சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 4
ஓம் அகத்தீசாய நமஹ.
இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும். குருநாதர் அருளால் நமக்குக் கிடைத்த குறிப்புகளைப் பார்க்கலாம்.
ஊர்த்தவ தாண்டவர் :-
சிதம்பரம் கோவிலின் உச்சகட்ட காட்சி இதுதான். சிவனும் காளியும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். காளியானவள் சிவனுக்கு சரியாக எல்லா வகையான ஆட்டத்தையும் ஆடுகிறாள். கடைசியில் சிவன் எளிதாக தனது வலது காலை முற்றிலுமாக தலைக்கு மேலே உயர்த்தி விட்டார். அப்படி உயர்த்திய வலது காலை நோக்கி தனது வலது கையையும் உயர்த்தி சுட்டிக்காட்டி விட்டார். பொதுவாக பின்கலை என்பது காந்த ஆற்றல் கொண்ட சிவனைக் குறிக்கும். இடகலை என்பது வெப்ப ஆற்றல் கொண்ட சக்தியை குறிக்கும். சக்தியால் பிரபஞ்சத்தின் வெப்பமண்டலம் வரை எளிதில் செல்ல முடியும். மேலும் பிரபஞ்சத்தின் காந்த மண்டலத்தில் ஓரளவிற்கு மட்டுமே ஊடுருவ முடியும். ஆனால் அவளால் கண்டிப்பாக வெட்டவெளி என்னும் பூரணத்திற்குள் செல்லவே முடியாது. சிவனால் மட்டுமே பின்கலையை முழுவதுமாக உயர்த்தி, அப்படியே நிறுத்தி, வெட்டவெளிக்குள் ஊடுருவி செல்ல முடியும். யோகியானவர் இந்த நிலையில், தனது உடல் உள் உறுப்புகளின் இயக்கத்தை முழுமையாக நிறுத்தி, சமாதிக்குள் சென்று கொண்டிருப்பார். அவர் காந்த மண்டலத்தைத் ( பாதரச ஆற்றல் ) தாண்டும் பொழுது உடுக்கை நாதம் அவருக்குக் கேட்கும்.
இறுதியாக போட்டியில் காளி தோற்று விடுகிறாள், சிவபெருமான் ஜெயித்து விடுகிறார். பின்னர், தலைவர் காளியாத்தாளை கச்சிதமாய் தன் கைக்கு அடங்கிய காதலியாக்கி அருகே வைத்துக் கொண்டார்.
ஆற்றல்களின் பயணம் மற்றும் தன்மையைப் புரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு உதவும்.
ஆற்றல்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் கீழே உள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
உங்கள் மனதில் உள்ள கேள்வி:-
இந்த யோக நுணுக்கங்களை யார் கற்றுத் தருவார்?
நம் கொண்டைக்கார குருநாதரால் மட்டுமே கற்றுத் தர முடியும். அதுவும் சுழுமுனை நாடியில் வந்து, உயிர் தரிசனம் தந்து, கற்றுத் தருவார். ஆனால் அவர் சில விஷயங்களையும் புரிதலையும் முதலில் எதிர்பார்ப்பார்.
அதை விளக்கமாக அடுத்த பதிவான "ஞானச் சரவெடி"யில் விரைவில் பார்க்கலாம். அதுவரை நம் குருநாதர் கண்டிப்பாக எதிர்பார்க்கும் அடிப்படைத் தகுதியான "ஆன்ம சுதந்திரம்" என்ற மனப்பக்குவத்தை பற்றிய கீழ்கண்ட பதிவுகளை முழுமையாகப் படித்து, உணர்ந்து, இறைவனிடம் அதையே தினமும் தவறாமல் பணிந்து வேண்டுங்கள். கீழே உள்ள பதிவுகளில் ஒரே விஷயத்தை தான் வேறு வேறு விதமாக எழுதியிருப்பேன். சலிக்காமல் அனைத்தையும் படித்து விடுங்கள். ஏனெனில் அவ்விதமே உங்கள் ஆழ்மனம் வரை ஊடுருவி செல்ல வேண்டும், என்பதற்காகவே அப்படி எழுதப்பட்டது.