வியாழன், 5 ஜனவரி, 2017

agathiyar saranam



ஓம்

அகத்தீச ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

கும்பமுனி தேவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

குருமுனி அப்பனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

முதல் இலக்கணம் தந்தவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வேலவன் மைந்தனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

ஆராதார ஜோதியே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வெட்டவெளி ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

சுழுமுனை சுடரே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வாசிமுனி தெய்வமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வர்மமுனி ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வைத்தீச ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

காயசித்தி கற்பமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

குருநாடி தெய்வமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

சகலக்கலை ஞானமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

ரசவாத ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

ஞானத்தின் காவியமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

தீட்சா விதி தீபமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

நயன விதி நாதனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

பரிபூரண ஞானமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

பஞ்சகாவியம் பகர்ந்தவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

முப்பூவின் முழுமையே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மெய்ஞ்ஞான ஜோதியே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

அகாரத்தின் அருளே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

உகரத்தின் உண்மையே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மகாரத்தில் இருப்பவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மௌன குரு மந்திரமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

சிவ வாலை சிங்கமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மனோன்மணி ஜோதியே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மகத்தான மாமுனியே,

வந்தே அருளேவேண்டும்.

உன் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்.

தலை முதல் கால் வரை, பொது மருத்துவம்

நானும் என் மனைவியும் நல்ல இணையதளத்தில் இருந்து  தொகுத்தது.  இதில் தலை முதல் கால் வரை, பொது மருத்துவம் மற்றும் பொது குறிப்புக்கள் என அடுக்கியிருக்கிறோம்.

https://drive.google.com/file/d/0B4eezlYyQs6dX080U2xxOHpxLXVmRUQ3SmgtOFQzNl9ycU9N/view?usp=sharing

பிரேம்கலை

புதன், 4 ஜனவரி, 2017

மயக்கமா.. கலக்கமா.. மனதிலே குழப்பமா.. வாழ்க்கையில் நடுக்கமா..

மயக்கமா.. கலக்கமா.. மனதிலே குழப்பமா.. வாழ்க்கையில் நடுக்கமா.. ?

"நாடப்பா அகத்தீசர் என்று கூறு

நடுக்கம் வந்தால் என் மேலே பழியைப் போடு

கூடப்பா என் குருவே என்று கூடு

கும்பமுனி குழந்தை என்றே விருது நாட்டு

பாடப்பா என்புகழை பரிந்து பாடு

பாரத்திலே உனதிடுக்கம் தீர்ப்போம் கண்டாய்

தேடப்பா சிவ வாசி ஞானியோரை

தேடினால் உனது கர்மம் தீர்ந்து போச்சே  "

- அகத்தியர் மெஞ்ஞானம் 

நிலவேம்பு கியாழம் - கடுமையான காய்ச்சல்

   நேற்று (20.10.2016) என் மகள் (11 வயது) பள்ளியில் இருந்து மதியம் போன் செய்து, அவளுக்கு கடுமையான காய்ச்சல், வந்து அழைத்து போகும்படி சொல்லிவிட்டார்கள். உடனே என் மனைவி பள்ளிக்கு சென்று நிலவேம்பு பொடிமட்டும் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். சிறிது பரவாயில்லை, ஆனால் ஜுரம் குறையவில்லை, மிக கடுமையாக இருந்தது. நான் அலுவலகத்தில் இருந்து மாலை வரும்போது எனக்கு தெரிந்த நாட்டு மருந்து கடையில் நிலவேம்பு கியாழம்  வந்து 15 மில்லி ( கடுமையான காய்ச்சல் ) மாலை 6 மணிக்கு  அகத்தியரை வணங்கி கொடுத்தேன். 4 மணி நேரத்தில் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. நன்றாக தூங்கிவிட்டாள்.  காலையில் முழுவதுமாக குணம் ஆகிவிட்டது