செவ்வாய், 22 டிசம்பர், 2020

கோவில் காணிக்கைக்காக புத்தக ஏலம்

 ஓம் அகத்தீசாய நமஹ.





ஆன்மீக நண்பர்களே!

வரும் ஜனவரி இரண்டாம் தேதி காலை ( 2-Jan-2021 ) நமது குருநாதர் அகத்தியர் மகாசித்தருக்கு ஜனன நட்சத்திர பூஜை *வெள்ளக்கோவில் சித்தர்கள் சிவாலயத்தில்* நடக்க இருக்கிறது. இந்த நாளில் காலை நேரம் சுமார் 11 மணி அளவில் என்னிடம் உள்ள பழைய புத்தகங்களை கோயில் செலவிற்காக ஏலம் விடலாம் என திட்டமிட்டிருக்கிறோம். இதை மிகக் குறைந்த விலையில் ஏலம் விடுகிறோம். இதில் வரும் தொகை அனைத்தையும் கோயில் பராமரிப்பு செலவிற்கு காணிக்கையாக கொடுக்கலாம் என விரும்புகிறோம். இதுபோல நீங்கள் வைத்திருக்கும் பழைய புத்தகங்களையும் இங்கு கொண்டுவந்து ஏலம் விட்டு வரும் தொகையை கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்கலாம். இதன் மூலம் நமக்குள் புத்தக சுழற்ச்சி நடைபெறும், மேலும் கோயில் பராமரிப்பு செலவிற்கு காணிக்கை கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்.

 எனவே அனைவரும் தவறாமல் ஜனவரி இரண்டாம் தேதி காலை வெள்ளக்கோவிலில் உள்ள சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து நமது குருநாதரின்  அருளை பெற்று, புத்தகங்களையும் குறைந்த விலைக்கு பெற்றுச்செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கோவில் முகவரி :-

அகத்தியரின் சித்தர்கள் சிவாலயம்,  கரூர் மெயின் ரோடு, ஒத்தகடை பஸ் ஸ்டாப், நாட்ராயன் கோவில் வழி சாலை, கே வி பழனிசாமி நகர் அருகில், *வெள்ளகோவில்* திருப்பூர் மாவட்டம்.


🙏🙏🙏 மேற்கண்ட செய்தியை தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு இயன்றவரை தயவுசெய்து பகிருங்கள். அவர்கள் அருகே இருந்தால் வருவார்கள்.  

திருப்பூர், காங்கேயம், பல்லடம், கரூர், கோவை.

ஓம் அகத்தீசாய நமஹ

ஸ்ரீ அகத்தியர் குடும்பம், கோவை.

ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஆணவத்தைக் கொல்லும் வேல்

      குருநாதர் அருளால் பாண்டிச்சேரி ஞான ஆலயத்தில் குரு அம்மாவிடம் நான்கு முறை ஆறுமுக தீட்சை அடியேனுக்கு கிடைத்தது.  அதில் கடைசியாக கடந்த 8 மார்ச் 2020ல் தீட்சை எடுத்துக் கொண்டேன்.   ஆணவ அணுக்களை அன்று மட்டும் முழுமையாக முருகப்பெருமானே ஏற்றுக்கொள்ள சம்மதிப்பதாக  குரு அம்மா அறிவித்தார்.  இது எனக்கு ஒரு வித ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் கிளறியது.  ஏன் நம் குருநாதரே நம் ஆணவ அணுக்களை ஏற்று அழிக்க மாட்டாரா?,  இதற்கு ஏன் முருகப்பெருமான் வரவேண்டும்? என தோன்றியது.  நம் குருநாதரிடமே இந்த கேள்வியை அடியேன் சமர்ப்பித்தேன்.  

          இந்தப் பிரபஞ்சத்தையே தன் அறிவாக கொண்ட நம் குருநாதர் என் கேள்விக்கு பதிலாக காட்டியது, சுப்பிரமணியர் ஞானம் 32 என்ற நூலில் உள்ள பாடல்களை தான். நம் குருநாதர் திரேதாயுகத்தில் அவர் இமயமலையில் வடபாகத்தில் தவம் செய்யும்போது   முருகப்பெருமானை முதன் முதலாக சந்தித்திருக்கிறார்.  இந்த பாடலில் நம் குருநாதர் ஆணவத்தை அசுரர்கள் என்கிறார்.  இந்த ஆணவ அசுரர்கள், திரேதாயுகத்திலேயே உயர் ஆற்றல் கொண்ட தவத்தில் சிறந்த ரிஷி முனிவர்களைக்கூட பாடாய்படுத்தி கொடுமையான துன்பங்களை கொடுத்து முனிவர்களின் தவத்தை தொடர்ச்சியாக  தொந்தரவு செய்திருக்கிறார்கள்.  

        இந்த ஆணவ அசுரர்களின் கொடுமையான துன்பத்திலிருந்து தங்கள் தவத்தை காக்க அனைத்து ரிஷி முனிவர்களும் முருகப் பெருமானையே பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.  வேலவனே அந்த கொடிய ஆணவ அசுரர்களை கொன்று முனிவர்களின் தவத்தை காத்து அருளியிருக்கிறார்.   ஆணவ அசுரர்களால் திரேதா யுக ரிஷி முனிவர்களுக்கே இந்த நிலை என்றால் கலியுக எல்லையில் வாழும் நம் நிலையை சொல்லவா வேண்டும்? இன்றைக்கும் பல உயர் ஆன்மாக்களான ஞானிகள் மற்றும் தர்ம சீலர்களை, கலிபுருஷ பகவான் தனது ஆணவ அசுரப் படையை நயவஞ்சகமாக ஏவிவிட்டு அந்த ஞானிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கொடுமையை பலமுறை நானே பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன்.

 சுப்பிரமணியர் ஞானம் 32 என்ற குருநாதரின் நூலில்,  இந்த குறிப்பிட்ட  வரிகளை மட்டும் உங்களுக்காக ஒலித்துணுக்காக இணைத்திருக்கிறேன். இதை கேட்டு மகிழுங்கள். மேலும் இந்த பாடல் வரிகளையும் இணைத்திருக்கிறேன் படித்துப் பாருங்கள்.  

https://drive.google.com/file/d/11xwulAXRFdnW1HMEr7KufTM1RjdzwxrU/view?usp=drivesdk



{{

6. வாழென்று சொன்னவுடன் மயில்வீ ரன்தான் மகத்தான சிவசத்திபத மேற்கொண்டே
ஆவென்று மயிலேறிக் கயிலா சத்தை ஆவலுடன் சுற்றிவரும் போதி லேதான்
சூழென்றே இமயகிரி வடபா கத்திற் சுத்த சித்த மானதபோதனர்கள் கண்டு
தாள்பணிந்து வணக்கமதாய் நிற்கும் போது தபோதனர்கள் ரிடிகளுமே தாம்வந் தாரே.

7. வந்தவரைத் தான்பார்த்து வரையில் நிற்க மகத்தான சற்குருவென் றடிபணிந்தே
இந்தமலைச் சாரலிலே வெகுநா ளாக இன்பமுடன் தவஞ்செய்து வாழ்ந்தோமையா!
அந்தரமாய் ராட்சதர்கள் அண்டி வந்தே அலங்கோலஞ் செய்துமே துரத்துகின்றார்!
சுந்தரமாயிருந்து தவங் காவாய்! என்று சுத்த சித்தமாய்த் தவத்தைக் தொடங்கி னாரே.




8. தொடங்கிமன மடங்கிநிலை தன்னைக் காத்துச் சுத்தமுடன் நின்றுவிளை யாடும் போதில்
அடங்கிமன மடங்காத அசுரர் தாமும் அஞ்சாமல் அழும்புசெய்யு மகத்தைப் பார்த்துத்
திடங்கொண்டு மயிலேறிச் செவ்வேல் கொண்டு சிவந்துவரும் அசுரர்கிளை மாளவென்று
படங்குவித்து வேல்முனையைத் தியானம் பண்ணிப் பாயவிட அசுரர்கிளை பறந்து போச்சே!

9. பறந்துபோய்ப் பலவிதமாய் ரூபங் கொண்டு பந்திபந்தி யாங் அசுரர் பறந்து வந்தார்;
சிறந்துவந்த சேனைகளை நன்றாய்ப் பார்த்துத் தீர்க்கமுள்ள மயிலேறித் தெளிந்து நின்றே
அறந்தழைக்க வேணுமென்று தூல சூட்சம் அரூபமெனுங் காரணமாய் ரூபங் கொண்டு
நிரந்தரமாய் வந்தபொலா அசுரர் தம்மை நிர்த்தூளி செய்துதவம் நிலைகொண்டானே.

10. நிலைகொண்டு நின்றசெயங் கொண்டு சிந்தை நேர்மையுடன் தவஞ்செய்யு முனிவர் கண்டு
கலைகொண்டு மனந்தெளிந்து மகிழ்ச்சி யாகிக் கானமயில் வீரனடி கருதிப் போற்றித்
தலைகொண்டு தாள்பணிந்தே அருட்கண் பெற்றுத் தபோதனரும் ரிடிகளுமே தாம் பணிந்து
சிலைகொண்டு நின்றவடி வேலன் தன்னைத் தெரிசித்தே அவரவர்கள் பதிசென் றாரே.

11. பதிதேடி யவரர்கள் செல்லும் போது பத்தியுள்ள அகத்தியமா முனிவன் வந்து
விதியறிந்தே அசுரர்கிளை மாள வென்று வெற்றியுள்ள வடிவேலைத் தியானம் பண்ணிக்
கெதியறிந்து தூலமுடன் சூட்சமாகிக் கிருபையுள்ள காரணமாம் ரூபங் கொண்டு
சதியறிந்து சங்காரஞ் செய்தா யையா சண்முகமே என்குருவே! சரணந்தானே

12. சரணமென்றே அகத்தியமா முனியைப் பார்த்துச் சண்முகமாய் நின்றவடி வேலன் தானும்



திரணமதாய்த் தானறிந்து, நீ யார்? என்னைத் திருவடியைப் பூசை செய்யுஞ் சேயன் என்றார்:

}}


 எல்லாம் சரிதான்!   இந்த கொடிய ஆணவத்தை நீக்க ஏதாவது நுணுக்கம் உள்ளதா?  என நீங்கள் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறது.   இது ஒன்றும் கடினமல்ல, சுலபமான நுணுக்கம்தான்.  கீழ்க்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி உங்கள் ஆணவ அணுக்களை எளிதில் நீங்கள் நீக்கலாம்.

(1)  பாவனை நுணுக்கம் - இதை பரத்வாஜ மகரிஷி அதாவது பரதவசி மகரிஷி தனது ஆகம வேதம் என்ற நூலில் தெளிவாக விவரித்துள்ளார். ஞான ஆலயத்தில் யூடியூப் லிங்கில் இதை எளிதாக புரியும்படி விளக்கி சொல்லி இருக்கிறார்கள். கீழ்க்கண்ட யூடியூப் லிங்கை அழுத்தி கேட்டுப்பாருங்கள்.


இந்த யூடியுப் வீடியோவில்  6.25 நிமிடத்திலிருந்து கேட்க ஆரம்பியுங்கள், முழுவதுமாக கேட்பது மிக மிக சிறப்பானது.

https://youtu.be/RYpKCABKqpg


https://enlightenedbeings.org/books


(2)   இயன்றவரை ஆதரவற்றோருக்கு தர்மம் செய்து அன்பு அணுக்களை பெருக்குதல்.   காக்கை குருவி போன்ற சிறிய உயிர்களுக்கு தினமும் சிறிது அரிசி அல்லது சாதம் வைத்து குடிக்க தண்ணீர் வையுங்கள்.   சிறிய உயிர் தானே என ஏளனமாய் எண்ணாமல் அவற்றிற்குள்ளும் ஈசனின் ஆன்மா உள்ளது, என பணிந்து வணங்குங்கள். இந்த பணிவு அன்பு அணுக்களை பெருக்கும்.


(3)  மயில் வீரன் ஆறுமுகப் பெருமானை சிரம்தாழ்த்தி சரணாகதமாக வணங்குங்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு நுணுக்கங்களும்  முருகப்பெருமான் உங்கள் சிரசில் வருவதற்கான தடைகளை நீக்கி நல்ல வழிவகை செய்யும்.


முருகப்பெருமானின் போற்றி சரணங்களை கீழே உள்ள பதிவில் அடியேன் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்.

https://fireprem.blogspot.com/2019/01/blog-post_29.html?m=0


 முருகப் பெருமான் மரமாய் நிற்கும் ஆணவத்தை தனது கூரான வேல் கொண்டு இரண்டாகப் பிளந்து ஒன்றை மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் மாற்றுகிறார் . மயில் என்பது பஞ்சபட்சி சாஸ்திரப்படி வான் தத்துவத்தை குறிக்கும் அதாவது ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும், சேவல் என்பது   மண் தத்துவத்தை குறிக்கும்.  அதாவது  பஞ்சாட்சரம் நமச்சிவாய இதில்  ந என்பது மண் தத்துவத்தை சேவலை குறிக்கும். ய என்பது வான் தத்துவத்தை அதாவது மயிலை குறிக்கும்.


 ஓம் சரவணபவ. 


 இப்படிக்கு 

அகத்திய பக்தன்







https://fireprem.blogspot.com/2019/01/blog-post_29.html?m=0


சனி, 10 அக்டோபர், 2020

ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை - பகுதி இரண்டு

 ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை - பகுதி இரண்டு.


        சமீபத்தில் சகோதரர் ஸ்ரீ சக்தி சுமனன் "ராம்பரசாதி காளி மீதான கவிதைகள்" பற்றிய அருமையான facebook பதிவுகளை அடியேன் படித்தேன். மிகவும் அபூர்வமான பாடல்களை தேடி கண்டுபிடித்து அதை அற்புதமாக தமிழில் வடித்து பொருளும் எழுதியிருக்கிறார் . இவர்தம் சிரசின் அணுக்களில் குருநாதரின் அருள் மின்னலாய் பாய்ந்து பாய்ந்து ஒளிர்வதை உணரமுடிகிறது . எனக்கு வழக்கம் போல் நம் குருநாதர் எப்படி ஆதிபராசக்தியோடு ஐக்கியமாகி அவளின் அருளை பெற்றார் என சொல்லத் தோன்றியது . சக்தி சுமனின் பதிவுக்கு கருத்து எழுத முயற்சித்து இங்கே ஒரு தனி பதிவு உருவானது .



        சென்ற பகுதியில், குருநாதர் அய்யா ஆதிபராசக்தியான ஒற்றை அணுவின் அருளை எந்த அளவிற்கு பெற்றவர் என "ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலின் சில குறிப்புகளிலிருந்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பகுதியில், குருநாதர் அய்யா எப்படி ஆதிபராசக்தியின் அருளைப்பெற்றார் என்ற ஒரு குறிப்பைப் பார்ப்போம் . நம் குருநாதர் "திரேதா யுக வாசியோகம்" பயிற்சி செய்து ஆதிபராசக்தியின் அருளை பெற்றவர் . ஆனால் அய்யா, தாயின் அருளைப்பெற மிக கடுமையாக உழைத்து பல துன்பங்களை அனுபவித்து சித்தி பெற்றிருக்கிறார் . இதை அய்யாவே தனது "ஞான சைதன்யம் 51" என்ற நூலில் பாடல் 21 -லிருந்து அழகாக விவரிக்கிறார் . இந்த பாடல்கள் மூலம் நாம் பல அபூர்வ தகவல்களை அறியலாம் . அய்யா தாயாரிடம் கண்ணீர்விட்டு கெஞ்சி அழுது அமிர்தம் வாங்கி உண்கிறார் . அந்த அமிர்த போதை தலைக்கேறி அவரை மனதளவிலும் உடலளவிலும் கடுமையான பல பாதிப்புகளை காட்டுகிறது . அத்தனை துன்பங்களையும் தாங்கி, யோகத்தில் தேறி தாயோடு இணைந்து அவளின் பூரண அருளை பெற்றுவிடுகிறார் . அய்யாவின் பாடல் வரிகளை அடியேன் இயன்றவரை கீழே உங்களுக்காக தட்டச்சு செய்திருக்கிறேன் . மேலும் அந்த பாடல் ஒலித்துணுக்கையும் இணைத்திருக்கிறேன் . இதை அருமையாக இசைத்து பாடியவர் திரு. வீரமணி கண்ணன் அவர்கள் . முழுமையான பாடல் தொகுப்பு "மதுரை கீஸ்டு கானத்தில்" கிடைக்கும் .


தீபத்தில் நின்றுகொண்டேன் அநேக காலம்
சிவசிவா நினைத்ததெல்லாம் சித்தியாச்சு
கோபத்தை எள்ளளவும் மனதில் வையேன்
கூவென்று அழுத்திட்டேன் தாயைப் பார்த்து
ஆபத்து என்ன வந்தது என்று சொல்லி
ஆத்தாளும் என் முகத்தை பார்த்து நின்று
ஏமத்த அமிர்தமதை இந்தா வென்று
எனக்கும் அவள் ஈந்திட்டாள் பார்த்திட்டேனே...

பார்த்திட்டேன் மதிஅமுதம் தன்னை தின்று
பார் என்றாள் மேல்மூலம் பார்க்கும்போது
வேர்த்திட்டேன் முகமெல்லாம் களையும் ஆகி
விழுந்தேன் நான் போதைதனில் சிக்கிக் கொண்டேன்
ஆப்பிட்டேன் அவள்போதம் தன்னில் சிக்கி
அலறினேன் உளறினேன் ஆத்தாள் தன்னை
கூப்பிட்டேன் போதைதனை சகிக்க மாட்டேன்
புதுமையிது போதுமென்று அழுதிட்டேனே...

அழுதயெனைப் பார்த்த சிவகாமி ஆயி
அம்பரமாம் இடக்கலையில் இறுத்து என்றாள்
பழுதப்போ கலைமாறி போதை போச்சு 
பார்மகனே இன்னும் என்ன கவலை என்றாள்
குளிர்ந்திடவே செல்வம்போல் வந்துநின்று 
கூப்பிட்டாளே என்று திரும்பி பார்த்து
கழலற்ற பால்போலே என்னைத்தானும்    
கண்மணி என்றே சொல்லி முத்திட்டாளே 

முத்திட்டாள் முகத்தோடு முகம் அணைத்து
மோசமில்லை நீ நானும் ஒன்றே என்றாள்
பெற்றிட்டேன் அவள் நானாய் நான் அவளாய்  
பேதமில்லை இருபெரும் ஒன்றே ஆனோம் 
சத்தியமாய் குருமொழியை தவிராதானே
தாய் நானும் ஒன்றானோம் தப்பே இல்லை 
நித்தியமாய் அடிநின்று முடியில் ஏறு
நிர்ணயமாய் சொல்லிவிட்டேன் நிசமாய்த்தானே ...
   


அய்யாவின் பாடல் வரிகளை எளிதில் படிக்கமுடியும் . என்ன ? ஆதிபராசக்தி அவ்வளவு எளிதில் யாரையும் தன்னோடு இணைய விடமாட்டாள், என்று சென்ற பதிவில் படித்தது இப்போது புரிகிறதா ? கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாடல் துணுக்கை கேட்டு மகிழுங்கள் .


https://youtube.com/clip/UgkxqbnsLvjoTi7ajx_e4ylVGDrob86H_jP9

https://drive.google.com/file/d/10b3NTV_VolNqfcStMXXTrJUKJSZ6hW8I/view?usp=drivesdk


கேள்வி : இந்த திரேதா யுக வாசியோகத்தை நானும் பயிற்சி செய்து சித்தியாகி ஒளியுடல் பெறலாமா ?
பதில் : முடியாது . இந்த கலியுக எல்லைக் காலத்தில் அது சாத்தியமில்லை . ஒளியுடல் பெற்ற மகாசித்தர், குருவாக உங்கள் சிரசில் இறங்கி அந்த சித்தரே உங்கள் வாசியை நடத்தவேண்டும் . இதைப்படித்த உடனே கவலைப்பட வேண்டாம், குழப்பமும் வேண்டாம் . முருகப்பெருமான் ஒளியுடலுக்கான வழிமுறைகளை "கலியுக வேத நூல்களாக" ஞானாலயத்தின் மூலம் வெளியிடுகிறார் . இந்த ஞானாலய நூல்களின் வழிமுறைகள் உயர் ஆற்றல்கள் உங்கள் சிரசில் இறங்க தடையான அணுக்களை நீக்கும் .


கேள்வி : உங்களின் பதிவுகளை மற்றவர் குழுவின் பதிவில் ஊடுருவி இடைபுகுந்து கருத்தாக புகுத்துவது நியாயமா ? நாகரிகமா ?
பதில் : நிச்சயமாக நியாயமில்லை . மேலும் அந்த குழுவின் எரிச்சலையும் சாபத்தையும் அடியேன் நான் சந்திக்க நேரிடும் . சாதாரணமாக நான் எல்லா குழுவிற்குள்ளும் ஊடுருவுவதில்லை . குருநாதரின் அருள்பெற்ற மூன்று குழுக்களில் மட்டுமே குருநாதரை வணங்கி ஊடுருவி பதிவிடுகிறேன் . அதுவும் 2024 -ஆம் வருடம் வரை மட்டுமே .


கேள்வி : அது என்ன 2024 ?
பதில் : நம் குருநாதர், முருகப்பெருமான் மற்றும் பல உயர் ஆற்றல்கள் அருளிய ஞானாலய வெளியீட்டு நூல்களில் ( ஆன்மாவின் சுயசரிதை மற்றும் முருகரின் வேத நூல்கள் ) மூலம் அடியேன் அனுமானமாய் உணர்ந்ததே இந்த 2024 வருடம் . உங்கள் ஆய்வுக்கு உட்பட்டதே . இந்த வருடத்திற்கு பிறகு பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பதை உணரலாம் . யுகமாற்றத்திற்கான ஈசனின் சங்கொலி சத்தம் கேட்க ஆரம்பிக்கும் . இந்த கூடிய சுழற்சி வேகத்திற்கு ஏற்றபடி மனிதர்களின் உடல் உறுப்புகள் மற்றும் மூச்சும் ஒத்துப்போகாமல் பிணிகள் கூடும் . முக்கியமாக கெட்டியான இரத்தம் உடையவர்கள் மிகவும் துன்பப்படுவார்கள் . என்னடா இவன் இஷ்டத்திற்கு கதை காட்டுகிறான் என நீங்கள் நினைக்கலாம் . திடீரெனெ இப்போது உயர் ஆற்றல்கள் கீழிறங்கி கலியுக வேத நூல்களை வெளியிடும் அவசியம் என்ன? என சிந்தித்து பாருங்கள் . இந்த புத்தகங்களை காலம் தாழ்த்தாமல் வாங்கிப் படித்து, உள்ள விபரங்களை எந்த அளவிற்கு அறிவியல் பூர்வமாக உள்ளது என ஆராய்ந்து பாருங்கள் . நமக்கு துன்பம் வந்தால் பரவாயில்லை. ஆனால் நமக்கு பிரியமானவர்களுக்கு நம் கண்முன்னே துன்பம் வந்தால், அதை பார்க்க சகிக்காது . இனி விதி விட்ட வழி .


அடுத்த பகுதியில் நம் குருநாதரை பற்றிய மிகவும் அபூர்வமான தகவல்களை பார்ப்போம் .


ஓம் அகத்தீசாய நமஹ.
அகத்திய பக்தன்.


( பல வேலை பளுவிற்கு நடுவே குருநாதர் எனக்கு இட்ட பணியான பதிவுகளை எழுதுகிறேன் . எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை அருள்கூர்ந்து மன்னிக்கவும் . அதில் சொல்லவந்த கருத்தையும் அதன் முக்கியத்துவத்தையும், இறைவன் அருள் பெற்ற நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் ). 



செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஒளியுடல் சாத்தியமே - முருகரின் ஒளி & ஒலி


ஒளியுடல் சாத்தியமே - முருகரின் ஒளி & ஒலி

 

முருகப்பெருமானின் முதல் வேத நூலான "மூளை எனும் தலைமை சுரபி" படித்தபின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இரண்டு மற்றும் மூன்றாம் வேத நூல்களான "ஒளி மற்றும் ஒலி" நூல்கள் அடியேனுக்கு குருநாதர் அருளால் கிடைத்தது . இந்த கலியுக எல்லைக்காலத்தில் இறைவனே அருளிய வேத நூல்களைப் படிக்கும் பாக்கியம் தந்த குருநாதருக்கு சரணாகத நன்றிகள். இன்றைய கலியுக மனிதர்களுக்கும் "ஒளியுடல் சாத்தியமே" என்ற நம்பிக்கையை நம் அனைவருக்கும் முருகப்பெருமான் அருளுகின்றார்.




                 ஒளி என்னும் இரண்டாம் வேத நூலில், ஒரு நாள் முழுக்க கிடைக்கும் சூரிய ஆற்றலை தெளிவாக விளக்குகிறார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் கொண்டது. ஒருநாளின் அறுபது நாழிகையில் விண்ணிலிருந்து மண்ணிற்கு நான்கு கனிமங்கள், ஐந்து மூலக்கூறுகளில் ( பஞ்சபூதம் ) கலந்து மூன்று இழைகள் வழியே வருகிறது ( 4 x 5 x 3 = 60 ) . அதிகாலை ( ப்ரம்மமுகூர்த்தம் ) தொடங்கி ஒவ்வொரு நாழிகையில் பெறப்படும் கனிமம் + மூலக்கூறு + இழை கூட்டமைப்பின் பொதுவான பலன்கள், நமது உடலுக்கான பலன்கள் , நோய்களை நீக்கும் நாழிகை , ஆற்றலை பெரும் நுணுக்கம் என வெகுதெளிவாக விளக்கப்பட்டுள்ளது . இந்த நூலுடன் மேலே குறிப்பிட்ட 4x5x3 கூட்டமைப்பு அட்டவணையும் இலவச இணைப்பாக கிடைக்கிறது . இந்த நூலை உணர்ந்து படிப்பவர் "சூரிய ஒளி ஆற்றலை ஜீவஆற்றலாக மாற்றி உபயோகிக்கும் உயரிய கலையை கற்றுக்கொள்வார். எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் படிக்கவேண்டிய அரிய அறிவியல் நூல் இது.


 

நம் குருநாதர் ஞான சைத்தன்யம் 51 என்ற பழைய வாசியோக நூலில் இருந்து ஒளி பற்றிய சில பாடல் வரிகளை உங்களுக்காக இணைத்துள்ளேன். லிங்கை அழுத்தி கேட்டு மகிழுங்கள்.

https://drive.google.com/file/d/108OezufeKW57yHEJqCjbrOdw8ma8uGnv/view?usp=drivesdk



           

மூன்றாம் வேத நூலான "ஒலி" எனக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக மூடிமறைக்கப்பட்ட "ஒளியுடல் இரகசியம்" கலியுக மக்களுக்கு புரியும் வகையில் முருகப் பெருமான் விளக்கியுள்ளார். ஏன் இவ்வளவு வெளிப்படையாக இந்த நூலில் விளக்கினார் என எனக்கு ஆச்சர்யமும் சிறிது வருத்தமும் இருந்தது . புத்தகத்தை முழுமையாகபடித்தபின் காரணம் புரிந்தது. கலியுக எல்லையில் வாழும் நம்மீது இறை ஆற்றல்கள் இவ்வளவு கருணையோடு இருப்பது பெரும் வணக்கத்திற்குரியது.

ஒரு நாளின் 60 நாழிகை நேரத்தை மூன்று பகுதியாக பிரித்து, முதல் 20 நாழிகை நேரம்"அ" என்ற காந்த ஓசை , இரண்டாம் 20 நாழிகைநேரம் "உ" என்ற வெப்ப ஓசை, கடைசி 20 நாழிகை நேரம் "ம்" என்ற கலி ஓசை என அதற்குரிய பலன்களுடன் விவரிக்கிறார். மேலும் இந்த மூன்றும் இணைந்த "ஓம்காரநாதத்தின்" சூட்சுமத்தையும் கூறியுள்ளார்.

 

              

நமது சிரசில் உள்ள மிக உயர்ந்த அணுவான "ஒற்றை அணு" எனப்படும் ஆதிசக்தி அல்லது வாலை தேவதை பற்றிய அபூர்வமான நுணுக்கங்களை அதனுடன் தொடர்புடைய சுழுமுனை நாடி மற்றும் சூட்சுமநாடியுடன் தெளிவாக முருகர் விளக்கியுள்ளார். இவற்றின் அமைப்பு , செயல்பாடு , வேறுபாடு மற்றும் வணங்கும்முறைகளை அறிந்துகொள்ள இந்த புத்தகத்தைப் படிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது . சித்த யோக மார்க்கத்தில் செல்வோர் கட்டாயம் படித்தே ஆகவேண்டிய வேத நூல்கள் இவை . ஒற்றை அணுவின் துணை கொண்டு எப்படி "ஒளியுடல்" சித்திக்கும் என்ற நுட்பத்தை நீங்கள் அறிந்துகொள்ள இந்த நூல்களை முருகப்பெருமானை வணங்கி படியுங்கள் .




கடந்த மாதம் ஞானாலயம் குரு அன்னை அருள்திரு.பரிமளா ராஜு முக்தி அடைத்தார். அம்மையாரின் ஒற்றை அணு எப்படி அவரின் முக்திக்கு காரணமானது என்பது பற்றி நமது குருநாதர் ஒரு செய்திவெளியிட்டிருந்தார். இந்த ஒற்றை அணு செயல்பாட்டின் அபூர்வ தகவலை, " ஒலி" நூலின் பக்கம் 89 இல் முருகப்பெருமான் விளக்கியுள்ளார். சாதாரணமாக ஒரு ஒற்றை அணுவினால் தனது ஆன்மாவின் துணை இல்லாமல் ஈசமையத்திற்குள் செல்லமுடியாது . ஆனால், ஆன்ம விடுதலை அடைந்த ஒரு உயர் ஆன்மாவின் ஒற்றை அணுவானது தனியாக "ஒரு முறை ஈசமையம் எனும் சூரிய கோளின் மையப் புள்ளியினைச் சென்று அடைந்துவிட்டால் அண்டத்துப் பாதரசத் துகளாகவே ஒருமாறிட இயலும்"!! அன்னையரின் ஒற்றை அணு அவ்வளவு வீரியம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது . இதனைஅறிந்துகொள்வது சாமானிய மானிடர்களால் இயலாது .





எல்லாம் சரிதான் சார். ஆனால் ஒளியுடல் கொண்ட சித்தரின் ஒரு சிறுசாட்சியாவது உள்ளதா ? என நீங்கள் நினைப்பதை என்னால் புரியமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அருள்திரு. சாமி அழகப்பன் அய்யா சதுரகிரி மலையில் படம் பிடித்த ஒரு சிறு பகுதியை கீழே உள்ள இணைப்பில் கவனமாகப் பாருங்கள். ஆச்சர்யமாக உள்ளதா ? ஆமாம் சார் , உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி செயல் இழந்து உருகிவிடும் என்ற விபரத்தைமுருகப்பெருமான் தனது "ஒலி" என்ற மேலே குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளார் .

https://youtu.be/oG0RZ9rO0AM



உடனே அந்த ஒளியுடல் சித்தரைஅழைத்து வந்து தொலைக்காட்சில் பேட்டி காணலாமா? என கேட்காதீர்கள். உங்கள் கலியுக சங்காத்தமே வேண்டாம் என்றுதான்அவர் சிவனே என்று மலைகளில் உலவிக்கொண்டிருக்கிறார். முடிந்தால் நீங்களே ஒளியுடல் பெற்று அவரிடம் சென்று பேசுங்கள்.

ஒற்றை அணு குரு சரணங்கள் :-






ஓம் அகத்தீசாய நமஹ.

அகத்திய பக்தன்.


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை

ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை 

பாகம் 1


ஓம் அகத்தீசாய நமஹ.
ஓம் வால்மீகி தேவாய நமஹ .

        நம் குருநாதர் பொதிகை மலையில் தனக்கு மிகவும் பிரியமான மைந்தருக்கு காட்சி தந்த அபூர்வ புகைப்படம் . அந்த புனிதர்அடியேன் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அன்போடு கொடுத்தார் . அடியேன் இதுவரை யாருக்கும் பகிர்ததில்லை . இன்று அந்த புனிதரிடம் உங்களுக்காக அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பணிவோடு அந்த புகைப்படத்தை இங்கு பகிர்கிறேன் .

 

 



ஓம் அகத்தீசாய நமஹ.

நமது குருநாதர் அய்யா ஈஸ்வரனுக்கு சமமானவர் என்பதால் அவருக்கு அகத்தீஸ்வரன் அல்லது அகத்தீசன் (அகத்து ஈசன் ) என்று பக்தியோடு அழைக்கப்படுவது நீங்கள் அறிந்ததே.  மேலும் அய்யவைப்பற்றிய பல புராணக்கதைகள், அய்யா என்றும் அழியாத மஹாகாரண ஒளியுடன் வாழ்பவர் என்பவை யாவும் நீங்கள் அறிந்ததே .  என்னதான் மஹாசித்தர் என்ற பட்டம் பெற்றாலும் எப்படி ஒருவரால் 4000 வருடங்களுக்கும் மேலாக வாழ முடியுமா ? நமக்கு எப்படி அருள் செய்ய முடியும் ? அவர் எங்கு வாழ்கிறார் ? என பல கேள்விகள் என்னுள் ஆரம்பத்தில் இருந்தது . ஹனுமத் தாசனின் "நாடி சொல்லும் கதைகள்" ஐந்து பாகங்களை படித்தபின் பல சந்தேகங்கள் தீர்த்தன. இந்த அறிய பதிவுகளை இணையத்தில் படிக்க விரும்புவோர் https://siththanarul.blogspot.com/ வலைத்தளத்தில் சென்று பழைய பதிவுகளை பின்னோக்கி சென்று படிக்கலாம் .

 


நமது குருநாதர் அய்யாவை பற்றிய மிக அபூர்வமான செய்திகளை "கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை " என்ற நூலில் படிக்கும்போது வியப்பின் உச்சிக்கே நம்மை கொண்டு செல்லும். இந்த நூலை அருளியவர் வால்மீகி முனிவர். சித்த மார்க்கத்தின் பல அபூர்வ தகவல்களை இந்த நூலில் சித்தர்களே சொல்லும்போது நிச்சயம் மெய்சிலிர்க்கும் .  புத்தகம் வாங்க இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யலாம். https://www.enlightenedbeings.org/


வால்மீகி முனிவர் அருளிய இந்த நூலிருந்து நமது குருநாதரை பற்றிய சில குறிப்புகளை மட்டும் பார்க்கலாம் .  இந்த குறிப்புகள் சிறு துளிகள் மட்டுமே. இந்த புத்தகத்தை முழுமையாக படித்தால் பல அரிய விஷயங்களை குருவருளால் தெரிந்துகொள்வீர்கள்.

 

=> நமது ஆன்ம ஒளி தரிசனத்திற்கு தடையான மூளை அணுக்களை பிரிக்கும் வல்லமை கொண்டவர் அகத்தியர் . நமது அணுக்களின் நல்ல ஆற்றலை வெளிக்கொணரும் வல்லமை கொண்டவர் .

 

=> அவர் ஓர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லஒரு அன்பான தாய் .

 

=> உப தெய்வங்கள் அதற்குரிய மூளை அணுக்களின் மைய ஆற்றலை மட்டுமே வெளிக்கொணர்வர் . ஆனால் அதை உடைத்து ஆற்றலை வெளிப்படுத்துவது அகத்தியர் மட்டுமே . அதனாலேயே தெய்வங்களிலேயே உயர்ந்த பதவி அகத்தியருக்கே வழங்கப்பட்டுள்ளது.  எனவேதான் அவர் தெய்வங்களையும் ஆளும் தகுதியைப் பெற்றார்.

 

=> ஆதிசக்தியான அந்த ஒற்றை அணு (  நம் மூளையில் இருக்கும் வாலை தெய்வம் ) வேறு எந்த அணுவையும் தன்னோடு சேர்க்காது . அப்படிப்பட்ட ஆதிசக்தி அணுவின் ஆற்றலை முழுமையாக புரிந்துபணிந்து கலந்தவர் அகத்தியர் .  எந்த ஒரு ஞானியும்விடுதலை அடைந்த ஆத்மாவினை உடையவரும் மற்றவர்களின் மூளையில் உள்ள ஆதிசக்தி ஒற்றை அணுவோடு ( வாலை தெய்வம் ) கலக்க இயலாது . அகத்தியர் ஒருவரே இதை செய்ய இயலும் !!!

குறிப்பு : சித்த மற்றும் பலவித யோகமார்க்கத்தில் உள்ளோர் கவனிக்க வேண்டியது .  நீங்கள் என்னதான் தலைகீழாய் நின்று தண்ணி குடித்தாலும் , என்ன யோகா சித்த வாசி நுணுக்கம் செய்தாலும் " குருநாதர் அகத்தியர்” அய்யா வராமல் ஒரு பலனும் கிடையாது மக்களே ).

 

=> ஆதிபராசக்தி என்னும் ஒற்றை அணுவே அகத்தியர் வாழும் கூடு .

 

=> ஈசனை காட்டிலும் இயங்கிநிற்கும் ஆதிபராசக்தியவளே அகத்தியருக்கு உகந்தவள்உயர்ந்தவள்.

 

=> ஈசனின் செயலாளர் ஆதிசக்தி.  ஆதிசக்தியின் செயலாளர் அகத்தியர்.

 

=> காற்றோடு காற்றாய் , தியோடு தீயாய் , நீரோடு நீராய் ,  நிலத்தோடு நிலமாய் சக்தியவள் கலந்து கரையும் இடமெல்லாம் அகத்தியரும் கலந்தே இருப்பார் .  அகத்தியர் மட்டுமே இதில் முழுமைத்துவம் பெற்றவர் . சூட்சும சரீரம் கொண்டு ஈசனின் உலகம் வரை எட்டிப் பார்த்தவர் .

 

=> ஈசன் தன் படைப்பான அகத்தியரின் ஆத்ம அணுவை தேவியின் காவலுக்கு என்றே நிறுத்திவிட்டார்அகத்தியரின் வசிப்பிடமே தேவியின் இருப்பிடம் என்பதால் தேவியின் மைந்தராகவே கருதப்பட்டு ஆதவனாலும் பூஜிக்கப்படுகிறார்.  

 

=> தேவியின் செல்லப்பிள்ளையாகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றவும் பணிக்கப்பட்டவர் அகத்தியர் .

 

சித்த மார்க்கம் , வாசி மார்க்கம் , யோக மார்க்கம்பக்தி மார்க்கம்  வாழ்வோர் மனதில் வரும் பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள் .

 

[1] நான் மிகவும் விரும்பும் மாமிச உணவை விட்டுவிட மனமில்லை . ஆனால் சித்த மார்க்கத்தில் பயணித்து சித்தர்கள் அருளை பெறவேண்டும் , ஆன்ம முன்னேற்றம் வேண்டும் , ஈசனை அடையவேண்டும் . இது சாத்தியமா ?

பதில் : மன்னிக்கவேண்டும் . வாய்ப்பு இல்லை .  "கலியுக மனிதர்கள் " மாமிச உணவை விட்டுவிட்டு சாத்வீக உணவே உண்ணவேண்டும் என ஒளியுடல் பெற்ற சித்தர்களும் , குருநாதரும் , முருக பெருமானும் தெள்ள தெளிவாக அறிவியல் பூர்வமாக விளக்கி சொல்லியிருக்கிறார்கள் . "கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை " என்ற நூலில் முழுமையாக விளக்கியுள்ளார் . இதையும் மீறி மாமிசம் உண்போர்க்கு "புற்று நோய்வரும் என்று சொல்லிவிட்டார்கள் .  அதிர்ச்சியாக உள்ளதாஇது மடத்தனம் என்கிறீர்களாமேலும் படியுங்கள் .

 

[2] எனது மருத்துவரே மாமிச உணவை உண்ண சொல்கிறார்என்ன செய்வது?

பதில் : மாமிசம் உண்ணும் மருத்துவர் வேறு எப்படி சொல்லுவார் ? அன்பான மருத்துவரேநீங்கள் எனது மாமிச சாபத்தையும், தீய கர்மாவையும்  வாங்கிக்கொள்கிறீர்களா ? என்று கேட்டால் வாய்மூடிக்கொள்வார்.

 

[3] கண்ணப்ப நாயனார் மாமிச உணவை ஈசனுக்கு படைத்து ஈசனை அடைந்தார் . சிவவாக்கிய சித்தர் வாடா.. போடா.. என்று பலவாறு பாடியிருக்கிறார் . இவ்வளவு ஏன் ? நமது குரு நாதரே பல சித்த வைத்திய நூல்களில் மாமிச உணவை சொல்லியிருக்கிறாரே ? மாமிசம் உண்டால் ஞானம் வராதா ? ஈசனை அடைய முடியாதா ?

பதில் : மன்னிக்கவேண்டும் . நாம் இப்போது வாழும் "கலியுக எல்லைக் காலத்தில்" அதற்க்கு வாய்ப்பே இல்லை .  மாமிச சத்து இரத்தத்தில் கலந்து மூளைக்கு செல்லும்போது நஞ்சு அணுக்களாக மூளையின் வெளிவட்டங்களில் படியும் .  கலியுக எல்லையில் வாழும் நமது மூளையில் இந்த நஞ்சு அணுக்கள் படியும் இடம் முடிந்துவிட்டது . இனி மூளையில் இடம் இல்லை பாஸ் .  இந்த நஞ்சு அணுக்களே இறுகி புற்று நோயாக வெடிக்கும் . இதுஎன்னடா புதுக்கதை என்கிறீர்களா ?  மேலே குறிப்பிட்ட வால்மீகி முனிவரின் புத்தகத்தை படியுங்கள் . பாண்டிச்சேரி ஞானாலயம் சென்று வாருங்கள் .

 

[4] எனது மதிப்பிற்குரிய குரு என்னை “மாமிசம் உண்பதால் தவறில்லை” என்று சொல்கிறார் .  ஊக்கப்படுத்துகிறார்.  அப்படியெனில் எனது குரு தவறானவரா ?

பதில் : மாமிசம் உண்பதை ஊக்கப்படுத்தும் உங்கள் குரு தாயினும் உயர்ந்தவர் , புனிதமானவர்.  நீங்கள் மாமிச உணவில் முழுமையாக நிறைவடைந்துஅதை விடும்வரை உங்களின் கர்மாவை உங்கள் குரு விருப்பத்தோடு முழுமனதுடன் தானே ஏற்றுக்கொள்கிறார் . உயர்ந்த ஆத்மாக்களான ஸ்ரீ ரமண மகரிஷிஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் போன்றோர் தங்களின் கடைசி காலகட்டத்தில் கடுமையான நோயால் துன்புற்றது எதனால் தெரியுமா ?  தனக்கு கர்மா இல்லாமல் புனிதமாய் வாழ்ந்தாலும் அவர்களின் மாணவர்களின் கர்மாவை வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டதே காரணம் . உங்கள் குரு உங்களின் மாமிச கர்மாவை அவரே விரும்பி தாயன்போடு ஏற்றுக்கொள்கிறார் . குரு தனது கடைசி காலகட்டத்தில் கடும் நோயால் துன்புறும்போது அவர்களின் மாணவர்கள் அவரை சுற்றி அமர்ந்து அழுவார்கள் . ஆனால் அந்த மாணவரின் கர்மாவைதான் குரு ஏற்று அனுபவிக்கிறார் என்பது அந்த மாணவருக்கும் தெரியாது , குருவும் அதை கடைசிவரை சொல்லவே மாட்டார் .  ஹ்ம்ம் உங்கள் குருவிற்கு சாபகர்மாவை சேர்க்கும் மாணவரா நீங்கள் ? இனி உங்கள் இஷ்டம் .

 

[5] மாமிச உணவை கைவிடவே விரும்புகிறேன் , ஆனால் மாமிசம் விட்டவுடன் மிகவும் சோர்வாக உணர்கிறேன் . கை கால் எலும்பு மூட்டுகளில் வலிக்கிறது . என் உயிரின் ஒரு பகுதியை இழந்ததாக உணர்கிறேன் . உற்றார் உறவினர்கள் என்னை மிகவும் ஏளனம் செய்கிறார்கள் .  நான் என்ன செய்ய ?

பதில் : மாமிசத்தை விடவேண்டும் என்று நீங்கள் நினைத்தவுடன் நமது மூளையில் இருக்கும் கலி அணுக்கள் உடனே ஆக்ரோஷமாகி பல மாயா உணர்வுகளையும் சோர்வையும் ஏற்படுத்தும் . திடீரெனெ நமக்கு பலவித நோய்கள் வந்துவிட்டதாக பூச்சாண்டி காட்டும் .  இந்த தாக்கம் மூன்று மாதத்திற்கு கடுமையாக இருக்கும் . இந்த காலகட்டம் தான் உங்களுக்கான சவாலான காலகட்டம் . கவலை வேண்டாம் . எனது அனுபவத்தில் குருநாதர் அருளால் கீழ்கண்ட வழிமுறைகளில் இதை எளிதாக எதிர்கொள்ளலாம் .

    (அடிக்கடி தரமான நாட்டு பேரிச்சம் பழம் உண்ணலாம் .

    (சில நாட்களுக்கு தினமும் அரை ஸ்பூன் அஸ்வகந்தா லேகியம் உண்டு பசும்பால் அருந்தலாம் .  இது நல்ல பலன் தரும் .  ஆனால் டோஸ் கொஞ்சம் கூடினால் சிறிது வாய் துடுக்காக பேச தோன்றும் ( தன்னம்பிக்கையை இந்த மூலிகை வெகுவாக கூட்டும் ). உங்கள் விருப்பப்படி அளவை குறைத்துக்கொள்ளுங்கள் .  உங்கள் சித்த ஆயுர்வேத மருத்துவரை ஆலோசிக்கலாம் . ஆனால் உங்கள் மருத்துவரே ஒரு “மாமிச விரும்பி”யனால் உங்களை கரைசேர விடமாட்டார் . ஜாக்கிரதை .

    () ( ஆண்கள் ) உங்கள் மீசையை மஹாகவி பாரதியாரை போல் சிறிது முறுக்கிவிடுங்கள் .

 

 

மேலும் அடுத்த பதிவில் நம் குருநாதரை பற்றிய அற்புதமான பல தகவல்களோடு தொடர்வோம் .....

 

நன்றி : குடும்பத்தில் முக்கியமான பல கடமைகளுக்கு மத்தியில் பல தடைகளை கடந்து இந்த பதிவை எழுதிமுடிக்க கருணையோடு அனுமதித்த குருநாதரின் செல்ல மகள்களான என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அன்புடன் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .

 

தொடரும் ....

 

ஞாயிறு, 19 ஜூலை, 2020

Our Gurunathar's Light

Our Gurunathar’s light to all
Dear Friends,
I have already shared my soul experience, which was given by our Gurunathar in Germany Stuttgart year 2015.  More information in my blog: 
http://fireprem.blogspot.com/2018/11/blog-post_29.html?m=0
 .(please click and read ).

After this experience, Gurunathar gave me several amazing siddhar’s books and very rare secrete yogic songs for the past few years through multiple channels.  I might have red more than 15000 siddhar songs with lot of yogic techniques to feel and kiss the soul.  Gurunathar allowed me some of the books to share with the required people as below my blog link.
Allowed books to share. Click this blog:
http://fireprem.blogspot.com/2020/06/blog-post.html?m=0
There are also few books that I am not allowed to share now (list in the last page).

After reading all these rare book collection, I still had a strong worry in my mind.  All those old siddhar books are really super, but “my GuruMaharaj ! I am not sure, in which Yuga period (Thiretha Yuga or Thuvabara Yuga) those books are written and how much it is suitable to this edge of Kaliyuga period.”  In year 2018, I was working for 4 months in USA Chicago without family. I used to practice Meditation and yoga every day early morning and evening seriously, to keep a humble request to our Gurunathar’s feet.  “Oh my Lord! Please show me the procedure that can be suitable to this edge of Kaliyuga. Why can’t you come down now and tell what to be done in this Kaliyuga ?”.  One fine day morning, I was shown a message about “Gnanalayam Pondicherry” with the hint of a book called “Kaliyuga Kaviyam Aanmavin Suyasaritham - கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம்.   I was surprised and seriously doubted, is it true that my Gurunathar can still come down to this earth and bless the books again after several thousands of years? I immediately ordered those books to deliver to my India address and seriously waiting to read those books.  After reading those books, I fully realized that each words of those books are directly from the higher souls and not by human being.  Today, I am highly encouraged to show you those books with the blessings of our Gurunathar.  You must read those books to understand where you exactly stand in this edge of Kaliyuga and how you are going to escape from the dangerous mafia of Kalipurusa.

Please click this link to go to Gnanalayam website to order those holy books of Kaliyuga.

You can also get the theeksa designed by higher souls if you are already selected by the higher souls ( Siddhars ).


Books which are not allowed to release now as below.  I am praying our Gurunathar to release those in future for the required people.  Hope so.
குதம்பை  அருளிய ஞானம் சூத்திரம் 18
அகத்தியர்_அந்தரங்க_தீட்சா_விதி
Agathiyar 2000
சிவநூல் சூத்திரம்
MUPPUGURU
SAGAKALAI
கொங்கணர் திருமந்திர ஞானம் 12
கொங்கணர் சூட்சதெரிசன ஞானம் 6
கொங்கணர் அருளிய மெய்ஞானம் 13
கொங்கணர் ஞான சைதன்யம் 121
Siddhar Korakkar's 7 medical writings கோரக்கர் சந்திரரேகை மற்றும் பல
valmeegar சிவயோகம் ஞானம் 10
கொங்கணர் சுத்தஞானம் 16
உரோமமுனி முன் ஞானம்
போகமூனிவரின் ஞானம்
அகத்தியர்_சௌமியசாகரம் ஆயிரத்திஇருநூறு
கடைகாண்டம் -konganar KadaiKaandam
சுகும பட்சி (பஞ்சபட்சி)நூல்
தட்சிணாமூர்த்தி-குருமுகம்-100
brahma-gnanan theosopical
kareem siddha medicines
Pooranam-100
Vagara soothiram
Agathiyar Poorana-soothiram-216
AMUTHA KALASAM
Siddhar thathuvam vaithiyam
SITHTHAR MEI PORUL
agathiar siththar
Amudha kalai gnanam
Bogar_7000_Sapthakaandam</p>
kriya yoga
Poorana-kaviyam
Prananagashamirdha Sindhu
Sidhdharkal-kattiya-yoga-neri
Agathiyar karpa deetchai
Agathiyar paripurana agarathi
Agathiyarpooranasoothiram</p>
Bogar 300
Bogar poojavithi
Giriya yoga amirtham
Korakkar
Fundamental of varma medicine
Paripashai thirattu
Yoga siththi
Perunool kaviyam 800

==
Yours Friendly,
Agathiya Bakthan.



சனி, 13 ஜூன், 2020

தர்மம் செய்வோர்க்கு மட்டும்


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த உறவுமுறையும் இல்லாமல், எந்த மத சார்பும் இல்லாமல் - குறைந்தது ₹ 100 ஐ அருகில் உள்ள ஆதரவற்றோர்க்கு உதவினால், விரும்பிய ஒரு மின்னூல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப  முயற்சிப்போம்.













கருத்துப் பெட்டியில், சத்தியமாய் தர்மம் செய்த தேதி, விரும்பும் ஒரு மின்னூல் மற்றும் மின்னஞ்சல் முகவரி பதியலாம்.
பதில் எழுத ஒரு வாரம் அவகாசம் தேவை.