திங்கள், 18 அக்டோபர், 2021

அனுபவ ஞானம் - 2 - மந்திரம்

  அனுபவ ஞானம் - 2 - மந்திரம்

ஓம் அகத்தீசாய நமஹ


      பக்தி வழிபாடாயினும் யோகஞான பயிற்சி ஆயினும், பீஜாட்சர மந்திரத்திற்கான தனி மதிப்பு உண்டு. ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு விதமான பீஜாட்சர மந்திரங்கள் உண்டு.


     அடியேன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயிற்சி செய்து குருநாதரை வணங்கும் அனுபவ முறைதனை குருநாதர் அருளால் இங்கு பகிர்கிறேன். 



இது முழுக்க முழுக்க அடியேனின் அனுபவ குறிப்புகள் மட்டுமே. அடியேனின் புரிதலை பகிர்வதை ஒரு கடமையாக எண்ணியே பகிர்கிறேன், அவ்வளவுதான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். இதற்கும் எந்த ஒரு ஆன்மீக ஸ்தாபனத்திற்கும் சம்பந்தம் இல்லை.


 பயிற்சி : பீஜாட்சர மந்திரத்தை, கும்பகப் பிராணாயாமத்தோடு இணைத்து வணங்குவது.


 நோக்கம் : வாலை எனும் ஒற்றை அணு, தன் வெப்ப ஆற்றலால் வீரியமாகி அதன் மூலம் பிரபஞ்ச காந்த ஆற்றலை ஈர்ப்பது.


 இலக்கு : பெறப்பட்ட காந்த ஆற்றலையும், வெப்ப ஆற்றலையும் சிரசின் அனைத்து நரம்பணுக்களுக்கும் பரப்புவது. 


 தகுதி : சிறிய அளவில் கும்பகம் பயிற்சி செய்யும்போது சௌகரியமாய் உணர்பவர்கள்.  வெப்ப ஆற்றலை தாங்கும் ஆன்ம பலம் கொண்டவர்கள்.

 பொதுவாக அனுதினமும் மனம் உருகிய பக்தி வழிபாடு செய்யும் பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு இயல்பாகவே காந்த ஆற்றல் இருக்கும்.  இவர்கள் மிகக் குறைந்த அளவு கும்பகப் பிராணாயாமம் செய்து வழிபட்டாலே போதுமானது, அல்லது கும்பகம் செய்யாமல் பாவனை மட்டும் செய்து பயிற்சி செய்யலாம்.   கும்பகப் பிராணாயாமத்தின் தகுதி பற்றி அடியேன் பலமுறை தீவிரமாய் சிந்தித்திருக்கிறேன். 

 ஒரு ஆன்மா எந்தக் கோளிலிருந்து பிறந்தது என்பதை வைத்து அந்த ஆன்மாவிற்குள் இருக்கும் அந்தக் கோளுக்கான கனிம இழையின் உருகுநிலையை மையமாக வைத்து ஒரு அனுமான பதிவு எழுதி இருக்கிறேன். இந்த பதிவிற்கான பின்புல கருத்து,  முருகப்பெருமானின் "பிரம்மம் - கலியுக நான்காம் வேதம்"  என்ற நூலில் அத்தியாயம் 20 - பக்கம் 153ஐப் படிக்கும் பொழுது அனுமானமாய்க் கிடைத்தது.

 கீழ்கண்ட அந்தப் பதிவை நீங்கள் படித்தும் உங்கள் தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம். 

http://fireprem.blogspot.com/2021/08/?m=1


 

 உதாரண மந்திரம்:  நம் குருநாதர்  அருளிய தியான மந்திரத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு பிரித்துப் பார்க்கலாம்.

 ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ.


இளநிலைப் பயிற்சி :-

 பீஜாட்சர மந்திரத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும் 

1) ஓம்கார பிரிவு - ஓம் - ரேசகம்

2) பீஜாட்சர பிரிவு - சிம் வம் அம் உம் மம் - பூரகம்

3) தேவதை சரணாகத நாமம் -  கும்பகம்.


 நாடி சுத்தி செய்பவராய் இருப்பின் அதை முடித்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாம்.


 தீபச்சுடரின் முன்பு கண்கள் திறந்த நிலையில் பயில்வது சிறப்பு.

1)  சுழுமுனையில் கவனம் வைத்து ஓம்காரத்தை மனதில் சொல்லிக் கொண்டு ரேசகம் செய்ய வேண்டும்

2) தீபச்சுடரைப் பார்த்து, பீஜாட்சரத்தின் ஒவ்வொரு பீஐத்திற்கும் ஒவ்வொரு சிறிய மூச்சை தொடர்ந்து உள்வாங்கி பூரகம் செய்ய வேண்டும்.

3) சிரசின் ஒற்றை அணுவை நோக்கி கவனம் வைத்து மந்திரத்தின் மூன்றாம் பிரிவை கும்பகத்தில் சொல்லவேண்டும்.

4) கைகள் இரண்டும் சின்முத்திரையில் இருக்கலாம் 

5) குறைந்தது மூன்று முதல் ஒன்பது முறை வரை செய்யலாம்.

6) பயிற்சி செய்த பின் கண்களை மூடி ஒற்றை அணுவை நோக்கினால்,  பிரகாசம் சிறிது சிறிதாகக் கூடுவதை உணரலாம்.

7) சிரசின் உட்புறம் அனைத்து மூளை அணுக்களையும் பார்க்கும் பொழுது, மிகவும் பரவசமாக இருக்கும்.

8) சிறைப்பட்ட ஆன்மத் துகள்கள் விடுபடுவதாக உணரவேண்டும்.

9) ஒளி பாலத்தின் பயணத்திற்கு தயாராக வேண்டும்.

 ஒற்றை அணுவை வணங்கும் நுணுக்கமான முறைகளை, முருகப்பெருமான் தனது நூலான "ஒலி - கலியுகத்தின் மூன்றாம் வேதம்" நூலில் அத்தியாயம் 20 பக்கம் 133ல் குறிப்பிட்டுள்ளார். படித்து பயன் பெறுங்கள்.


     இதே ரேசக பூரக கும்பக முறையை பயன்படுத்தி ஒரு ஆதார தளத்திலிருந்து அடுத்த ஆதார தளத்திற்கு பாய்வதற்கும் பயன்படுத்தலாம். அதாவது ஒரு புலி சிறிது பின்வாங்கி பதுங்குவது ரேசகம்,  பாய்வது பூரகம்,  பாய்ந்த பின் தன் இலக்கில் தன்னை நிலை நிறுத்துவது கும்பகம். 

 

பயன்கள் : பிடிவாதமான கர்ம வினைப் பதிவுகள் விலகுவதை உணரலாம். இது பெரும்பாலும் கனவுகளாக வெளியேறும். தொடர்ந்த பயிற்சியில் நாதத்தை செவிமடுக்கும் பாக்கியம் கிடைக்கலாம்.


 இந்தப் பயிற்சியை தொடர்ந்து இரண்டு மண்டலம்  பயிற்சி செய்த பின், வேண்டுபவர்களுக்கு மட்டும், இதன் முதுநிலைப் பயிற்சியினை பகிரலாம் என யோசித்திருக்கிறேன்.

இப்படி மூன்றாகப் பிரிப்பதற்கான முறையை குருநாதர், "சௌமிய சாகரம்" என்ற நூலில் கீழ்க்கண்ட இணைப்பில் விளக்குகிறார்.

https://saumyasagaram.blogspot.com/2016/05/391-om-reeng-am-and-pranayama.html?m=1


மந்திரத்தால் மூச்சை நெறிப்படுத்துவதை "ஸௌ பீஜம்"  என குருநாதர் கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறார்.




https://saumyasagaram.blogspot.com/2015/11/251-pranayama-types.html?m=0



 ஒரு சுவாரசியமான அனுமானம் :

 ராமாயணம் மற்றும் மகாபாரதம் புராணக் கதையில் நிறைய அஸ்திரங்களை பயன்படுத்துவார்கள். பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம், நாராயண அஸ்திரம் என பல அஸ்திரங்களை வில்வீரர்கள் பிரயோகிப்பார்கள். இது எப்படி சாத்தியம்? இதில் என்ன சூட்சுமம் உள்ளது? என எனக்கு நீண்ட நாள் கேள்வி மனதில் இருந்தது. இந்த அஸ்திரங்களில், பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து, அம்பில் இணைத்து, அஸ்திரமாக எய்வதில் என்ன சூட்சமம் உள்ளது? என அனுமானித்தேன். 



எனக்கு அனுமானமாய் தோன்றுவது, இது சித்தி ஆக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பீஜாட்சர மந்திரத்தை, ரேசகம் பூரகம் கும்பகம் என மூன்றாகப் பிரித்து வில்வீரர் தன் சுழுமுனையில் ஜபித்து அஸ்திரமாக எய்கிறார். உதாரணமாக,  வில்வீரர் தனது அம்பை வில்லில் வைத்து "ஓம்" என்று ரேசிக்கிறார். பின்னர் பீஜாட்சர பூரகத்தில் அம்பை நாணில் ஏற்றி இழுக்கிறார் ( பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து ).  முடிவாக கும்பகத்தில் அஸ்திர தேவதைக்கான நாமத்தை சொல்லி இலக்கை நோக்கி எய்கிறார்.  என்ன சுவாரசியமான அனுமானமாக தெரிகிறதா?


 கும்பகப் பிராணாயாமத்தை பற்றிய அடியேனின் முந்திய பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.

1)

http://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1

2)

https://fireprem.blogspot.com/2017/03/blog-post.html?m=1

3)

https://fireprem.blogspot.com/2018/11/blog-post_29.html?m=1


***


 இப்படிக்கு உங்கள்

 அகத்திய பக்தன்.

சனி, 2 அக்டோபர், 2021

அனுபவ ஞானம் - 1 - மணி

          அனுபவ ஞானம் - 1 - மணி


 ஓம் அகத்தீசாய நமஹ.


 

அக்கா மகாதேவி, இவர் ஒரு கன்னடத்து சிவனடியார்.  கையில் சிவலிங்கத்துடன் இருக்கும் இந்த ஓவியப் படம் இப்பதிவின் ஆரம்பமாக இருக்கட்டும். 

 இந்த "மணி" என்ற பதிவில் பாதரச சிவலிங்க வழிபாடு பற்றிய அடியேனின் அனுபவத்தைப் பகிர்கிறேன்.  உண்மையில் எனக்கு இது போன்ற அனுபவ வழிபாட்டை பகிர்வதில் விருப்பமில்லை. ஒரு முறை நானும் அருமை நண்பர் ஞானாலயம் செல்வா அய்யாவும் பேசும்பொழுது யோக வழிபாட்டு அனுபவ ரகசியங்களை பகிர்வதில் எனக்கு விருப்பமில்லாததைச் சொன்னேன். அதற்கு செல்வா, அனுபவ ரகசியங்களை இந்த கலியுக எல்லையிலும் மறைப்பது நல்லதல்ல, ஞானத்தைப் பகிர்வதை கடமையாகச் செய்ய முருகப்பெருமான் "கலியுக வேத நூல்களில்" கட்டளையிட்டுள்ளதை எனக்குச் சுட்டிக் காட்டினார்.  செல்வா கூறியது சரிதான், முருகப்பெருமான் கட்டளைக் கிணங்க, பகிர்ந்து விடுவது என முடிவு செய்துவிட்டேன். இதைப் படிப்பவர்கள் அவரவரின் சிரசில் இருக்கும் குருவின் அனுமதி வேண்டி பயின்று பலன் பெறலாம். இது சரியாக வராது என நினைப்போர் விட்டுவிடலாம்.


 பாண்டிச்சேரி ஞானாலய நூல்களின் சில குறிப்புகளை படிக்கும் போதுதான் குருநாதரின் அருளால் இந்த பாதரச சிவலிங்க வழிபாடு யோசனை எனக்கு வந்தது. உடனே நீங்கள் இந்த வழிபாட்டு குறிப்புகள் அனைத்தும் ஞானாலயத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு எனக் கருதக்கூடாது. இது முழுக்க முழுக்க அடியேனின் அனுபவ குறிப்புகள் மட்டுமே. அடியேனின் புரிதலை பகிர்வதை ஒரு கடமையாக எண்ணியே பகிர்கிறேன், அவ்வளவுதான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.



 குறிப்பு 1 : நூல் - வேத நூல்களின் பலாபலன்கள். அத்தியாயம் 3 பக்கம் 37.

 நான்கு வகை கனிமங்களையும் புறத்திலே சமமாய் பயமுறுத்தினால் அதன் பலாபலன்களை அடைந்திட இயலும்.  தங்கமும், தாமிரமும், வெள்ளியும் புறத்திலே சமமாய் பயன்படுத்தப்பட்டாலும் பாதரசம் என்பது அதிக அளவில் பயனுறுத்தப் படவில்லை.  எனினும் முற்காலங்களில் பாதரச ஆற்றல் கொண்ட பொருட்களையும் பூடகமாய் பயனுறுத்தினர்.  கலியின் எல்லையில் சாமானிய மானுடர்கள் அக்கலைதனை அறிவதில்லை. மாற்றாக வேறு பொருட்களை ஏற்கின்றனர். பாதரசத்தை ஏற்கும் கலையினை உணர்ந்துகொண்டால் ஆன்மாவினை உணர்தலும் எளிதாகும்.

(  இங்கே முருகப்பெருமான், பாதரச ஆற்றலை நமக்கு உள்ளேயும் வெளியேயும்  முந்தைய யுக மனிதர்கள் பயன்படுத்தியதைக் குறிப்பிடுகிறார்.)  பாதரச சிவலிங்க வழிபாடு முற்காலம் தொட்டே பாரத தேசத்தில் இருந்துள்ளது. )


 குறிப்பு 2 : நூல் -வேத நூல்களில் பலாபலன்கள் - அத்தியாயம் 9 பக்கம் 133.

அறியாமை திரைகளை நீக்கி, ஆன்ம ஆற்றல்களை பெருக்கி, ஆன்ம விடுதலை தனை எய்திட வேண்டுமெனில் புறத்தினிலே உருவ வழிபாடுகள் யாவும் அவசியமாகின்றது.  

தெய்வ வழிபாடுகளைப் புறக்கணிப்பதன் மூலம் ஆன்ம ஆற்றல்கள் குன்றிவிடும். பல்வேறு மானிடர்கள், கலியின் எல்லையில் வாழ்கின்ற காரணத்தால் அறியாமைத் திரைகள் வலுவாகக் காணப்படுகின்றது.

அறியாமை திரைகள் நீங்கினால் மாத்திரமே புற வழிபாடுகள் யாவும் அக ஆற்றல்களை பெருக்கிட வல்லது எனும் பேருண்மையானது புலப்படும்.  அகத்தினிலே உறைகின்ற ஆன்மாவினை உணர்ந்து கொண்டால், புற வழிபாடுகள் யாவும் அவசியம் அற்றதாக உருமாறி விடும்.

(  அறியாமைத் திரைகள் நீங்கி ஆன்ம விடுதலை பெறும்வரை புறவழிபாடு அவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ). 



 குறிப்பு 3 - நூல் - ஆகம வேதம் - பக்கம் 19.

அருகம்புல்லை நடுக் கையில் வைத்து நடுவிரல் கொண்டு அழுத்தம் கொடுத்து ஸ்பரிசிக்க உங்களுக்குள் மாற்றத்தை உணர்வீர்கள்.


          இந்த நூல்களின் குறிப்புகளை படிக்கும் பொழுது அடியேனுக்கு பாதரச சிவலிங்கம் வழிபாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. எனினும், குற்றமில்லாத நல்ல பாதரச சிவலிங்கத்தை எங்கு வாங்குவத், என எனக்கு தெரியவில்லை.  பல நாட்கள் தேடலுக்குப் பின், AMAZON  இணையதளத்தில் ஒரு பாதரச லிங்கத்தை,  வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் படித்து, ஆராய்ந்துவிட்டு வாங்கி உபயோகித்துப் பார்த்தேன்.  நல்ல அனுபவம் கிடைத்தது.  

https://www.amazon.in/gp/aw/d/B07LCQQWHF?psc=1&ref=ppx_pop_mob_b_asin_title


உடனே இதை படிக்கும் நீங்கள் இந்த அமேசான் இணையதளத்தையே ஒரு வியாபார விளம்பரமாக அவசரப்பட்டு எண்ணாமல், இதைவிட சிறந்த பாதரச லிங்கம் எங்கு கிடைக்கும், என ஆராய்ந்து முடிவெடுங்கள்.



 இந்த பாதரச சிவலிங்கத்தை ஒரு கண்ணாடி குவளையில் நீர் நிரப்பி, சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்தால் தங்க நிறமாக மாறும் (கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கலாம்). இந்த சிவலிங்கத்தை திருநீறு அல்லது சந்தனத்தில் தேய்த்து பருத்தித் துணியால் துடைத்தால் மீண்டும் அது வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.


 இந்த சிவலிங்கத்தின் அடிப்பாகம் (நாதம்) வலது உள்ளங்கையில் வைத்து, வலதுகை நடுவிரலால் லிங்கத்தின் மேல் பாகத்தை (விந்து) அழுத்திவிட்டு, சுழுமுனை நாடி வழியாக ஆன்மாவை நோக்கி தியானம் செய்ய, நல்ல இறை அனுபவத்தை பெற முடிந்தது.  இதற்குப்பின் செய்யும் வெட்டவெளி தியானமும் ஓரளவிற்கு நல்ல அனுபவமாக இருந்தது.



செம்பருத்தி நீரில்



உள்ளங்கையில்  நடு விரலால் அழுத்தி வைத்து தியானம் செய்யும் முறை.



தாமரை இதழ் நீரில்




சங்குப்பூ நீரில்


குங்குமப்பூ நீரில்


அடியேன் பூஜை அறையில்


பாதரச சிவலிங்கத்தை வைத்து வழிபடும் முறையில் மூன்று வகையான வழிமுறைகளை குருநாதர் அருளால் நான் கண்டறிந்தேன்.

1)   பாதரச சிவலிங்க ஆற்றலை ஸ்பரிசத்தின் மூலம் ஏற்பது.  

பாதரச சிவலிங்கத்தை உள்ளங்கையில் வைத்து அல்லது பூஜை அறையில் வைத்தும் மேற்கண்டவாறு வழிபடுதல்.  இதை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவது மிக மிக சிறப்பானது. சூரியனின் பாதரச ஆற்றலை நமது உயிரின் மூலம் அபரிதமாக ஏற்றுக்கொள்ளலாம்.


 2) பாதரச சிவலிங்க ஆற்றலை நீர் மூலக்கூறாக அல்லது வாயு மூலக்கூறாக ஏற்பது.  

இதை அனைவருக்கும் வெளிப்படையாகப் பகிர முடியாது. ஆபத்தானது. குருநாதர் அளித்த ஒரு வரி ஞானத்தை, முழுமையாக ஏற்று, தினசரி வழிபடுபவர்களுக்கு  மட்டும் "தகவலாக" பகிரலாம். ஆனால் ஒரு வரி ஞானத்தைக் குறைந்தது ஒரு மண்டல காலமேனும் வழிபட்டு இருக்க வேண்டும்.


3) பாதரச சிவலிங்க ஆற்றலை வெப்பம்  மற்றும் காந்த மூலக்கூறாக சுழிமுனை நாடி வழியாக உயிரில் ஏற்பது. இதுவே மிக மிக ஆபத்தானது. இந்த வழிமுறை ஹடயோகிகளுக்கு மட்டும். அதாவது குருநாதரின் ஒரு வரி ஞானத்தையும், ஹடயோகம் மற்றும் கும்பகப் பிராணாயாமத்தையும் குறைந்தது ஓராண்டுக்கு பயிற்சி செய்தவர்க்கு மட்டும்.



 கீழே உள்ள யூ-டியூப் லிங்கில் பாதரச சிவலிங்கத்தை செய்யும் முறையை திரு.பிரவீன் மோகன் செய்து காட்டியுள்ளார். எனினும் 8 சாரணை தூய்மை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 

https://youtu.be/vTLBrNHR2u4


பாதரச சிவலிங்கத்தை பற்றிய மற்ற இணையதள குறிப்புகளும் கீழே உள்ளது.

https://m.dinamalar.com/temple_detail.php?id=21707


https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/22115914/The-mind-will-stick-to-itMercury-beads.vpf


 முக்கிய குறிப்பு :  இறைவனை நோக்கிய மனமுருகிய வழிபாடுகள் அல்லது யோகம், தியான பயிற்சிகள் செய்யும் பொழுது, நம் விடாப்பிடியான கர்ம வினைகள் விலக ஆரம்பிக்கும்.  இதன் தாக்கம் நம் உடலிலும் மனதிலும் நிச்சயம் சில காலம் இருக்கும்.  ஆண்கள், பெண்கள், திருமணம் ஆனவர், பிரம்மச்சாரிகள் என யாரையும் இந்த கர்மாவின் தாக்கம் விட்டுவைக்காது.  அருவருப்பான ஆபாச கனவுகள் தொடர்ந்து வரும். பயங்கரமான பேய் கனவுகளும் வரும். யாரோ அமுக்குவது போல் பயங்கர உணர்வுகள் தூக்கத்தை கெடுக்கும்.  ஆண்களாயின் அடிக்கடி சொப்பனஸ்கலிதம் உண்டாகும்.  இல்லறத்தில் இருப்போருக்கும் இதே நிலைதான், பிரம்மச்சாரிகள் நிலையை சொல்லவே வேண்டாம். கொடுமைதான்.

 ஞானாலயத்தின் ஆகம வேதம், என்ற நூலில் உள்ள கர்மாவை நீக்கும் கடற்கரை பயிற்சி நல்ல பலன்தரும்.

https://youtu.be/iBITmAz3HHQ


 எல்லா துன்பமும் சில காலம் தான்.  ஈசனை நெருங்க வேண்டும் என்றால் சும்மாவா ? பதிவுகள் தடையில்லாமல் வெளிவர நீங்களும் குருநாதரை பணிந்து வேண்டுங்கள்.



இப்படிக்கு உங்கள்

அகத்திய பக்தன்.