பிள்ளை நிலா - கர்ம ஞான சூத்திரம்
பதிவிற்கான உங்கள் மனதிடம் சில கேள்விகள்.
1) ஒரு தாயாரும் தந்தையாரும் தன் மகனைப் பற்றிய அதிக மன கவலையோடு வாழ்கிறார்கள். தாயாருக்கே மிகவும் அதிக மன வேதனை. மகனுக்கு ஒரு தீவிரமான நோய் தாக்கத்தால் துன்பப்படுகிறான். அதை பார்த்து தாய்க்கு வேதனை தாங்க முடியாமல் தினமும் துன்பமாக உள்ளது. இதற்கான மூல காரணம் மற்றும் சரியான தீர்வு என்ன?
2) ஒரு தாயார் தனது மகளுக்கு நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லை என மனவேதனை கொள்கிறாள். மூல காரணமும் தீர்வும் என்ன?
3) ஒரு தாயார் தனது மகள் நன்றாக படிக்கக் கூடிய புத்திசாலித்தனம் இருந்தும் படிக்க மாட்டேன் என பிடிவாதமாய் இருக்கிறாள். தாயாருக்கு இதனால் நீண்ட மன உளைச்சலும் வேதனையும் தினமும் உள்ளது. மூல காரணமும் தீர்வும் என்ன?
4) ஒரு தாய்க்கோ அல்லது தந்தைக்கோ தன் மகனுக்கு நீண்ட காலமாக வேலை கிடைக்கவில்லை என்ற மன வருத்தம் இருக்கிறது. மூல காரணமும் தீர்வும் என்ன?
குறிப்பு :
1) மூல காரணத்தையும் தீர்வையும், இதற்கு முன்னர் உள்ள பதிவுகளில், முக்கியமாக "மோட்ச தீப ஞானம்" என்ற பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2) உங்களுக்கு என்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற கர்ம விதியே, ஒரு நல்ல ஆன்மாவான மற்றொரு உறவின் மூலம் உங்கள் விதிக்கேற்ப மாற்றி, நீங்கள் துன்பத்தையும் மன உளைச்சலையும் அனுபவிக்கும் சூழலை உருவாக்கியது. அந்த உறவினர் மூலமாக இல்லாவிடினும் வேறு யார் மூலமாக வேணும் நீங்கள் விதிக்கப்பட்ட துன்பத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதுவே கர்மாவின் ராணி ஆன உங்கள் உயிர் வகுத்த விதி ( முற்பிறவியின் நடவடிக்கைகளால் பதியப்பட்டது ). உங்களுடைய துன்பம் உங்கள் உறவினரால்தான் வந்ததாக நினைப்பது மூடத்தனம். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இப்படிக்கு உங்கள்
அகத்திய பக்தன்
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக