ஓம்
அகத்தீச ராஜனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
கும்பமுனி தேவனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
குருமுனி அப்பனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
முதல் இலக்கணம் தந்தவனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
வேலவன் மைந்தனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
ஆராதார ஜோதியே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
வெட்டவெளி ராஜனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
சுழுமுனை சுடரே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
வாசிமுனி தெய்வமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
வர்மமுனி ராஜனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
வைத்தீச ராஜனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
காயசித்தி கற்பமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
குருநாடி தெய்வமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
சகலக்கலை ஞானமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
ரசவாத ராஜனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
ஞானத்தின் காவியமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
தீட்சா விதி தீபமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
நயன விதி நாதனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
பரிபூரண ஞானமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
பஞ்சகாவியம் பகர்ந்தவனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
முப்பூவின் முழுமையே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
மெய்ஞ்ஞான ஜோதியே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
அகாரத்தின் அருளே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
உகரத்தின் உண்மையே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
மகாரத்தில் இருப்பவனே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
மௌன குரு மந்திரமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
சிவ வாலை சிங்கமே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
மனோன்மணி ஜோதியே,
வந்தே அருளேவேண்டும்.
ஓம்
மகத்தான மாமுனியே,
வந்தே அருளேவேண்டும்.
உன் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்.