ஈசக் கல்லே வருக...
ஈசக்கல் 202x - வருக - 1
நூல் - ஒளி - இரண்டாம் வேதம்.
அருளியவர் முருகப்பெருமான்.
புவிக் கோள் என்பது தாமிர கனிமத்தை அதிக அளவில் சேமித்தால் அதன் வெப்பமும் பெருகும். அதன் மூலம் அதன் இயக்கமும் பெருகிடும். பூமியானது விரைந்து சுழன்றிட மூலகாரணம் தாமிர கனிமவளமே. அதன்மூலம் புவிக்கோள் என்பது விரைந்து சுழன்று இறுதியில் சூரியனை அடைந்துவிட முயன்றிடும். சூரியனை நெருங்கி சென்றிடவே முனைகின்ற புவியின் செயலுக்கு மூலகாரணம் தாமிர ஒளி ஆற்றலே. புவியின் இச்செயலைக் கண்டு அதன் ஈர்ப்பு விசையின் அதிகரிப்பினை உணர்ந்து, "ஈசன் என்னும் காந்த கல்லானது" புவியினை அடைந்திடவே விரைகின்றது.
யுகமாற்றம் எனும் புவியினை சீராக்கும் பணி தென் எல்லையிலிருந்து துவங்கிடும்.
புவியின் புனரமைப்பு எனும் பணியானது இயற்கையால் மேற்கொள்ளப்படும். புவியின் அதிர்வு அதன் பிளவும் அதிக அளவில் நிகழ்ந்திடும். புவியின் ஈர்ப்பு விசையில் தீவிரமான மாற்றம் தோன்றிடும். அதன் பொருட்டு புவியின் சுழற்சியும் அதன் வேகமும் கூடியே காணப்படும். சுழற்சிக்கான எரிபொருளும் மாற்றமுறும்.
நூல் : வாழ்வியல், பக்கம் 99.
பதிப்பு : ஞானாலயம் பாண்டிச்சேரி.
அடியேன் கணிப்பு assumption : அழிவுக்கான விண்கல் வருகைக்கு காரணமாக இருக்கப்போவது சிலி அல்லது தென் அமேரிக்க நாடு மற்றும் அதன் தாமிர உற்பத்தி.
My assumption understanding: Chile is located in Southern hemisphere where the disaster would start spreading after an astroid hit ( magnetic stone ).
ஈசக்கல் 202x-வருக-2
கலியுக இறுதியில் புனரமைப்பு கண்டிடும் புவிக்கோள் என்பது தனது சுழற்சியினை முழுமையாக தடை செய்துவிடும். ஈசனின் வருகையின் மூலம் நஞ்சுகள் அனைத்தும் நீக்கப்படும். எனில் நில அமைப்பு என்பது மாற்றமுறும். நில ஈர்ப்பு விசை என்பது துண்டிக்கப்படும். அதன் மூலம் நீரின் ஈர்ப்பு விசை என்பதும் விண்ணேறிட இயலாது தடைபடும்.
சந்திரன் எனும் துணைக் கோள் ஆனது ஒவ்வொரு சதுர்யுக எல்லையிலும் அழிவுறும். 'ஆம்'. அதிர்வினை நல்கிடும் செய்தியாகவே தோன்றினாலும் கோள்களின் அழிவும் சூரியனின் அழிவும் சாத்தியமான செயலே என்பதனை அறிவித்திட சந்திரனின் அழிவு ஒவ்வொரு சதுர எல்லையிலும் நிகழ்ந்துவரும். சத்ய யுகம் தோன்றுகையில் மீண்டும் சந்திரன் எனும் துணைக் கோள் உருவாக்கப்படும்.
நூல் : ஒலி - கலியுகத்தின் மூன்றாம் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* கலியின் எல்லைப்பகுதியில் உயர் பிராணவாயு ஆக்ஸிஜன் மிகவும் குன்றிவிடும் காரணத்தால் உடலின் பல உறுப்புகளும் ஒருசேர பாதிப்புறும், சிரசிலும் புற்றுநோய் உருவாகும்.
* கழிவுகளில் மிகவும் கொடியது பாதரச கழிவு. கலியுக எல்லையில் மாத்திரமே அவை புவியினை அடைந்திட இயலும்.
* உயர் பிராண படலம் எனும் ஓசோன் லேயர், பாதரச கழிவுகளால் உருவான ஒரு திரைப்படலமாகும். கலியுக எல்லையில் இந்த திரைப்படலமானது அதிக வெப்ப ஆற்றலால் உருகி கரைய துவங்கிவிடும்.
* ஓசோன் லேயர் அழிவதால் ஈசன் எனும் உயர்ந்த காந்த கல்லானது புவியினை விரைந்து அடைந்துவிடும்.
* பூமியின் நிலப்பரப்பு முழுமையாக மாசடையும். நீர்நிலைகளும் முழுமையாக வற்றிவிடும். உருவான பாதரச கழிவு புவியினில் பெரும் வெப்பத்தை தூண்டும் பெரும் குளிர்ச்சியையும் தூண்டும்.
நூல் : மூளை எனும் தலைமை சுரபி.- கலியுகத்தின் முதல் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* புவியின் மேல் பரப்பு, மானுடர்கள் வாழ்ந்திட சாத்தியமற்ற நிலையினை உருவாக்கும். புவியானது கூடிய வேகத்துடன் சுழல்வது நில நீர் வாயுவின் மூலக்கூறுகளை பாதித்துவிடும். வாயுவின் மூலம் தோன்றும் கழிவுகளும் பெருமளவில் மானுட ஆன்மாக்களை பாதிக்கும்.
* புவியின் புனரமைப்பு நிகழ்ந்திடும் கலியுகம் நிறைவடைந்து சத்திய யுகம் மலர்ந்திடும். தாமிர ஒளி ஆற்றல் பெருமளவில் உதவிடும். தாமிர ஒளி ஆற்றல் ஒன்றே அதிக வெப்பத்தினை நல்கி புவியின் இயக்கம் துரிதம் அடையவும் உதவுகின்றது. புவியானது தாமிர ஒளி ஆற்றலை ஏற்று விரைந்து இயங்கி யுக மாற்றங்களை நிகழ்த்துகிறது.
ஈசக்கல் 202x-வருக-3
சதுர் யுகங்கள் எனும் கால அளவே ஒரு ஆன்மாவின் பயணத்திற்கு வழங்கப்பட்ட உச்சகட்ட கால அளவாகும். சதுர்யுகமானது நிறைவுறக் காத்துள்ளது. ஈச உலகின் வாயில்கள் திறவு கொண்டு ஈர்ப்பினை அதிகம் செலுத்தி ஆன்மாக்களை அழைக்கின்றன. விரைந்து வாயில்கள் அனைத்தும் அடைபடும். இதனை உணர்ந்து உதித்திட்ட இல்லங்களை சென்றடைய கூறுகின்றோம். வேத நூல்களை உணர்ந்து ஏற்று ஆன்ம விடுதலைதனை நாடியே சென்றிடல் வேண்டும். ஞானாலயம் தனிலே ஜோதியிலே கலப்புற்று நிலைத்துள்ள ஆன்மாக்களின் ஆற்றலினை ஏற்று, குருவின் துணை கொண்டு ஈச உலகம் சென்றடைய முற்படுங்கள். காலச் சக்கரம் என்பது விரைந்து சுழல்கின்றது.
நூல் : ஒலி - கலியுகத்தின் மூன்றாம் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* மூளையின் அழிவு என்பது பிரளய நோய் எனப்படும் புற்றுநோயின் மூலமே உருவாகும். மாந்தர் குலம் அழிவினை நோக்கியே சென்று கொண்டு உள்ளது என்பதனை வளர்ந்து வரும் புற்று நோயினை கொண்டே அறிந்திடலாம். பிரளய நோய் என்று அறியப்படுகின்ற புற்றுநோயானது நில நீர் மூலக்கூறுகளின் தன்மையில் உருவான மாற்றத்தினால் மாத்திரமே பெருகிடும்.
* அமில கழிவுகள் சிரசினிலே கூடினால் அவை யாவும் இணைந்து புற்றுக் கட்டிகளாக உருமாறிவிடும்.
* உறுப்புகள் யாவும் அழுகிய நிலையில் பெரும் பாதிப்பினை உருவாக்கும் ஒவ்வொரு மனிதரும் பெரும் வேதனைக்கு உள்ளாகும் நிலையும் உருவாகி விடும்.
* மானிடர்களின் நிலைப்பாடு என்பது கடும் சோதனைகளுக்கு ஆட்படும். ஆன்மாவானது சூரிய ஒளி ஆற்றலை உணவாகப் பெற்றிட இயலாத நிலையில் உணர்வுகள் யாவும் அற்று விடும்.
நூல் : மூளை எனும் தலைமை சுரபி.- கலியுகத்தின் முதல் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* அனுதினமும் சூரிய ஒளி ஆற்றலை ஏற்று வாழ்கின்ற ஆன்மாவானது, கலி எல்லையில் சூரிய ஒளி எனும் உணவின்றி வாடும் நிலையும் உருவாகும். பாதாள வாழ்வு என்பது புதையுண்ட வாழ்வாகும். பல்வேறு மானுடர்கள், சூரிய ஒளி ஆற்றலை விழிகளால் ஏற்று விட இயலாத நிலை உருவாகும். புவியின் சுழற்சி எனபதை அறிந்திட இயலாது. இரவும் பகலும் உணர்ந்திட இயலாது. பசி உணர்வு தோன்றாது. அன்பும் கருணையும் உதித்திடாது.
* சூரிய ஒளி அற்ற தருணத்திலும் பாதாள வாழ்வு எனும் இருள் வாழ்வு சூழ்ந்தாலும் மானுட ஆன்மாக்கள் ஒளி என்னும் வேத நூலினை கற்று ஆராய்ந்து அறிந்து விட்டால் ஆன்மாவானது விழித்தெழும்.
* கலியினிலே மூழ்கிவிடும் ஆன்மாக்கள் கரை சேர்ந்துவிட இறுதியாக இறைவனால் அளிக்கப்படும் வரம் என்பதனை உணர்ந்து ஏற்றிடுங்கள். வேதங்களை உணர்த்துவதும் ஆறுமுகனே, அதனை ஏற்றிட கோரி இறைஞ்சுபவனும் ஆறுமுகனே.
நூல் - ஒளி - இரண்டாம் வேதம்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
some more google facts :-
Just based on my assumption by correlating the above points.
naturally high arsenic concentrations in Chile are associated with copper-rich deposits which have been mined for centuries.
Disaster start region :-
https://en.wikipedia.org/wiki/
Chile still dump toxic mine waste in the sea.
https://oceana.org/blog/
Approximately 90% of the mercury in the mining industry is released directly into the atmosphere.
Proof : https://scholarworks.wmich.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக