புதன், 21 பிப்ரவரி, 2024

சட்டி சுடவில்லை கை விடவில்லை*

 சட்டி சுடவில்லை கை விடவில்லை


எண்ண பதிவுகளை விரைவாக நீக்குவதற்கும், வெற்றிடத்தையும் ஆன்ம ஒளியையும் அதிகமாக பெருக்குவதற்குமான ஒரு எளிய ஞானத்தை குருநாதர் எனக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு வினோத அனுபவத்தின் மூலம் கொடுத்தார். உப்பு சப்பு இல்லாத ஒரு வரி ஞானம் தான், ஆனால் இதை அறிந்து உணர்ந்து ஏற்று தினசரி தவறாமல் எனது இறைவழிபாட்டோடு வேண்டும்போது, இதன் பலனோ கணக்கில் அடங்காதது,  இன்ப துன்பங்களில் சிக்காமல் எளிதாய் பயணிக்க மிகவும் உதவியாக எனக்கு இருந்தது.  தினசரி தவறாமல் வேண்டுவதால், எப்போதும் ஆன்ம உற்சாகத்தை தந்துகோண்டே இருக்கிறது.



குருநாதர் கொடுத்த ஞானம் இவ்வளவுதான். "இறைவா உன் பாதம் சேரும் மரணத்தை விரைந்து எனக்கு கொடு". படிப்பதற்கு சொற்பமாய் தோன்றும் இந்த ஒரு வரி என்னை ஒரு ஆழ்ந்த வேறு ஒரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றது. எனினும் 2015 இல்  இதை என் குடும்பத்தாரிடம் சொல்வதற்கும் கூட எனக்கு தயக்கமாக இருந்தது. ஏனெனில் இதை மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஏதோ ஒரு எதிர்மறை வாசகமாக உள்ளது. 2018 இல் "ஆன்மாவின் சுயசரிதம்" நூல் வெளிவந்தவுடன் எனக்கு இந்த ஞானத்தை வெளியே சொல்ல தைரியம் வந்தது. முதலில் என் மனைவியிடம் கூறினேன், ஆனால் அவள் இதை ஏற்கவே இல்லை, மேலும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக்  கூறினாள். எனினும் அதையும் மீறி எனது நெருங்கிய உற்றார் உறவினர்களிடம் இந்த ஞானத்தை சொல்லிப் பார்த்தேன். அனைவரும் என்னை திட்டினார்கள். ஏதோ செய்யக்கூடாத தவத்தை செய்து மனநிலை தவறிவிட்டது என்றும் சொன்னார்கள். யார் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்கள் புரியாமல் சொல்கிறார்கள். எப்படியாவது அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை கரை சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். பல கோணங்களில் இந்த ஞானத்தை விளக்கி, எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல், முதன்முதலாக இணையதளத்தில் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். இன்று வரை பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் யாருக்கும் இந்த ஞானம் பிடிக்கவும் இல்லை, புரியவும் இல்லை.


இந்த வேண்டுதலை அடியேன் நான் தினமும் வேண்டிக் கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து ஐந்தாண்டுகள் மனமுருகி முழு விருப்பத்தோடு வேண்டிய பிறகு எனக்கு ஒரு தனிப்பட்ட உணர்வுநிலை கிடைத்தது. இந்தக் குழுவில் அந்த விசயத்தை  முதன்முதலாக சொல்கிறேன். அடியேன் எனது வெளி மனத்திற்கும் ஆழ்மனத்திற்கும் உள்ள இடைவெளி நிறைய குறைவதை உணர்ந்தேன். நடந்து முடிந்ததற்கும், என்முன்னே நடக்கப் போவதற்குமான காரண காரியத்தை உள்ளுணர்வாக ஓரளவுக்கு சிறிது உணர முடிகிறது. இதற்கு மேல் சொல்ல எனக்கு அனுமதி இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து தனிப்பட்ட அனுபவம் 🙏🙏🙏


இந்த ஒரு வரி ஞானதை விளக்க  50க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதினேன் என்றால் நம்ப முடிகிறதா?


அகத்திய பக்தன்.

2 கருத்துகள்:

  1. அய்யா முழுமையாக விளக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஐயா, கீழ்கண்ட வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்திடுங்கள். முழுமையான விளக்கப்பதிவுகள் கிடைக்கும்.

      https://whatsapp.com/channel/0029VaAQiLa5Ui2eJ0q4UE3p

      நீக்கு