செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஆசான் யோகி ராஜா கிருஷ்ணா மூர்த்தி அவர்களுக்கு சிறுவனின் சிறுகவிதை

ஓம் அகத்தீசாய நமஹ.


ஆசான் யோகி ராஜா கிருஷ்ணா மூர்த்தி அவர்களுக்கு சிறுவனின் சிறுகவிதை.


அன்பான அய்யனே என் அருமை தந்தையே !

பதினெண்மர் பாடல்களும் பக்குவமாய் உன் எழுத்தில் !

பூட்டெல்லாம் உடைத்தாயே உன் பெருமை என்ன சொல்வேன் ?

மார்தட்டி சொன்னேனே உன்னைபோல் யாரிங்கே ?

குழம்பிப்போய் திரிந்தவனை அக்கறையாய் தேற்றிட்டாய்,

கதலிப்பூ குண்டத்தில் மட்டும் விளையாட சொன்னீரே !

முக்கோணம் தொட்டுப்பார்த்தேன், வட்டமதை சுற்றிவந்தேன் !

பாய்ததைய்யா மின்சாரம் பதறாமல் வாங்கிக்கொண்டேன்,

இன்பமதை என்னசொல்வேன், இல்லறம்தான் சிறக்குதையா !

நாளும் ஒரு காதல் கொடி நன்றாக பறக்கவிட்டேன்.

அகாரமாய் நான்தானே ! உகாரமாய் அவள்தானே !

உத்தமனாம் அகத்தீசர் முக்கோண குண்டத்தில்,

காந்தமும், இரும்பும் சேரட்டும் என அருளினாரே.



அகத்திய பக்தன்.




குறிப்பு :-
கதலிப்பூ - நான்கு இதழ்கள் கொண்ட ஒரு மலர். மூலாதார சக்கரத்தை குறிப்பது.

மூலாதார சக்கரத்தில் கீழ்நோக்கிய முக்கோணம் இருக்கும்.

கருத்துகள் இல்லை: