எட்டிலே கிட்டும் அதிர்ஷ்டம்
எனது முந்தைய பிறவிகளில் நான் பெற்று வளர்த்த எனது குழந்தைகளே இப்போது என்னிடம் நேரடியாகவோ அல்லது எண்ணங்களின் மூலமோ ஆன்ம தொடர்பில் இருக்கிறார்கள். எனது இருபது ஆண்டுகால அனுபவத்தை இயன்ற அளவு சுருக்கி எனது குழந்தைகளுக்காக இப்பதிவை எழுதி வைக்கிறேன். இந்தப் பதிவு எனது வாழ்விலும், என்னை சூழ்ந்து இருக்கும் எனது உறவினர்கள் நண்பர்கள் உடன் பணிபுரிபவர்களின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஆய்வு செய்து எழுதப்பட்ட ஒரு ஆழ்ந்த அனுபவ பதிவு. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்றால் என்னால் நிரூபிக்க முடியாது.
.jpeg)

இந்த கலியுகத்தில் ஆங்கில தேதியான 8 தேதிகளில் அதாவது 8, 17, 26 இந்த மூன்று தேதிகள் அவ்வளவாக சிறப்பு பொருந்தியதாக கருதப்படுவதில்லை. இந்த மூன்று தேதிகளும், மேலும் 8 என்ற எண்ணையும் கூட துரதிஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உண்மையில் 8 தேதியின் சிறப்புகளை பிறகு நன்கு ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்தேன். உண்மையில் 8 தேதிகள் பயந்து ஓட வேண்டிய தேதிகள் அல்ல. இந்த தேதிகள் மிகவும் அதிர்ஷ்டமான தேதிகளாக எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிந்து இருக்க வேண்டும்.
சரி இனி பதிவின் முக்கிய நோக்கமான முக்கிய குறிப்புகளை கீழே ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக பார்க்கலாம்.
1) 8 தேதிகள் என்றால், 8 17 மற்றும் 26ஆம் தேதிகளைக் குறிக்கும்.
2) இதைப்போல் 1 தேதிகள் என்றால், 1 10 மற்றும் 19 இந்த மூன்று தேதிகளை குறிக்கும்.
3) கலியுக எண் சாஸ்திரப்படி 8 எண், கர்மாவை நீக்கும் அல்லது சேர்க்கும் எண்ணாக கருதப்படுகிறது.
4) ஒவ்வொரு எட்டு தேதிகளை நாம் இயன்றளவு மௌனத்தோடு கூடிய இறை வழிபாடு மற்றும் தியானத்திற்கு மட்டும் உபயோகப்படுத்துவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும், மேலும் நமது பிறவி கர்மாவையும் விரைந்து நீக்கும்.
5) 8 தேதிகளில் இயன்ற அளவு உலக விஷயங்கள், முக்கிய வேலைகளை செய்தல், புதிய நல்ல காரியங்களை துவங்குதல் போன்ற செயல்களை செய்வதை தவிர்ப்பது மிக மிக நல்லது. இதுவே நல்ல அதிர்ஷ்டத்தை அவர்களுக்கு தரும்.
6) 8 தேதிகளில் கடைப்பிடிக்கும் மௌனம் மற்றும் இறைவழிபாட்டில் கிடைக்கும் அதிர்ஷ்டத்தையும் மனநிம்மதியையும் 1, 4, 5 மற்றும் 6 தேதிகளில் நன்கு உணரலாம்.
7) ஒவ்வொரு மாதங்களில் 8 தேதிகளை குறித்து வைத்து, தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வரும்பொழுது, அதுவே நல்ல அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் காட்டும்.
8) இருபத்தியோரு வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் இதை கடைபிடித்தால் போதுமானது. பொதுவாக கர்மா முழுமையாக வெளிப்பட ஆரம்பிக்கும் வயது இதுவே. சில விதிவிலக்கும் உண்டு. அடியேன் எனக்கு மூன்று வயதிலேயே சனி திசை ஆரம்பித்து படாதபாடு பட்டேன். மனிதர்களின் உச்சக்கட்ட கர்மாவைக் கண்டு, மனித வாழ்வின் நோக்கத்தை, சிறு வயதிலேயே நன்கு கற்று தேற வைத்தார் ஆசான் சனீஸ்வர பகவான். சனிபகவானே என் வாழ்வின் முதல் ஆசிரியர். ஒருவேளை இந்த வயதில் எனக்கு ஆசான் இந்த பாடத்தை நடத்தாமல் இருந்திருந்தால், நான் ஒழுங்கற்றவனாக மாறியிருப்பேன்.
.jpeg)
9) 8 தேதிகளில் செய்யப்படும் நல்ல காரியங்களும், உலக விஷயங்களும் நீண்டநாள் வெற்றியைத் தருவதில்லை. அது விரைந்த தோல்வி, நஷ்டம், மனம் மற்றும் உடல் துன்பத்தைக் காட்டுகிறது.
10) நீங்கள் பணி செய்பவராயின், இந்த எட்டு தேதிகளை ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி இயன்றவறை விடுப்பு எடுத்து, மௌனம் மற்றும் இறை வழிபாடு செய்யலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் உங்களுக்காக வாழும் உன்னதமான நாட்கள் இதுவே. உங்களுக்கு வாசியோகம் தெரிந்தால் இன்னும் சிறப்பு.
11) உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தடை விதித்தால், அவர்கள் நலனுக்காகவே இந்த மௌன விரதத்தை நீங்கள் கடைப்பிடிப்பதாக சொல்லுங்கள். அவர்கள் ஒத்துக் கொள்வார்கள். அவர்களின் உடல்நலம் மன நலத்திற்கு தான் இதை நீங்கள் செய்வதாக சொல்லி விடுங்கள். அல்லது உங்கள் உடல் நலம், மன நலம் மற்றும் பண வரவிற்காக செய்வதாக சொல்லுங்கள். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும், அனைவரும் அமைதியாகி விடுவார்கள்.
12) துரோகம், பாவச்செயல், ஒழுக்கமற்ற செயல், சூதாட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு 8 தேதிகள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுப்பது போல் ஆசைகாட்டி, அவர்களை மீளவே முடியாத துன்பத்திற்கு இட்டுச்செல்லும்.
1
3) தர்ம சிந்தனையும், நல்ல எண்ணங்களும் கொண்டவர்கள் 8 தேதிகளில் அதிக துன்பத்திற்கு ஆளாவது இயல்பு. ஏனெனில் அந்த நாட்களில் அவர்களின் கர்மா துரிதமாய் வெளியேற முயற்சி செய்யும். எது சத்தியம் எது நிலையற்றது என்ற ஞானத்தைக் கற்றுக்கொள்வார்கள். அதனாலேயே அவர்களை நான் மௌனம் மற்றும் இறைவழிபாட்டில் கவனம் செலுத்தச் சொல்கிறேன்.
14) மௌனம் என்றால் வாயை மட்டும் மூடிக்கொள்வது அல்ல. இயன்றவரை புறவிசயங்களில் இயங்காமல், இறைசிந்தனையோடு நாள் முழுவதும் இருப்பதாகும்.
15) என்னதான் வாயை மூடி மௌனம் கடைபிடித்தாலும், எண்ணங்கள் அதிவேகமாய் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். இதுவே சிறப்பு. அந்த எண்ணங்களை கவனியுங்கள். நம் உயிரைச் சூழ்ந்த கர்மாவின் வெளிப்பாடாக அது இருக்கும். எண்ணங்களை மீண்டும் மீண்டும் இறைவனை நோக்கி செலுத்துங்கள். அன்றய பகலில் உறங்கிவிடாதீர்கள். ஞானம் சார்ந்த புத்தகங்கள் சிறிது நேரம் படிக்கலாம்.
16) 8 எண்ணை உலக விசயங்களுக்கு அதிர்ஷ்டமான எண்ணாக கருதும் நாடு எது தெரியுமா? அது உங்களுக்கு தெரிந்தாலே நான் அதிகம் சொல்ல தேவையில்லை, அனைத்தையும் நீங்களே புரிந்துகொள்வீர்கள். கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்.

.jpeg)
17) இறைவன் என்னும் போலீஸ் அதிகாரி, தீயவர்களை அடையாளம் காண மாறுவேடத்தில் வீரியமாய்க் காத்திருக்கும் நாட்களில், நல்லவர்கள் மௌனமாய் செயல் இழந்து இருப்பார்கள். அடியேன் நான், சீட் பெல்ட் போடவில்லை, ஒரிஜினல் லைசன்ஸ், காரின் கண்ணாடி ஒளி ஊடுருவும் தரத்தில் இல்லை, அறியாமல் ஒருவழிப்பாதையில் வந்தேன் - என பலமுறை அபராதம் செழுத்திய நாட்கள் இந்த 8 தேதிகளே. இத்தனைக்கும் பதில் சொல்லிவிட்டு சாலையைக் கடக்க முற்ப்பட்டபோது, "பாதாள சாக்கடை உடைந்ததால் மாற்றுப் பாதையில் செல்லவும்" என தடுப்புப் பலகை இருக்கும். இத்தனை சோதனை செய்த அந்த அதிகாரி இதை முன்பே சொல்லியிருந்தால் நான் அப்படியே திரும்பியிருப்பேனே...
நான் அதிக அனுபவ பாடங்களையும் கற்றிருக்கிறேன். அந்த அதிகாரி, அந்த நாளில், "போலீஸா... பொறுக்கியா..." என்ற சினிமா வசனத்திற்கேற்றபடி கெடுபிடியாகத்தான் இருப்பார்.
18) நீங்கள் நன்கு கவனித்துப் பார்த்தால், இந்த நாட்களே உங்களுக்கு அதிக கோபம், வாய் தகராறு, அடிதடி எண்ணங்கள் அதிகமாய் இருக்கும். மௌனத்திற்குள் ஓடிவிடுங்கள் என் செல்லக்குட்டிகளே. போலிஸ் அதிகாரி வந்துகொண்டிருக்கிறார். கவனம்.
19) ஒருவர் 8 தேதிகளில் இயல்பாகவே சோதனைகளை அனுபவிக்கிறார் எனில் அவருக்கு சூரியனின் ஆற்றல் மிகுந்து கிடைக்கிறது என்று பொருள். அவர் கூடிய விரைவில் அற்புதமான பொருட் செல்வத்தையும் அருட் செல்வத்தையும் பெறப் போகிறார் என்ற மகிழ்வான செய்தியை, எனது அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். இந்த நாட்களில் மௌனத்துடன் கூடிய தியானத்தில் ஈடுபட்டால் சூரிய ஆற்றல் பல மடங்கு பெருகும்.
20) திருமணத்திற்காக காத்திருக்கும் என் செல்லக் குழந்தைகளுக்கான பதிவை கீழே எழுதியுள்ளேன்.
http://fireprem.blogspot.com/2021/07/blog-post_20.html?m=1
21) ஈஸ்வர தியானத்திற்கு பௌர்ணமி, பிரதோசம், ஷஷ்டி போன்ற பல சுப நாட்கள் இருந்தாலும், 8 தேதிகள் தியானத்திற்கு அதிக பலன் அளிக்கும். ஏனெனில் அந்த நாட்களே நம் கர்மா வீரியமாய், நம் எண்ணங்களாக வெளிப்பட முயற்சிக்கும். அதை மௌனமாய் நாம் கவனித்தாலே போதும்.
கலியுக எண் சாஸ்திரத்திற்கான என் மானசீக குரு தெய்வத்திரு பண்டிட் சேதுராமன் அய்யா பாதம் பணிந்து நன்றி தெரிவித்து இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு உங்கள்,
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக