குமரனின் குழந்தைப் பாட்டு
வேலவன் வல்லமை பாருங்கள்,
மூளை நூலைக் கேளுங்கள் !
தேனும் திணையும் தந்தவனாம்,
நாளும் கோளும் சொன்னானே !
இரும்புச் சனிக்கு நிலமாகும்,
நிலத்தின் சுவையோ உப்பாமே !
தாமிர செவ்வாய் நீராகும்,
நீரின் சுவையோ புளிப்பாமே!
வெள்ளிச் சுக்கிர காற்றாகும்,
காற்றின் சுவையோ கசப்பாமே !
தங்கக் குருவாய் தீயாகும்,
தீயின் சுவையோ காரமாமே!
பாதரச புதனாய் ஆகாசம்,
ஆகாச சுவையோ இனிப்பாமே!
குருதி படைத்தவன் செவ்வாயாம்,
வெப்பநீர்மம் கொண்டவனே !
சுக்கிரபுதனும் வெள்ளணுவாய்,
காந்த ஆற்றல் கொண்டவரே !
சனிகுருவாம் சிவப்பணுவாய்,
வெப்ப ஆற்றல் கொண்டவரே !
சந்திரன் அமைத்திடும் நரம்பிழையாம்,
குருதி பரவிட எளிதாமே !
குமரன் சொல்லக் கேளுங்கள்,
குன்றத்தோனைப் பணியுங்கள் !
உரசி உரசி வந்தோரை
அணுக்கள் என்றே சொன்னாரே !
கலியால் வந்த அமிலத்தை,
வலிய வந்து ஏற்றாரே !
முருகன் பாதம் பற்றிடுக,
ஞானம் எல்லாம் பெற்றிடுக !
பாடலின் மூலநூல் : முருகப்பெருமான் அருளிய மூளை எனும் தலைமை சுரபி.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
நூலைப்பெற,
https://www.amazon.in/Muulai-Ennum-Thalamai-Surabi-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/dp/8194254337
http://enlightenedbeings.org/