என் அசைவம் என் உரிமை
சைவமோ அசைவமோ, உங்கள் தினசரி உடல் உழைப்புக்கு ஏற்றபடி உணவு உண்ணுங்கள். வியர்வை சிந்த கடின உடல் உழைப்பு உள்ளோர் மட்டும் அசைவ உணவைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் அசைவம் தவிர்க்கலாமே ?.
"என் அசைவம் என் உரிமை" என்றால் இனி உங்கள் இஷ்டம்.
நாற்பது வயதைக் கடந்தவர்கள் உணவுப் பழக்கத்தை சரி செய்யாவிடில், ஒரு 10 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 10 நாட்கள் உடனிருந்து உங்களை கவனிக்க ஒரு ஆளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
( இல்லத்தரசிகள், டாக்டர், இன்ஜினியர், வியாபாரி, பைனாஸ் தொழில் செய்வோர் மற்றும் ஓய்வுபெற்றோர் கவனத்திற்க்கு )
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு ஒரு மரியாதையும் இருக்காது. பரிதாபம் தான்.
உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உழைப்பு.
இறைவனின் அருளை பெற்ற தூதர்களான இயேசுநாதர், முகமது நபி, சீரடி சாய்பாபா போன்றோர்கள், மாமிசம் உண்பதை தவறாக சொல்லவில்லை. தாராளமாக மாமிசம் உண்ணலாம் என்று அறிவுறுத்தினார்கள். ஏனெனில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் இயல்பான அன்றாட வாழ்க்கையிலேயே அதிக உடல் உழைப்பு இருந்தது. அன்றைய காலத்தில், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், இயந்திர வாகனங்கள் என்ற எந்த ஒரு உடல் உழைப்பை குறைக்கும் இயந்திரமும் இல்லை. அதனால் அன்றைய காலத்தில், மாமிசம் உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அன்றாட வாழ்க்கையில், உடல் உழைப்பு என்பது மிக மிக குறைந்து விட்டது. மாமிச உணவு இன்றைய பெண்களுக்கு உடலில் துன்பத்தையும், ஆண்களுக்கு உயிரில் துன்பத்தையும் தருகிறது.
தினசரி கடினமான உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மாமிச உணவு அவசியமானது. ஆனால் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களும் மாமிச உணவை உண்பதால், அதன் விலையும் கூடிவிட்டது, தரமோ குறைந்துவிட்டது.
இதனால் அதிக உடல் உழைப்பு உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாமிச உணவானது, அவர்களால் தினசரி வாங்க முடியாத விலைக்கு ஏறி விட்டது. இது மிகப்பெரிய பாவமாகும். இந்தப் பாவம், உடல் உழைப்பில்லாத, அவசியமே இல்லாமல் மாமிச உணவு உண்பவர்களையே சாரும்.
இதனால்தான் இறைதூதர்களால் அளிக்கப்பட்ட, யுனானி, சித்தா, ஆயுர்வேதா போன்ற இயற்கை மருந்துகள் வேலை செய்வதில்லை. ஆங்கில மருந்தையே அதிகம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
கீழ்க்கண்ட வேலைகளை கடின உழைப்பு என கருதலாம். ( தினசரி வேலை ).
( சூரிய ஒளியில் அல்லது அக்கினியில் )
விவசாய வேலை, விறகு வெட்டுதல்,
கல் உடைத்தல், கட்டிட வேலை,
இரும்பை உருக்கி அடித்தல்,
வியர்வை சிந்த கடின உழைப்பு,
சூரிய ஒளி படும் இடத்தில் ஆட்டாங்கல், அம்மிக்கல், துவைக்கும் கல் தினசரி உபயோகிக்கும் இல்லத்தரசிகள் மற்றும் கால்நடை பராமரிப்பு.
அசைவம் உண்ணும் உங்களிடம் மேற்கண்ட ஏதேனும் ஒன்று உள்ளதா ???
மிகக் கடின உழைப்பு உள்ளோர்க்கான உணவை, நீங்கள் உண்பதை உங்கள் ஆன்மா (இறைவன்) ஏற்றுக்கொள்வாரா?
இதய நோய் ஆபத்து :-
About 94 % of young patients, who suffered a heart attack, were non-vegetarians, according to a report released by Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research.
more information in below article.
அதிக உடல் உழைப்பு இல்லாத பெண்கள் மாதவிடாய் இருக்கும்வரை இதய ஆபத்து வெளியே தெரியாது. மட்டன் பிரியாணியோ சிக்கன் வறுவலோ வெலுத்துக்கட்டலாம். ஆனால் இதயவலி ஆபத்து, மாதவிடாய் நின்றபின்தான் தெரியும். எதற்கும் ஒரு பத்து லட்சம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது மருத்துவ காப்பீடோ எப்போதும் தயாராய் வைத்துக்கொள்ளுங்கள் தாய்மார்களே.
50+ வயது பெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வரும்.
இதுபற்றிய கட்டுரை கீழே.
மனநல பாதிப்பு :-
கடுமையான உடல் உழைப்பு இல்லாதவர்களின் மாமிச உணவு, ரத்தத்தின் அடர்தன்மை அதாவது blood viscosityயை அதிகமாக்கும். இதனால் உள்மூளை நியூரான்ஸ் எனும் நரம்ப அணுக்கள் வரை ரத்த ஓட்டம் பரவாமல் தடுத்துவிடும்.
உள்மூளை நரம்பு அணுக்கள் வரை ரத்த ஓட்டம் பரவாமல் இருந்தால் அது மனம் நலம் சார்ந்த பிரச்சனையை அதிகமாய் உருவாக்கும்.
இப்படிக்கு
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக