புதன், 6 ஜூன், 2018

தறுதலை பிள்ளைகளுக்கு யார் காரணம்?

ஆலயம் தொழுவது சாலவும் நன்றா ? ஏன் ?

சமீபத்தில், எனது உறவுக்கார சகோதரியும் சகோதரனும், தங்கள் மகனும் மகளும் ஒழுங்காக படிப்பதில்லை, மேலும் சொல்பேட்ச்சும் கேட்பதில்லை என கவலைப்பட்டார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் எளிதில் மனமுடைந்துபோவது அல்லது உணர்ச்சிவசத்தில் முடிவெடுப்பது வெகு சுலபமாக உள்ளது.
பெற்றோர்கள், தாங்கள் "பெற்றோர்" என்ற அதிகாரம் அல்லது அன்பு, இவைஇரண்டை மட்டும் வைத்துக்கொண்டு தாங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்திவிடலாம் என நம்புகிறார்கள். நான் நிறைய குடும்பங்களை ஆராய்ந்ததில், இவையிரண்டும் எப்போதும் வேலைசெய்யும் என்ற உத்திரவாதம் இல்லை.  எந்தெந்த குடும்பத்தில் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வாரம் ஒருமுறையேனும் கோவில்களுக்கு தாங்கள் குழந்தைகளை கூட்டிச்செல்கிறார்களோ, அந்த பிள்ளைகள் வளர்ந்தபின் தங்கள் இன்ப துன்பங்களை வாழ்வில் எதிர்கொள்ளும்விதம் ஆரோக்கியமானதாக உள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள், வீட்டில் விளக்கு ஏற்ற சோம்பேறித்தனம், வாரம் ஒருமுறையேனும் கோவில் செல்லாத பெற்றோர்கள், கடவுள் இருக்கிறாரா? இல்லையா ? என தர்க்கம் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள் பெரும்பாலும், "தறுதலைகளாகவே" வளர்க்கிறார்கள். இந்த வார்த்தையை உபயோகிப்பது எனக்கு மனவருத்தமாக உள்ளது. ஆனால், நான் ஏதோ வாய்க்கு வந்ததை அடித்துவிடவில்லை. நிறைய பாதித்த குடும்பங்களை பார்த்தபின்னரே இப்பதிவை எழுதுகிறேன்.
   பிள்ளைகளை உருப்படியாக வளர்க்காமல், எப்போதும் பணம்சம்பாதிக்கிறேன், பிசியாக இருக்கிறேன் என்று வாழ்ந்து என்னையா பலன் ? கோவில் என்ற மனோதத்துவ சூட்சுமத்தை புறக்கணித்துவிட்டு,
பிறகு சமுதாயத்தையும் சுற்றுபுறத்தையும் குறைகூறி என்ன பயன் ? இன்றைய மனிதன், தன் வாழ்வில் நிகழும் மகிழ்ச்சியான தருணத்திலும் மது அருந்தும் நண்பனை தேடுகிறான்,  சோகமான தருணத்திலும் மது அருந்தும் நண்பனை தேடுகிறான். அருகில் உள்ள கோவில்களுக்கும் சென்று தங்கள் மனஇறுக்கத்தை எளிதில் போக்கிவிடலாம் என்று நிறைய மனித ஜென்மங்களுக்கு தெரிவதில்லை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா ? என ஆராய்ந்துகொண்டே இருப்பதைவிட, அந்த பக்தியினால் வரும் பலன்களைப்பாருங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் நிச்சயம் ஒரு கோவில் இருக்கும். அதிலும் பழமையான கோவில் உங்கள் பகுதியில் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான். ஆயிரம் ஆண்டுகள் பழமையானவரை நீங்கள் சந்திக்க முடியாது, ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் மரங்களின் உயிரூட்டம் நிச்சயம் உங்கள் மனதிற்கு ஆறுதல் தரும். அடுத்த சவால்களை சந்திக்கும் பக்குவத்தை தரும். சென்று பாருங்கள்.
    வெற்றி தோல்வி, இன்ப துன்பங்கள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக நிகழ்வது. யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. ஆனால், இதை எப்படி எதிர்கொண்டு வாழ்கிறார்கள் !! என்பதுதான் முக்கியம்.
   நான் இப்போதும் எனது தூரத்து மற்றும் நெருங்கிய உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களை ஆராய்ச்சிக்காக கவனித்து வருகிறேன். கோவிலுக்கு செல்லும், மற்றும் செல்லாத குடும்பங்களின் தலைமுறையை இன்னும் பத்து ஆண்டுகள் கவனித்தபின் இந்தப்பதிவை மறுஆய்வு செய்யலாம். உனக்கு ஏன் இந்த வேலை? என நீங்கள் யோசிப்பது புரிகிறது. நமது முன்னோர்கள் தங்களின் கடின உழைப்பு, பணம் மற்றும் பெரும் பொருளை செலவழித்து இவ்வளவு கோவில்களை நமக்காக நம் சந்ததிக்காக கட்டியிருக்கிறார்கள். எனக்கும் உங்களுக்கும் அதில் நிச்சயம் ஒரு குறைந்தபட்ச   சமூக அக்கறை உண்டு.

எனது நட்பு மற்றும் உறவு உயிர்களுக்கு ஒரு வேண்டுகோள் :-
   தங்கள் கருத்து எதுவானாலும் இங்கே பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன். பதிய இயலாதவர்கள் வாட்ஸாப்ப் அல்லது நேரில் கருத்து சொல்லுங்கள். தாங்கள் சார்பில் நானே பதிகிறேன்.  இதற்கான பதில் மற்றும் மறுஆய்வு பத்து ஆண்டுகளில்…

அக்கறையுடன் அகத்திய பக்தன்.
பிரம்மேந்திரன்.

2 கருத்துகள்:

  1. ஆம் ஐயா...

    தாங்கள் கூறிய கருத்து மிக மிக உண்மை

    20,30 வருடங்கள் முன்ப இருந்தவை கூட இப்போது இல்லை.

    கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் ஞாயிறு ஒரு நாளை லீவில் மாலுக்கும் ஷாப்பிங் கூட்டி செல்லும் பெற்றோர் தான் அதிகம்

    இன்னும் நாம் உரக்க கூறுவோம் ஐயா..

    கோவில் என்றால் என்ன, பக்தி என்றால் என்ன, இறைவன் என்றால் என்ன என்பதை பற்றி...

    நன்றி

    நல்லதே நடக்கிறது

    பதிலளிநீக்கு