செவ்வாய், 19 ஏப்ரல், 2022

எட்டிலே கிட்டும் அதிர்ஷ்டம்

 எட்டிலே கிட்டும் அதிர்ஷ்டம்


 எனது முந்தைய பிறவிகளில் நான் பெற்று வளர்த்த எனது குழந்தைகளே இப்போது என்னிடம் நேரடியாகவோ அல்லது எண்ணங்களின் மூலமோ ஆன்ம தொடர்பில் இருக்கிறார்கள்.  எனது இருபது ஆண்டுகால அனுபவத்தை இயன்ற அளவு சுருக்கி எனது குழந்தைகளுக்காக இப்பதிவை எழுதி வைக்கிறேன்.  இந்தப் பதிவு எனது வாழ்விலும், என்னை சூழ்ந்து இருக்கும் எனது உறவினர்கள் நண்பர்கள் உடன் பணிபுரிபவர்களின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஆய்வு செய்து எழுதப்பட்ட ஒரு ஆழ்ந்த அனுபவ பதிவு. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்றால் என்னால் நிரூபிக்க முடியாது. 





















 



இந்த கலியுகத்தில் ஆங்கில தேதியான 8 தேதிகளில் அதாவது 8, 17, 26 இந்த மூன்று தேதிகள் அவ்வளவாக சிறப்பு பொருந்தியதாக கருதப்படுவதில்லை. இந்த மூன்று தேதிகளும், மேலும் 8 என்ற எண்ணையும் கூட துரதிஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உண்மையில் 8 தேதியின் சிறப்புகளை பிறகு நன்கு ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்தேன்.  உண்மையில் 8 தேதிகள் பயந்து ஓட வேண்டிய தேதிகள் அல்ல. இந்த தேதிகள் மிகவும் அதிர்ஷ்டமான தேதிகளாக எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். 


 சரி இனி பதிவின் முக்கிய நோக்கமான முக்கிய குறிப்புகளை கீழே ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக பார்க்கலாம்.


 1) 8 தேதிகள் என்றால், 8  17 மற்றும் 26ஆம் தேதிகளைக் குறிக்கும்.


 2) இதைப்போல் 1 தேதிகள் என்றால், 1  10 மற்றும் 19 இந்த மூன்று தேதிகளை குறிக்கும்.  


 3) கலியுக எண் சாஸ்திரப்படி 8 எண், கர்மாவை நீக்கும் அல்லது சேர்க்கும் எண்ணாக கருதப்படுகிறது.


 4) ஒவ்வொரு எட்டு தேதிகளை நாம் இயன்றளவு  மௌனத்தோடு கூடிய இறை வழிபாடு மற்றும் தியானத்திற்கு மட்டும் உபயோகப்படுத்துவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும், மேலும்  நமது பிறவி கர்மாவையும் விரைந்து நீக்கும். 



















5)  8 தேதிகளில் இயன்ற அளவு உலக விஷயங்கள்,  முக்கிய வேலைகளை செய்தல், புதிய நல்ல காரியங்களை  துவங்குதல் போன்ற செயல்களை செய்வதை தவிர்ப்பது மிக மிக நல்லது.  இதுவே நல்ல அதிர்ஷ்டத்தை அவர்களுக்கு தரும். 


6)  8 தேதிகளில் கடைப்பிடிக்கும் மௌனம் மற்றும் இறைவழிபாட்டில் கிடைக்கும் அதிர்ஷ்டத்தையும் மனநிம்மதியையும்  1, 4, 5 மற்றும் 6 தேதிகளில் நன்கு உணரலாம்.  


7) ஒவ்வொரு மாதங்களில் 8 தேதிகளை குறித்து வைத்து, தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வரும்பொழுது, அதுவே நல்ல அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் காட்டும்.


8) இருபத்தியோரு வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் இதை கடைபிடித்தால் போதுமானது. பொதுவாக கர்மா முழுமையாக வெளிப்பட ஆரம்பிக்கும் வயது இதுவே.  சில விதிவிலக்கும் உண்டு. அடியேன் எனக்கு மூன்று வயதிலேயே சனி திசை ஆரம்பித்து படாதபாடு பட்டேன்.  மனிதர்களின் உச்சக்கட்ட கர்மாவைக் கண்டு, மனித வாழ்வின்  நோக்கத்தை, சிறு வயதிலேயே நன்கு கற்று தேற வைத்தார் ஆசான் சனீஸ்வர பகவான்.  சனிபகவானே என் வாழ்வின் முதல் ஆசிரியர்.  ஒருவேளை இந்த வயதில் எனக்கு ஆசான் இந்த பாடத்தை நடத்தாமல் இருந்திருந்தால், நான் ஒழுங்கற்றவனாக மாறியிருப்பேன். 














9)  8 தேதிகளில் செய்யப்படும் நல்ல காரியங்களும், உலக விஷயங்களும் நீண்டநாள் வெற்றியைத் தருவதில்லை. அது விரைந்த தோல்வி, நஷ்டம், மனம் மற்றும் உடல் துன்பத்தைக் காட்டுகிறது.


10) நீங்கள் பணி செய்பவராயின், இந்த எட்டு தேதிகளை ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி இயன்றவறை விடுப்பு எடுத்து, மௌனம் மற்றும் இறை வழிபாடு செய்யலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் உங்களுக்காக வாழும் உன்னதமான நாட்கள் இதுவே. உங்களுக்கு வாசியோகம் தெரிந்தால் இன்னும் சிறப்பு.


11) உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தடை விதித்தால், அவர்கள் நலனுக்காகவே இந்த மௌன விரதத்தை நீங்கள் கடைப்பிடிப்பதாக சொல்லுங்கள். அவர்கள் ஒத்துக் கொள்வார்கள். அவர்களின் உடல்நலம் மன நலத்திற்கு தான் இதை நீங்கள் செய்வதாக சொல்லி விடுங்கள். அல்லது உங்கள் உடல் நலம், மன நலம் மற்றும் பண வரவிற்காக செய்வதாக சொல்லுங்கள். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும், அனைவரும் அமைதியாகி விடுவார்கள்.


12)  துரோகம், பாவச்செயல், ஒழுக்கமற்ற செயல், சூதாட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு 8 தேதிகள் மிகவும் அதிர்ஷ்டத்தைக்  கொடுப்பது போல் ஆசைகாட்டி, அவர்களை மீளவே முடியாத துன்பத்திற்கு இட்டுச்செல்லும்.



































1

3) தர்ம சிந்தனையும், நல்ல எண்ணங்களும் கொண்டவர்கள் 8 தேதிகளில் அதிக துன்பத்திற்கு ஆளாவது இயல்பு. ஏனெனில் அந்த நாட்களில் அவர்களின் கர்மா துரிதமாய் வெளியேற முயற்சி செய்யும். எது சத்தியம் எது நிலையற்றது என்ற ஞானத்தைக் கற்றுக்கொள்வார்கள். அதனாலேயே அவர்களை நான் மௌனம் மற்றும் இறைவழிபாட்டில் கவனம் செலுத்தச் சொல்கிறேன்.

14) மௌனம் என்றால் வாயை மட்டும் மூடிக்கொள்வது அல்ல. இயன்றவரை புறவிசயங்களில் இயங்காமல், இறைசிந்தனையோடு நாள் முழுவதும் இருப்பதாகும்.

15) என்னதான் வாயை மூடி மௌனம் கடைபிடித்தாலும், எண்ணங்கள் அதிவேகமாய் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். இதுவே சிறப்பு. அந்த எண்ணங்களை கவனியுங்கள். நம் உயிரைச் சூழ்ந்த கர்மாவின் வெளிப்பாடாக அது இருக்கும். எண்ணங்களை மீண்டும் மீண்டும் இறைவனை நோக்கி செலுத்துங்கள். அன்றய பகலில் உறங்கிவிடாதீர்கள். ஞானம் சார்ந்த புத்தகங்கள் சிறிது நேரம் படிக்கலாம்.


16)  8 எண்ணை உலக விசயங்களுக்கு அதிர்ஷ்டமான எண்ணாக கருதும் நாடு எது தெரியுமா? அது உங்களுக்கு தெரிந்தாலே நான் அதிகம் சொல்ல தேவையில்லை, அனைத்தையும் நீங்களே புரிந்துகொள்வீர்கள். கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்.























17)  இறைவன் என்னும் போலீஸ் அதிகாரி, தீயவர்களை அடையாளம் காண மாறுவேடத்தில் வீரியமாய்க் காத்திருக்கும் நாட்களில், நல்லவர்கள் மௌனமாய் செயல் இழந்து இருப்பார்கள். அடியேன் நான், சீட் பெல்ட் போடவில்லை,  ஒரிஜினல் லைசன்ஸ், காரின் கண்ணாடி ஒளி ஊடுருவும் தரத்தில் இல்லை, அறியாமல் ஒருவழிப்பாதையில் வந்தேன்  -  என பலமுறை அபராதம் செழுத்திய நாட்கள் இந்த 8 தேதிகளே. இத்தனைக்கும் பதில் சொல்லிவிட்டு சாலையைக் கடக்க முற்ப்பட்டபோது, "பாதாள சாக்கடை உடைந்ததால் மாற்றுப் பாதையில் செல்லவும்" என தடுப்புப் பலகை இருக்கும். இத்தனை சோதனை செய்த அந்த அதிகாரி இதை முன்பே சொல்லியிருந்தால் நான் அப்படியே திரும்பியிருப்பேனே...

நான் அதிக அனுபவ பாடங்களையும் கற்றிருக்கிறேன்.  அந்த அதிகாரி, அந்த நாளில், "போலீஸா... பொறுக்கியா..." என்ற சினிமா வசனத்திற்கேற்றபடி கெடுபிடியாகத்தான் இருப்பார்.


18) நீங்கள் நன்கு கவனித்துப் பார்த்தால், இந்த நாட்களே உங்களுக்கு அதிக கோபம், வாய் தகராறு, அடிதடி எண்ணங்கள் அதிகமாய் இருக்கும். மௌனத்திற்குள் ஓடிவிடுங்கள் என் செல்லக்குட்டிகளே. போலிஸ் அதிகாரி வந்துகொண்டிருக்கிறார். கவனம்.









19)  ஒருவர் 8 தேதிகளில் இயல்பாகவே சோதனைகளை அனுபவிக்கிறார் எனில் அவருக்கு சூரியனின் ஆற்றல் மிகுந்து கிடைக்கிறது என்று பொருள். அவர் கூடிய விரைவில் அற்புதமான பொருட் செல்வத்தையும் அருட் செல்வத்தையும் பெறப் போகிறார் என்ற மகிழ்வான செய்தியை, எனது அனுபவத்தின் மூலம் சொல்கிறேன்.  இந்த நாட்களில் மௌனத்துடன் கூடிய தியானத்தில் ஈடுபட்டால் சூரிய ஆற்றல் பல மடங்கு பெருகும்.




20) திருமணத்திற்காக காத்திருக்கும் என் செல்லக் குழந்தைகளுக்கான பதிவை கீழே எழுதியுள்ளேன்.

http://fireprem.blogspot.com/2021/07/blog-post_20.html?m=1


21) ஈஸ்வர தியானத்திற்கு பௌர்ணமி, பிரதோசம், ஷஷ்டி போன்ற பல சுப நாட்கள் இருந்தாலும்,  8 தேதிகள் தியானத்திற்கு அதிக பலன் அளிக்கும். ஏனெனில் அந்த நாட்களே நம் கர்மா வீரியமாய், நம் எண்ணங்களாக வெளிப்பட முயற்சிக்கும். அதை மௌனமாய் நாம் கவனித்தாலே போதும்.


கலியுக எண் சாஸ்திரத்திற்கான என் மானசீக குரு தெய்வத்திரு பண்டிட் சேதுராமன் அய்யா பாதம் பணிந்து நன்றி தெரிவித்து இப்பதிவை நிறைவு செய்கிறேன்.














இப்படிக்கு உங்கள்,

அகத்திய பக்தன்.



ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

நாதம் என் வேதமே

 நாதம் என் வேதமே

ஓம் அகத்தீசாய நமஹ.


 இந்த பதிவு உங்களுக்கோ அல்லது உங்கள் குழுவுக்கோ எந்த அளவுக்கு பொருந்தும் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் யாரோ ஒருவருக்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பது குருநாதரின் விருப்பமாக இருக்கலாம்.  இப்பதிவில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு சிறு குறிப்பு அல்லது சிறிய அனுபவமோ உங்களுக்கு உபயோகமாக இருப்பின் அது குரு நாதரின் அருளாகவே இருக்கும்.















கடந்த 2015ஆம் வருடம் மே மாதம், குருநாதர் அருளால் எனக்குக் கிடைத்த அனுபவத்தை முந்தைய பதிவில் எழுதினேன்.  ஆனால் அதில் எழுதாமல் விடுபட்ட "நாதம்" என்ற பகுதியை இங்கு எழுதுகிறேன்.   பொதுவாக இது போன்ற யோக அனுபவங்களை பதிவாக எழுதும் பொழுது, எனக்கு ஏதோ நிறைய சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் குற்ற உணர்வாய் தோன்றும். அதனால் இயன்றவரை எழுதாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருப்பேன். எனினும் குருநாதர் ஆழ்மனதில் இருந்து இதற்கான தூண்டுதலை கொடுத்துக்கொண்டே இருப்பார். ஒரு வேளை யாரோ ஒருவருக்கு இந்த தகவல் தேவைப்படலாம் என்று கருதியே இப்பதிவை இங்கு எழுதுகிறேன்.

















 அந்த விந்தையான யோக அனுபவத்திற்கு பின் எனக்கு சிரசில் ஒரு ரீங்கார ஒலி கேட்க ஆரம்பித்தது.  அது சில நேரங்களில் வீரியமாக கேட்டது, சில நேரங்களில் மிதமாக கேட்டது.  ஆரம்பத்தில் நான் அதை, அறையை சூடேற்றும் கருவியின் ஓசை என்று நினைத்தேன்.  ஏனெனில் ஜெர்மனியில் வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்து இடங்களிலும் சூடேற்றும் கருவி இயங்கிக் கொண்டே இருக்கும். சில தினங்கள் கழித்து அந்த வினோத ஒலி எனக்கு மட்டும் கேட்கிறது என தோன்றியது.  இதை உறுதிப்படுத்த ஜெர்மனில் என்னுடன் பணிபுரியும் பிரசன்னாவிடம் லேசாக தயக்கத்தோடு கேட்டேன். அவர் தனக்கு அப்படி ஏதும் ஒரு வினோத ஒலி கேட்கவில்லையே என்றார்.  அதற்கு பிறகுதான் எனக்கு சிறிது குழப்பமாக இருந்தது. ஏன் இந்த ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது?  குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நான் ஏதோ செய்யக் கூடாத யோகப் பயிற்சியை செய்து விட்டோமோ என சிறிது கவலை வந்தது.  எனினும் யோகப் பயிற்சியை தினமும் கடைப்பிடித்தேன்.  அவ்வாறு பயிற்சி செய்வது எனக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. மேலும் அந்த கடும் குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது யாரிடம் இதைப்பற்றி கேட்கலாம் என யோசித்தேன்.  நமது குரு நாதரின் அருள் பெற்ற தவயோகி தங்கராசன் அடிகளாரிடம் கேட்கலாம் என தோன்றியது. ஆனால் அவர் பயிற்சியின் முழு விவரத்தையும் கேட்பாரே ? என்ன பதில் சொல்வது, என கவலைப்பட்டேன்.  நான் விரும்பி யோகப் பயிற்சி செய்யவில்லை, எனக்கு எந்த மனிதகுருவும் இல்லை, என்பதை அவர் எப்படி நம்புவார்? நான் பயிற்சி செய்யவில்லை, மாறாக பயிற்சி செய்ய பணிக்கப்பட்டேன்.   எனினும் அவரிடம் மின்னஞ்சல் மூலமாக கீழ்க்கண்டவாறு கேட்டேன் நான் எதிர்பார்த்தது போல் அவரும் மேலும் அதிக விவரங்களை கேட்டார். என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே பதில் சொல்லாமல் விட்டு விட்டேன்.



கூகுள் தேடலில் இதன் பெயர் Tinnitus என்ற காது நரம்பு பாதிப்பு என பயமுறுத்தியது.  எனினும் பயிற்சியை நிறுத்த மனமில்லை, வருவது வரட்டும், ஆறிலும் சாவு நூறிலும் சாவு தான்.  மரணமே வந்தாலும் குருநாதரின் பாதத்தை தானே அடையப் போகிறேன், என தொடர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.  எப்போதும் நீங்காத ஒலி எனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது.  கடந்த 2018ம் ஆண்டின் இறுதியில் "பாண்டிச்சேரி ஞானாலயம்"  உயர் ஆன்மாக்களின் நூல்களை படிக்க ஆரம்பித்த பிறகுதான் இந்த வினோத ஒலியின் பெயர் "நாதம்" என்று தெரிந்து கொண்டேன். எங்கு செல்கிறோம், எப்படி செல்கிறோம் என்ற சரியான தெளிவு இல்லாத எனக்கு பாண்டிச்சேரி அன்பாலயம் நூல்களை  காட்டிக்கொடுத்த நம் குருநாதரின் பாதங்களை பணிந்து நன்றி தெரிவித்தேன்.  

நான் மந்திர தீட்சை பெற்ற பின் அந்த மந்திரத்தை எனது முந்தைய பதிவான "அனுபவ ஞானம் - மந்திரம்" என்ற பதிவில் உள்ளபடி கும்பகப் பிராணாயாமத்தை சேர்த்து சிறிது சிறிதாக பயிற்சி செய்ய ஆரம்பித்தேன் இது எனக்கு ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்த நாதத்தை நன்கு வீரியமான ஓங்கிய ஒலியாக செவிமடுக்கச் செய்தது.  இது என் தனிப்பட்ட சுய முயற்சிதான். இதை யார் செய்யலாம் யார் செய்யக்கூடாது என்பதை நீங்களே குருநாதரை தியானம் செய்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்தவரை அதற்கான ஆன்ம தகுதிகளை அதே பதிவில் எழுதியுள்ளேன். இறைவனின் அருளை பெறுவதற்கு நிபந்தனையற்ற அன்பு மட்டுமே மட்டுமே போதுமானது. கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

 கும்பக பிராணாயாமத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கீழ்கண்ட எனது அனுபவ முறைகளை முயற்சி செய்யலாம். இது நாதத்தை மேலும் மெருகேற்றும். இப்பயிற்சியின் விளைவுகளையும் நீங்கள் தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும். உங்கள் உடலுக்கு ஒத்து வருமா என்பதை யோசித்து முடிவு எடுங்கள்.
ரேசகம் - ஒரு மந்திரம் அளவு
 பூரகம் - இரண்டு மந்திரங்களின் அளவு 
கும்பகம் - நான்கு மந்திரங்களின் அளவு

 மேலே உள்ள பயிற்சியில் நன்கு தேறியவர்கள் ( குறைந்தது ஒரு மண்டல காலம்)  மேலும் முன்னேற விரும்புபவர்கள் கீழ்கண்ட அடுத்த பயிற்சி முறையையும் செய்து பார்க்கலாம்.
 ரேசகம் - ஒரு மந்திர அளவு
 பாஹ்ய கும்பகம் - ஒன்று அல்லது இரண்டு மந்திரங்களின் அளவு
 பூரகம் - இரண்டு மந்திரங்களின் அளவு
 கும்பகம் - நான்கு மந்திரங்களின் அளவு

 இவ்வித பயிற்சிகளின் விளைவாக அடிவயிற்றில் நாய்க்குட்டி ஒன்று  முனங்கும் ஓசை கேட்கும். மேலும் வயிற்றில் இரைச்சல்,  வீரியமான எண்ணங்களின் வெளிப்பாடு பிறகு எண்ணங்கள் மெல்ல மெல்ல அடங்கும். சிறிது சிறிதாக உலக வாழ்க்கை வெறுக்க ஆரம்பிக்கும். இந்த பயிற்சியின் பின் சுழுமுனை தியானம் செய்யும்போது நாசியில் சுவாசம் சிறிது சிறிதாக ஸ்தம்பிப்பதையும், நாதத்தில் சில மாற்று சுருதிகள் மற்றும் ஓசை வேறுபடுவதையும் நன்கு உணரலாம். உள்ளாடைக்குள்ளிருந்து பஞ்சுகள் உட்புறமாக உறிஞ்சப்பட்டு உடலில் ஒட்டியிருக்கும். உடல் உருகி கிட்டத்தட்ட மரணத்தை நோக்கிய பாதைதான். அதனாலேயே பல ஞானிகளும் சித்தர்களும் இதை வேண்டாம் என அறிவுறுத்தினார்கள்.
 மேற்கண்ட பயிற்சியில் நன்கு தேறியபின், சில யோகிகள், குருநாதர் அருளால் உச்சிஷ்ட கணபதி நுணுக்கங்கத்தோடு ஹடயோகம் முத்திரைகளும் சேர்ந்த பயிற்சிகளை செய்வார்கள். இதை மனிதர்கள் சொல்வது நிச்சயம் சாபத்தை கொடுக்கும் இதை சுழுமுனை நாடியில் குருநாதரே நின்று உபதேசிப்பார்.  இன்னும் சில யோகிகள் இந்த யோகப் பயிற்சிகளோடு பாதரசத்தையும் உபயோகம் செய்வார்கள். பாதரசம் என்பது ஒரு விஷம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். எனினும் அந்த யோகியர்கள் இது போன்ற பயிற்சிகளை ஆபத்து என நன்கு தெரிந்தும் செய்வார்கள்.

 சரி, மீண்டும் எனது அனுபவத்திற்கு வருவோம். எப்போதும் எனக்கு கேட்டுக் கொண்டிருந்தத ரீங்கார நாதம்,  சில ஆண்டுகளில் மாற்றத்தை உணர முடிந்தது. ஒரு முறை மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி ஆலயத்திற்கு மகா சண்டி யாகத்திற்காக சென்றபோது, இறுதி நாள் மாலை அமைதியாக யாக சாலைக்கு அருகே அமர்ந்து நாதத்தோடு தியானம் செய்து கொண்டிருந்தேன். வழக்கமான நாதத்தில் ஆச்சர்யமான மாற்றம் இருந்தது. அப்போது குழம்பு கொதிக்கும் தலபுல சத்தம் கேட்க ஆரம்பித்தது.  இன்னும் உன்னிப்பாக கவனித்ததில் அது மத்தள நாதமாக கேட்டது. இது சில சமயம் டம்டம் என வீரியமாகவும் கேட்கும்.  அதே ஆலயத்தின் ஸ்தல விருட்சமான தான்றி மரத்திற்கு அடியில் பகல்பொழுதில் தியானம் செய்யும் பொழுது வழக்கமான ரீங்கார நாதம், வீணை நாதமாக மாற்றமடைவதை கவனிக்க முடிந்தது.

நாதத்தில் இன்னும் பல படிநிலைகள் கடக்கவேண்டி உள்ளது. குருநாதர் பாதம் போற்றி.  என்னைப் போன்று பல விதமான வேறுபட்ட மார்க்கங்களை சார்ந்தவர்களும், பாண்டிச்சேரி ஞானாலயத்தில் தீட்சைகளைப் பெற்று ஆன்ம முன்னேற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  

 மேலும் சில கேள்வி பதில்களையும் இங்கு பார்ப்போம். நானே எனது அனுபவத்தை, சுய புராணமாய் பாடிக் கொண்டே இருப்பதில் என்ன பலன் ?  உங்களுக்கும் ஏதாவது ஒரு சிறு குறிப்பாவது இங்கே உபயோகமாகும் என்று நம்புகிறேன். நீங்களும் குருநாதர் அருளால் நாதத்தை செவிமடுக்க வேண்டும், என்பதே எனது விருப்பம்.

கேள்வி பதில்.

1) மேற்கண்ட பயிற்சி செய்பவரின் உணர்வுநிலை என்ன?

பாடல் பதிவாக.

http://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1


2) உச்சிஷ்ட கணபதி நுணுக்கம் என்றால் என்ன?

http://fireprem.blogspot.com/2022/03/blog-post.html?m=1


3) ஞானம் பெறுவதற்க்கு இவ்வளவு கஷ்டமான பயிற்சிகள் அவசியமா?

 அவசியம் இல்லை. எளிதாகவே ஞானத்தை பெறலாம். அடியேன் நான் இந்த இந்த பயிற்சிகளை செய்வேன் என்று ஆன்ம நிர்ணயம் கொண்டு பிறவி எடுத்தால் அதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

http://fireprem.blogspot.com/2018/10/blog-post.html?m=1


4) 2015 ஆம் ஆண்டில் கிடைத்த யோக அனுபவம் என்ன?

http://fireprem.blogspot.com/2018/11/blog-post_29.html?m=1


http://fireprem.blogspot.com/2017/03/2017.html?m=1


5) அனுபவ ஞானம் - மந்திரம். பதிவில் என்ன உள்ளது?

http://fireprem.blogspot.com/2021/10/2.html?m=1


6) கும்பக பிராணாயமத்திற்கான ஆன்ம தகுதி என்ன?

http://fireprem.blogspot.com/2021/08/?m=1


7) கும்பகம் பற்றி சித்தர்களின் கருத்து என்ன? செய்யலாமா   கூடாதா?

https://fireprem.blogspot.com/2017/03/blog-post.html?m=1


8) நாதம் செவிமடுக்க, மற்ற யோகிகள் எழுதிய எளிய நுணுக்கங்கள்.

http://tamilmarmayogam.blogspot.com/2015/06/blog-post_25.html


https://psychologicallyastrology.com/2020/03/09/sounds-heard-during-mediation/


https://www.yogameditation.com/reading-room/nada-yoga/


http://www.ipn.at/ipn.asp?BJE


https://auromere.wordpress.com/2010/02/12/the-subtle-sounds-which-indicate-progress-in-yoga/


https://medium.com/@anamcaramanila/the-subtle-sounds-which-indicate-progress-in-yoga-d13a599c8dc0


9) உயர்ந்தது எது? குருநாதரா? நுணுக்கங்களா?

http://fireprem.blogspot.com/2018/08/blog-post.html?m=1


10) ஒருவர் பொதுவாக, எந்தக் காலகட்டத்தில் ஞானத்தைத் தேடுவார்?























http://fireprem.blogspot.com/2017/09/blog-post.html?m=1



இப்படிக்கு,

அன்புடன்

அகத்திய பக்தன்.