாக்கத்தால் சில காலத்திற்கு மோசமான கனவுகளும் வெளி உலகில் சில போராட்டங்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். இது சில காலம் தான். குருநாதரின் பாதத்தை இறுகப்பற்றி, "ஒரு வரி" ஞானத்தை தொடர்ந்து பிரார்த்தித்து, இந்த போராட்ட காலத்தை எளிதாய் கடந்து விடலாம். இந்த போராட்ட காலம் சிலருக்கு சில மாதங்கள் இருக்கும், சிலருக்கு சில வருடங்கள் இருக்கும், இது அவரவர் கர்மாவை பொறுத்தது. அடியேன் எனக்கு ஐந்தாண்டுகள் வரை  போராட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் இருந்தது. நீங்கள் குருநாதரின் ஒரு வரி ஞானத்தை  முழுமையாக ஏற்று, தினமும் பிராத்திப்பவராயின் இந்தப் பயிற்சியை தாராளமாக செய்யலாம்.


இந்த நவகண்ட யோகத்தைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணி, சிலப்பதிகாரம் மற்றும் சில இலக்கிய நூல்களில் உள்ளது. தன் நாடு போரில் வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு வீரன் நம் தமிழ் பெண் தெய்வமான கொற்றவைக்கு, தன் உடலை தானே வெட்டி பலியிடுவான். தடைகள் விளங்குவதற்காக தன்னைத் தானே தியாகம் செய்கிறான். கீழே ஒரு உதாரண பாடல் கலிங்கத்துபரணியில்.


அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ

அரிந்தசிரம் அணங்கின் கைக்கொடுப்பராலோ

கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ

குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ.


[கொற்றவை-காளி; பாவும்-துதிக்கும்]


இவ்வளவு ஏன்? இன்றைக்கும் கூட பழமையான கோயில்களின் வாயிலில், தனக்கு எந்த உடல் பாகத்தில் நோய் உள்ளதோ, அந்த உடல் பாகத்தை வெள்ளியிலே வாங்கி, உண்டியலில்  காணிக்கை செலுத்தும் பழக்கம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? 





எல்லாம் மூடநம்பிக்கை  அல்லது  காட்டுமிராண்டித்தனமோ இல்லை. அனைத்திலும் ஆழ்ந்த மனோதத்துவம் இருக்கிறது.

நம் கர்மவினைகள் நமது உள் முளையின் நரம்பணுக்களில் சிறைப்படுவதைப் பற்றிய  சுவாரசியமான தகவல்களை வேறு தனிப் பதிவில் பார்ப்போம்.



இப்படிக்கு,

அகத்திய பக்தன்.


புதன், 6 மார்ச், 2024

சுசிலா பெரியம்மாவுக்கு கிடைத்தது

 அழைக்கிறான் மாதவன்…
ஆநிரை மேய்த்தவன்…





      சென்ற திங்கள் கிழமை மாலை, பிரார்த்தனையை முடித்துவிட்டு பூஜை அறையை விட்டு வெளியே வந்தேன். எனது தாயார் சுசிலா பெரியம்மாவிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாயார் என்னைப் பார்த்ததும் அலைபேசியை என்னிடம் கொடுத்து, சுசிலா பெரியம்மாவிடம் பேசச் சொன்னார். 

முருகப்பெருமானை ஆறு பெண்கள் சேர்ந்து வளர்த்தார்களாம். அதுபோல் என்னையும்  பல்வேறு காலகட்டங்களில் பல தாய்மார்கள் வளர்த்திருக்கிறார்கள். அதில் சுசிலா பெரியம்மாவும் மிகவும் முக்கியமானவர்.  நான் திண்டுக்கல்லில்  உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது சுசிலா பெரியம்மா வீட்டில் தான் அடிக்கடி தங்கி இருப்பேன். இப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டு ஓடிவிட்டது.

தற்போது சுசிலா பெரியம்மா உடல் நலக் கோளாறால் மதுரையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். நான் வரவேற்பு அறையில் உள்ள குருநாதரின் படத்தைப் பார்த்துக்கொண்டே அலைபேசியை வாங்கி பேசினேன். சுசிலா பெரியம்மாவிற்கு விரைந்து உடல் நலம் தேரவும் வலியை தாங்கிக் கொள்வதற்கும் என்ன மந்திரம் ஜெபிக்கலாம் என்று என்னைக் கேட்டார். இது போன்ற கேள்வியை வேறு யாரேனும் கேட்டிருந்தால்  மன ஆறுதலுக்காக ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி இருப்பேன். ஆனால் இன்று ஏனோ  குருநாதர் எனக்கு அளித்த "ஒரு வரி ஞானத்தை" சொல்லி விட வேண்டும் என்று எனக்கு தோன்றியது. பெரியம்மா, குருநாதர் எனக்கு கொடுத்த ஒரு முக்கியமான ஞானத்தை இன்று உங்களுக்குச் சொல்ல போகிறேன். நாம்  இந்த பூமியில் பிறப்பது முக்தியை அடைவதற்காகத் தான். இதை ஏற்றுக் கொள்வதற்கு  கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் இதுதான் உண்மை. எனவே நீங்கள் மனம் உருகி, "இறைவா உன் பாதம் சேரும் முக்தி எனக்கு விரைவில் வேண்டும்" என கேளுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளையேனும், இதை மனம் உருகி பிரார்த்தை செய்து  வேண்டியபின் "நமச்சிவாய" மந்திரத்தை ஜெபமாலை கொண்டு ஜெபியுங்கள் என்று சொன்னேன்.  பெரியம்மாவிடம் சில வினாடிகளுக்கு எந்த பதிலும் இல்லை. மனம் இல்லாமல் "சரி" என்று ஒரு வார்த்தை சொன்னார். அத்தோடு   இருவரும் விடைபெற்று அலைபேசியை வைத்து விட்டோம். 

அலைபேசியை வைத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் பெரியம்மா அலைபேசியில் என்னை அழைத்தார். மைந்தா, நான் ஒரு விஷயத்தைக் கேட்பேன்,  அதற்கு உன் பதிலை சொல் என்றார்.  எனக்கு காசிக்கு செல்ல வேண்டும் என்று வெகு நாளாய் ஆசை. ஆனால் எனது நோய்வாய்ப்பட்ட கால்களை வைத்துக் கொண்டு என்னால் செல்ல முடியுமா? இதனை வேண்டுவதாலோ ஆசைப்படுவதாலோ எந்த பலனும் இல்லை. அதுபோல் "எனக்கு முக்தியை தரும் மரணம் வேண்டும் என்று வேண்டினால் மட்டும் என்ன பலன்? அது கிடைக்கும் விதி இருக்கும்போது தானே கிடைக்கும்",  என்று கேட்டார். அடியேன் நான் குருநாதரின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே  பதில் உரைத்தேன். தாயே, உங்களால் காசிக்கு செல்ல முடியாவிட்டாலும், அதற்காக ஆசைப்பட்ட நொடியில் உங்கள் மனதால்  காசிக்கு சென்ற பலனையும்  புண்ணியத்தையும் அடைகிறீர்கள்.  அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் நான் கோவையில் இருக்கிறேன், நீங்களோ மதுரையில் இருக்கிறீர்கள். ஆனால் இந்த நொடியில், உங்கள் மனதில் நானும், என் மனதில் நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா!  
முக்தி வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நீங்கள் மனதால் கேட்கும் நொடியில்,  உங்கள் மனதாலேயே கையிலாசத்தில் இருக்கும் ஈசனிடம் சென்றுவிட்டு, மீண்டும் உங்களது உடம்பிற்குள் திரும்புகிறீர்கள். இதற்கான  இறைவனின் அருளை நீங்கள் கட்டாயம் பெறுகிறீர்கள். 



இந்த இறையருள் உங்கள் வலியையும் தாங்க உதவும், குணப்படுத்தவும் செய்யும். மேலும் இந்தப் பிரார்த்தனையை தினசரி தவறாமல் வேண்டிக் கொண்டிருந்தால், உங்களை எந்த துன்பமும் வருத்த முடியாது. மாயையால் கட்டுண்டு கிடக்கும் உங்கள் வெளிமனம் வலுவிழந்து விடும். ஒரே பிரார்த்தனையை பலமுறை மனம் உருகி வேண்டுவதால், அதுவே ஆழ்மனதில் பதிந்துவிடும்,  பேரானந்த வாழ்வும்  சித்திக்கும். இறையன்பினால் எப்போதும் நிரம்பி இருப்பீர்கள். பல வருடங்களாய் நானும் இப்படித்தான் வேண்டிக் கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகள், மனைவி, தாயார் அனைவருக்கும் இதையே சொல்லிக் கொடுத்தேன், என்று சொன்னேன்.
சில வினாடிகளுக்கு பெரியம்மாவிடம் பதில் இல்லை, சில வினாடிகள் யோசனைக்கு பின் சமாதானமாகி "சரி மைந்தா" என்றார்.


விரக்தியா? விருப்பமா?
 இந்த ஒரு வரி ஞான பிரார்த்தனையை விரத்தியாலோ அல்லது ஏதோ ஒரு  எதிர்பார்ப்பிற்காகவோ வேண்டுவதால் எந்த பலனும் இல்லை.  இந்த பிரார்த்தனையை மனம் உருகி முழு விருப்பத்தோடு வேண்டினால் அனேக பலன்கள் உண்டு. ஆண்டாள் நாச்சியார் கண்ணனே வேண்டும், என எவ்வளவு விருப்பத்தோடும் ஏக்கத்தோடும் வேண்டினாலோ, அதுபோல் இந்த ஒரு வரி ஞானத்தை தினசரி மிகுந்த விருப்பத்தோடு வேண்ட வேண்டும்.




இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வயோதிக காலத்தில் கேட்க வேண்டிய ஞானம் என்றா தோன்றுகிறது?  அப்படி தோன்ற வைப்பது தான் வெளி மன மாயையின் சதிவேலை. மேலும் விளக்கம் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்தால் நிச்சயமாய் தெளிவு பிறக்கும். அற்புத சக்திகளைப் பெறும் ரகசியமும் தெரியும்.


இந்த ஒரு வரி ஞானத்தை தினசரி தொடர்ந்து வேண்டும் பொழுது என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதை கீழ்க்கண்ட பதிவைப் படித்து புரிந்து கொள்ளலாம்.


இந்த ஒருவரி ஞானம் எனக்கு எப்படி கிடைத்தது என்பதற்கான பதிவு.


வெளி மனத்திற்கும் ஆழ்மனத்திற்கும்  உள்ள வேறுபடும் சக்திகள்.


இந்த மகளிர் தினத்தில் என்னை தகப்பனாக  ஏற்றுக்கொள்ளும் அனைத்து மகள்களுக்குமான பரிசாக  கவிதைப் பதிவு.



   இப்படிக்கு
 அகத்திய பக்தன்


சனி, 2 மார்ச், 2024

என் அசைவம் என் உரிமை

 என் அசைவம் என் உரிமை


சைவமோ அசைவமோ, உங்கள் தினசரி உடல் உழைப்புக்கு ஏற்றபடி உணவு உண்ணுங்கள்.  வியர்வை சிந்த கடின உடல் உழைப்பு உள்ளோர் மட்டும் அசைவ உணவைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் அசைவம் தவிர்க்கலாமே ?. 
"என் அசைவம் என் உரிமை" என்றால் இனி உங்கள் இஷ்டம்.



  நாற்பது வயதைக் கடந்தவர்கள் உணவுப் பழக்கத்தை சரி செய்யாவிடில், ஒரு 10 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 10 நாட்கள் உடனிருந்து உங்களை கவனிக்க ஒரு ஆளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 
( இல்லத்தரசிகள், டாக்டர், இன்ஜினியர், வியாபாரி, பைனாஸ் தொழில் செய்வோர் மற்றும் ஓய்வுபெற்றோர் கவனத்திற்க்கு )
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு ஒரு மரியாதையும் இருக்காது. பரிதாபம் தான்.



உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உழைப்பு.

 இறைவனின் அருளை பெற்ற தூதர்களான இயேசுநாதர், முகமது நபி, சீரடி சாய்பாபா போன்றோர்கள், மாமிசம் உண்பதை  தவறாக சொல்லவில்லை. தாராளமாக மாமிசம் உண்ணலாம் என்று அறிவுறுத்தினார்கள். ஏனெனில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் இயல்பான அன்றாட வாழ்க்கையிலேயே அதிக உடல் உழைப்பு இருந்தது. அன்றைய காலத்தில், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், இயந்திர வாகனங்கள் என்ற எந்த ஒரு உடல் உழைப்பை குறைக்கும் இயந்திரமும் இல்லை. அதனால் அன்றைய காலத்தில், மாமிசம் உண்பதால் எந்த  பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அன்றாட வாழ்க்கையில், உடல் உழைப்பு என்பது மிக மிக குறைந்து விட்டது. மாமிச உணவு இன்றைய பெண்களுக்கு உடலில் துன்பத்தையும், ஆண்களுக்கு உயிரில் துன்பத்தையும்  தருகிறது.
 தினசரி கடினமான உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மாமிச உணவு அவசியமானது. ஆனால் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களும் மாமிச உணவை உண்பதால், அதன் விலையும் கூடிவிட்டது, தரமோ குறைந்துவிட்டது.

 இதனால் அதிக உடல் உழைப்பு உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாமிச உணவானது, அவர்களால் தினசரி வாங்க முடியாத விலைக்கு ஏறி விட்டது. இது மிகப்பெரிய பாவமாகும். இந்தப் பாவம், உடல் உழைப்பில்லாத, அவசியமே இல்லாமல் மாமிச உணவு உண்பவர்களையே சாரும்.



 இதனால்தான் இறைதூதர்களால் அளிக்கப்பட்ட,  யுனானி, சித்தா, ஆயுர்வேதா போன்ற இயற்கை மருந்துகள் வேலை செய்வதில்லை. ஆங்கில மருந்தையே அதிகம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.


கீழ்க்கண்ட வேலைகளை கடின உழைப்பு என கருதலாம். ( தினசரி வேலை ).

( சூரிய ஒளியில் அல்லது அக்கினியில் )
 விவசாய வேலை, விறகு வெட்டுதல்,
 கல் உடைத்தல்,  கட்டிட வேலை,
 இரும்பை உருக்கி அடித்தல், 
வியர்வை சிந்த கடின உழைப்பு,
சூரிய ஒளி படும் இடத்தில் ஆட்டாங்கல், அம்மிக்கல், துவைக்கும் கல் தினசரி உபயோகிக்கும் இல்லத்தரசிகள் மற்றும் கால்நடை பராமரிப்பு.

அசைவம் உண்ணும் உங்களிடம் மேற்கண்ட ஏதேனும் ஒன்று உள்ளதா ???

மிகக் கடின உழைப்பு உள்ளோர்க்கான உணவை, நீங்கள் உண்பதை உங்கள் ஆன்மா (இறைவன்) ஏற்றுக்கொள்வாரா?

இதய நோய் ஆபத்து :-

About 94 % of young patients, who suffered a heart attack, were non-vegetarians, according to a report released by Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research.

more information in below article.



அதிக உடல் உழைப்பு இல்லாத பெண்கள் மாதவிடாய் இருக்கும்வரை இதய ஆபத்து வெளியே தெரியாது. மட்டன் பிரியாணியோ சிக்கன் வறுவலோ வெலுத்துக்கட்டலாம். ஆனால் இதயவலி ஆபத்து, மாதவிடாய் நின்றபின்தான் தெரியும். எதற்கும் ஒரு பத்து லட்சம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது மருத்துவ காப்பீடோ எப்போதும் தயாராய் வைத்துக்கொள்ளுங்கள் தாய்மார்களே.

50+ வயது பெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வரும்.


இதுபற்றிய கட்டுரை கீழே.





மனநல பாதிப்பு :-

கடுமையான உடல் உழைப்பு இல்லாதவர்களின் மாமிச உணவு, ரத்தத்தின் அடர்தன்மை அதாவது blood viscosityயை அதிகமாக்கும். இதனால் உள்மூளை  நியூரான்ஸ் எனும் நரம்ப அணுக்கள் வரை ரத்த ஓட்டம் பரவாமல் தடுத்துவிடும். 




உள்மூளை நரம்பு அணுக்கள் வரை ரத்த ஓட்டம் பரவாமல் இருந்தால் அது மனம் நலம் சார்ந்த பிரச்சனையை அதிகமாய் உருவாக்கும்.



இப்படிக்கு
அகத்திய பக்தன்.