புதன், 14 பிப்ரவரி, 2024

ஈசனைக் காணலாம் வாருங்கள்

 

ஈசன் என்பவர் யார்? கையில் சூலாயுதம் வைத்திருப்பாரே? கழுத்தில் பாம்பு அணிந்திருப்பாரா? ஆஜானுபாகுவாக ஒரு ஆணாக நின்று கொண்டிருப்பாரா? அல்லது உட்கார்ந்து கொண்டிருப்பாரா? அவரின் மதம் என்ன? அவரின் மொழி என்ன?



 இத்தனை கேள்விகளுக்குமான பதில்,  பாண்டிச்சேரி அன்பாலயத்தின் மூலம் வெளிவந்த "ஆத்மாவின் சுயசரிதம்" என்ற நூலில் உள்ளது. இதனை அருள் செய்தவர் வால்மீகி மகரிஷிகள். கீழே அந்த புத்தகத்தில் உள்ளது உள்ளபடி அப்படியே எழுதி இருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். 

நன்றிகள் : அன்பாலயம் ஜெயந்தி அம்மா.


ஈசனை ஒரு மனிதனாக உருவகம் செய்து பார்ப்பதை நிறுத்திவிட்டு பூமிக்கோளைப் போல பல கோள்களுக்கும் பல அண்ட சராசரங்களுக்கும் அதிபதி என்றும் பிரம்மாண்டத்தின் உச்ச நிலை எனவும் கருதி போற்ற தயாராகுங்கள். ஈசன் என்ற ஒரு மனித கடவுளை சந்திக்கப் போவதாக யாரும் கற்பனை செய்யாதீர்கள். எவரின் கற்பனைக்கும் எட்டாத நிலை அவர். அவரை தன்மையாகவே உணர முடியும் அறிய முடியும். ஒரு வகை உணர்ச்சியில் மட்டுமே அவர் நிலை அறியப்பட வேண்டும் என தெளிவுருவாயாக. 


ஈசன் என நீங்கள் கருதுபவர் காணக்கூடிய ஒரு உருவம் கொண்டவரா? இல்லவே இல்லை. அவர் ஒரு உணர்வு நிலை என அறிதலே மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி. ஈசனின் நிலை மதங்களுக்கும் மொழிகளுக்கும் அப்பாற்பட்டது. ஈசனின் ஆத்ம அணுவே அண்ட சராசரம். ஈசத்துவ நிலையானது முதன் முதலில் உருவாக்கிய ஓர் ஆத்மா அணுவே ஆதிபராசக்தி ஆகும்.


சிவாயநம.



கருத்துகள் இல்லை: