செவ்வாய், 25 டிசம்பர், 2018

கலியுக காவியம் – அணு - பிரளய நோய் -> புற்றுநோய்


       கலியுக காவியம்அணு - பிரளய நோய் -> புற்றுநோய்



பலகாலமாக அகத்தீசரை வணங்கி வேண்டி கேட்ட கேள்விகளுக்கு, இப்போது அருளான பதில்களை அய்யா அருளிவிட்டார். ஒரு அற்புதமான நல்ல விஷயம் எனக்கு கிடைத்திருக்கிறது. காக்கை ருசியான உணவைக் கண்டவுடன் மற்ற காக்கைகளை கூவி அழைப்பதுபோல், அடியேன் நானும் உங்களிடம் உடனே பகிரவேண்டும் என இப்பதிவை எழுதுகிறேன். நம் உடல் மற்றும் உயிரை மேம்படுத்தி, அனைத்து செல்வங்களையும் பெற்று இறைவனோடும் சேர பல யோகஞான பயிற்சி பாடல்களை நம் சித்தர்கள் ஏற்கனவே பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

அடியேன் நானும் அதில் பல சித்த நூல்களை படித்து, சிறிது பயிற்சியும் செய்து பார்த்தேன். ஆனால் என்மனதில் பல கேள்விகள் இருந்தது. என்றோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் சித்தர்கள் எழுதிய இந்த நூல்களின் நுணுக்கங்கள் இன்றைய கலியுகத்திற்கு எவ்வாறு பொருந்தும் என்ற குழப்பம் இருந்தது. ஒருவிஷயம் மட்டும் உறுதியாக தோன்றியது. அகத்தீசர் நினைத்தால் இன்றைய கலியுகத்திலும் நமக்கு ஞானம் அருள முடியும் என்று.

     என்னை ஈன்ற அகத்தியமஹாமுனியே! என்குழப்பத்திற்கு விடை அருளுங்கள் என பல நாட்கள் வேண்டினேன். என்னைபோல் உலகெங்கும் பலர் அய்யாவிடம் வேண்டியிருப்பார்கள் என உணரமுடிகிறது. நம் அனைவரின் வேண்டுதலை அய்யா அருளோடு கண்டுகொண்டார். கடந்த மாதம் எதேச்சையாக "ஞானாலயம் - ஒளியைநோக்கிய பயணம்" என்ற இணையதளத்தை அய்யா எனக்கு காண்பித்தார். மேலும் ஆராய்கையில் "கலியுக காவியும் - பாகம்  ஒன்று" என்ற நூலை பற்றி அறிந்து, அதை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நூல் வால்மீகி முனிவர் உரைக்க எழுதியது என்று தெரிந்ததும் சிறிது சந்தேகம் வந்தது. ஆனால் நூலை படிக்க படிக்க என் சந்தேகமும் குழப்பமும் தீர்ந்தது.

    ஆரம்பத்தில் தவறாக எண்ணியதற்காக அகத்தியரிடம் மன்னிப்புகோரினேன். இந்நூலில் அணுவைப்பற்றியும், கலியுகத்தில் ஏற்படும் பிரளயம் என்பது புற்றுநோயே, இதிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது, மனித உடல் பாதரச தன்மை பெற்று ஒளியுடன் பெறுவது  என்ற பல அரிய தகவல்களை அருள்மிகு வால்மீகி முனிவர் உரைத்திருக்கிறார். இந்நூல் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியின் கேள்விக்கும் பதிலுரைக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.  இந்நூலின் பெருமையை அகத்தியரே சொன்னால் எப்படியிருக்கும் என்று நான் யோசிக்கையில், அகத்தியரின் ஞான பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. கீழே உங்களுக்காக ஒலிவடிவில் அதன் சிறுபகுதியை அகத்தியரை வணங்கி பகிர்ந்துள்ளேன். இந்த லிங்க்கை அழுத்தி கேட்டு மகிழுங்கள்.

   மொத்தம் 689 பக்கங்கள் கொண்ட இந்த அதிசய நூலி நீங்கள் சிறிதும் எதிர்பாராத அதிசய விஷயங்களை வால்மீகி முனிவர் அருளியுள்ளார் என்பதை நூலை முழுவதுமாக படிக்கும்போது உணர்வீர்கள். மேலும் இதுபோன்ற நூலை ஒரு கலியுக மனிதனால் நிச்சயம் வழங்கமுடியாது என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள். 
 

புண்ணியம் உள்ளோர் இந்நூலை தேடிக்கண்டு படித்து பயன்பெறுவார்கள். மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட இணையதள இணைப்புகளை பகிர்ந்துள்ளேன். பார்த்து பயன் பெறுங்கள்.



கலியுகத்தில் சித்தர்கள் அருளிய புத்தம் புதிய செய்திகள்.

நம் சித்தர்கள் 1000, 2000 வருடங்களுக்கு முன்னரே அருளிய பழைய வைத்திய சாஸ்திரம், யோக சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரம் இன்றைய கலியுக கடைசி காலகட்டத்திலும் வலிமையோடு பிரபலமாக உள்ளது. இந்த அற்புதமான பழமைவாய்ந்த சாஸ்திரங்களை மையப்படுத்தி இன்று பலரும் பல அருமையான சிந்தனைகளை தினமும் கருணையோடு பகிர்கிறார்கள். 

ஒருவேளை அதே பதிணெட்டு சித்தர்களும் முருக பெருமானும் இன்றைய கலியுக மானிடர்களுக்காக மீண்டும் இரங்கிவந்து அற்புத சாஸ்திரங்களை அருளினால் எப்படி இருக்கும் ? என்ன, இது சாத்தியமா ?   என தோன்றுகிறதா?

இது சாத்தியாமென்றால் மகிழ்வேன் என நினைப்போர்க்கு அந்த அற்புத செய்தியை அடியேன் வெளியிட விரும்புகிறேன். உங்களில் எத்தனைபேர்கள் இந்த கலியுகத்தில் லேட்டஸ்டாக சாஸ்திரங்களை அந்த பழைய சித்தர்களே வெளியிடவேண்டும் என விரும்புகிறீர்கள்? அப்படி வெளியிட்டால் படித்துப்பார்க்க விருப்பமா? 
உங்களில் எத்தனைபேர் இந்த பதிவை லைக் அல்லது கருத்திடுவீர்கள்?

அன்புடன்
அகத்திய பக்தன்.
ஓம் அகத்தீசாய நமஹ.